ஸுராஹ் அத்-தகாஸூர் வசனம் 5 - 8
பாகம் 2
10/5/15.
அஸ்ஸலாமு
அழைக்கும் அன்பு சகோதரிகளே.......
என்ன படித்தோம்
......
v கிராஆத் – சகோதரி தாஜ்.
v ஸுராஹ் தகாசுர் 1-4 revision
v ஸுராஹ் தகாசுர் வா / வா பொருள் + வா / வா
விளக்கம்- சகோதரி ரினோசா
v நபிகள் நாயகம் வரலாறு - சகோதரி யாஸ்மின் .
v கடன் , சோம்பல் , இயலாமையில் இருந்து பாதுகாப்பு
துஅஹ்
v அஸ்மா உல் ஹுஸ்னா – 91– 95
என்ன படித்தோம் ........
வசனம் 5 – மெய்யான அறிவை கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை
உங்களைப் பராக்காக்காது).
யகீன் – ஆணித்தரமாக நம்ப கூடிய விஷயம்.
-
தெரியும் , அறிந்தோம் என்பதை விட மேல்
-
தண்டனை உண்டு என்று தெரியும்
-
ஆழமான நம்பிக்கை.
-
இருக்கா , இல்லையா என்பதில் எள் அளவும் சந்தேகம் இருக்காது.
-
ஈமானை விட பலம் வாய்ந்தது எப்படி ?
ஒரு முஸ்லிம் ஈமான் இருக்காது , மூமீன் கூறிய
செயல் எதுவுமே இருக்காது , பேர் அளவில் மட்டும் முஸ்லிம் மாக இருப்பான் , ஆனால்
இறப்பு , தண்டனை பற்றி தெரியும்.
காபிர் , மூமீன் அனைவருக்கும் இருக்கும் யகீன் –
மௌத் – இறப்பு.
3 வகை யகீன் –
1.
இல்ம் அல் யகீன் – அறிவை கொண்டு நம்புவது ( தீ யை பார்க்காமல் புகையை வைத்து
நம்புவது , மழை , பனி )
2.
அய்ன் அல் யகீன் – பார்த்து நம்புவது ( தீ யை பார்த்து நம்புவது )
3.
ஹக் அல் யகீன் – உணர்வால் உணர்ந்து நம்புவது ( நெருப்பு , சூடு , புண் , வேதனை
)
இல்ம் அல் யகீன் – திருக் குர் ஆன் .....
அல்லாஹ் நமக்கு துனியாவில் இரண்டு யகீன் தந்து
இருக்கிறான் , இல்ம் அல் யகீன் , ஹக் அல் யகீன்.
காபிர்கள் கேட்பது – அய்ன் அல் யகீன் – பார்த்து
தான் நம்பிக்கை கொள்வோம்.
யகீன் – தப்பு செய்கிறோம் - தண்டனை உண்டு என்று
தெரியும்.அதில் இருந்து எப்படி விலகுவது என்பதற்கு உறுதியான அறிவு வேண்டும்
அதுதான் இல்ம் அல் யகீன் – திருக் குர்ஆன்.
·
அனைத்து மனிதனின் தன்மை – வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் , அப்படியே இறந்து
விட்டால் , தன் பெயராவது நிலைத்து இருக்க வேண்டும் என்று எண்ணுவான் , இது மனிதனின்
இயற்கை மனநிலை, அல்லாஹ் அப்படி படைத்து விட்டான் , இதை உண்மையாக்கும் விதமாக
அல்லாஹ் மறுமையை படைத்து அதில் நிரந்தர வாழ்வை நமக்கு அமைத்து இருக்கிறான், மௌத்
என்பது தற்காலிகமாக சந்திக்கக் கூடிய இடம் தான் , நிரந்தரம் அல்ல.
·
அந்த மறுமை என்ற நிரந்தர வாழ்வுக்கு தயார் செய்யும் இடம் தான் இந்த துனியா.
·
நல்லது செய்து சுவனம் செல்வதா , தீமை செய்து நகரம் செல்வதா என்பது இங்கு நாம்
செய்யும் செயலில் தான் உள்ளது.
வசனம் 6 – லத்தரவுன்ன – பார்த்த பார்வையிலேயே
உறைந்து போய் நிற்பது , கண்களில் அதிர்ச்சி , பயம்.
ஜஹீம் – சிங்கம் இறையின் மீது பாய்வது போல், ஜஹீம்
பாய்ந்து பிடிக்க வரும்.
அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் கொடுத்து
எச்சரிக்கை செய்கிறான்.
மூமீன் , காபிர் என்று உலகில் உள்ள அத்துணை
நபர்களும் நரகத்தை பார்த்தே ஆக வேண்டும்.
சுவனத்தை நோக்கி செல்லும் போதோ , நின்று பதில்
சொல்லும்போதோ....என்று அனைவரும் அதை பார்ப்போம்.நரகை தாண்டி செல்லும் போது லேசாகவாவது
பார்போம் ,பார்த்து அதில் இருந்து நம்மை பாதுக்காத்த ரப்புக்கு நன்றி சொல்வோம் என்று
கூறுகிறான் .. அல்லாஹ் நம்மை இந்த கூட்டத்தில் இணைப்பானாக.
வசனம் 7 –
மேலும் கண்ணால் பார்ப்பீர்கள் – இது கண்ணால்
பார்த்து தான் நம்பிக்கை கொள்வோம் என்றவர்களுக்கும் , முதல் வசனத்தில் அல்லாஹ்
குறிப்பிட்ட அத்தணை பேருக்கும் இது குறிக்கும் என்று அறிஞ்ர்கள் சொல்கிறார்கள்.மேலும்
கண்ணால் பார்க்கும் அதே சமயம் அவர்கள் அதனுல் இருப்பார்கள் என்ற கருத்தையும் இதில்
சொல்கிறான் என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வசனம் 8 – அழுத்தம் கொடுத்து , கோபத்தின் உச்சியில்
சொல்கிறான்.
உலகில் நமக்கு தந்த அத்தணை அருட்கொடைகளை பற்றி
முழுவதுமாக விசாரிக்கப்படுவீர்கள் என்று சொல்கிறான்.ஒவ்வொரு வரும் கட்டாயம் பதில்
சொல்லியே ஆக வேண்டும்.
இங்கு அருள்கள் என்று நாம் நினைக்கும்
அத்தனையும் மறுமையில் சோதனையாக இருக்கும்.அருள்களை தந்த இறைவனுக்கு அந்த அருள் மூலம்
என்ன செய்தோம் , எப்படி சம்பாதித்தோம் , எப்படி செலவு செய்தோம் , எப்படி நன்றி சொன்னோம், என்று அனைத்து
கேள்விகளுக்கும் அங்கு பதில் சொல்ல வேண்டும்.
அல்லாஹ்வின் அருள் வந்து கொண்டே இருப்பவர்கள் மட்டும்
அல்லாஹ்விற்கு விருப்பமானவர்கள் அல்ல , அல்லாஹ் தான் விரும்பியவர்களை சோதிப்பேன்
என்று தன் திருமறையில் சொல்கிறான்.
நயீம் – நிஹ்மத் – தொடர்ந்து இருந்து கொண்டே
இருப்பதையும் குறிக்கிறது , தண்ணீர் , நிழல், பார்வை , கால் ,காது , திறமை , திறன்,மேலும்.....
தொடர்ந்து சுகம் கிடைத்து கொண்டே இருக்கும் அருள் .......
நிறைய இருக்க நிறைய பதில் சொல்ல வேண்டும் ,
குறைவாக இருக்க குறைய பதில் சொன்னால் போதும்.
நாம் முஸ்லிம் மாக பிறந்ததும் , குர் ஆனும் ,
நபியும் மிக பெரிய அருள்.
செல்வமும் , அருளும் ஹராம் இல்லை.
அதன் மூலம் நாம் இறைவனை நெருங்கி செல்கிறோமா, அவன்
வழியில் செலவு செய்கிறோமா ,அவனை நினைவுப்படுத்தி கொண்டே இருக்கிறோமா, அதன் மூலம் மறுமைக்கு தயார்படுத்துகிறோமா என்று
எண்ணி பார்க்க வேண்டும்.
அல்லாஹ் இவ்வுலகில் தந்த அத்தனை
அருட்கொடைகளையும் இவ்வுலகில் விளைநிலங்களாக பயன் படுத்தி நாளை மறுமையில் சுவனம்
செல்ல முயற்சிக்க வேண்டும்,இன்ஷா அல்லாஹ்..
செல்வமும் , குழந்தைகளும் நம்மை இறை நினைவில்
இருந்து திசை மாற்றி , விட கூடாது..
அவர்களிடமும் இறைவன் மற்றி நினைவுப்படுத்தி
கொண்டே இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் அருள் , பரகத் , ரஹ்மத் ,
கிடைக்கும் போது அல்லாஹ்வை புகழும் அதே சமயம் அந்த அருளுக்கு பதில் சொல்ல வேண்டும்
என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.அடுத்து முதல் வசனத்தில் இறைவன் சொன்ன
தன்மைகளையும் நினைவில் வைத்து தவிர்க்க வேண்டும்.
ஹதீஸ் – 4143. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "ஒரு பகல்" அல்லது "ஓர் இரவு" (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு, "பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!" என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது" என்று கூறிவிட்டு, "எழுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.
அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், "வாழ்த்துகள்! வருக" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், "அவர் எங்கே?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், "எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்" என்று பதிலளித்தார்.
அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை" என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், "இதை உண்ணுங்கள்" என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்"என்று கூறினார்கள்.
அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "ஒரு பகல்" அல்லது "ஓர் இரவு" (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு, "பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!" என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது" என்று கூறிவிட்டு, "எழுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.
அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், "வாழ்த்துகள்! வருக" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், "அவர் எங்கே?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், "எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்" என்று பதிலளித்தார்.
அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை" என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், "இதை உண்ணுங்கள்" என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்"என்று கூறினார்கள்.
அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்" என்று கூறினார்கள்.
இனி நாம் என்ன செய்யலாம் ......
1. வா / வா
பொருள்.
2. யகீன் என்றால்
என்ன?
3. இல்ம் அல்
யகீன் என்றால் என்ன?
4. இல்ம் அல்
யகீன் எதில் இருந்து நம்மை பாதுகாக்கும்?
5. யகீன் வகைகள்
மற்றும் பொருள் எழுதுக .
6. யாரெல்லாம்
நரகத்தை பார்போம் என்று சொல்கிறான்.
7. நயீம் என்றால்
என்ன.
8. மிக பெரிய
நயீம் என்ன?
9. அல்லாஹ்வின்
அருள் , பரகத் கிடைக்கும் போது எதை நினைவில் கொள்ள வேண்டும்.
10. செல்வம்
ஹராமா?
ஜசாக் அல்லாஹு ஹைரன்
வஸ்ஸலாம் .
No comments:
Post a Comment