Sunday, May 3, 2015

வகுப்பு 15 - அத்தகாஸூர் 1-4

                                ஸுராஹ் அத்-தகாஸூர் வசனம் 1 - 4

பாகம் 1
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم 
              3/5/15.

அஸ்ஸலாமு அழைக்கும்  அன்பு சகோதரிகளே.......

என்ன படித்தோம் ......

v  கிராஆத் - சகோதரி ஷிபா .

v  ஸுராஹ் தகாசுர் சிறு குறிப்பு

v  ஸுராஹ் தகாசுர் வா / வா பொருள் + வா / வா விளக்கம்-  சகோதரி ரினோசா

v  நபிகள் நாயகம் வரலாறு - சகோதரி யாஸ்மின் .

v  மூஸா நபி கேட்ட துஆ

v  அஸ்மா உல் ஹுஸ்னா – 869௦

என்ன படித்தோம் ........

மக்கி ஸுராஹ் , 8 வசனங்களை கொண்ட ஸுராஹ்.


வசனம் – 1

(1)செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கிவிட்டது

அல் ஹாக்கு – லஹ்வ்வு-

ü  பொழுது போக்கு , கேளிக்கை.

ü  ஒரு விஷயம் முக்கியம் என்று கருதி , அதி முக்கியமான விஷயத்தை விட்டுவிடுதல்.

ü  எதை நாம் முதலில் செய்ய வேண்டுமோ அதில் இருந்து நம்மை திசை மாற்றி – அந்த வேலையில் முழ்கடிப்பது.

அல் ஹாக்கு – ஏதோ ஒரு விஷயம் முக்கியம் என்று நாமே கருதி , அதனுல் உணர்வே இல்லாமல் இருப்பது.

தகாசுர் – கவ்சர் – அதிகம் , பெருக்குவது , எண்ணற்ற .....

§  அதிகம் வேண்டும் என்று ஆசை கொள்வது.(அதிக பணம் , மனை , வாகனம்)

§  அதிகம் பெறுக்குவதில் அடுத்தவரை முந்தி கொள்ள போட்டி போடுவது. ( வேலை , பொருள் , விளையாட்டு பொருள் , அலுவலக நாற்காலி , அற்பபொருள்கள் .... )

§  கிடைத்த பின் பெருமையடிப்பது.மற்றவர்களுக்கு முன் தனக்கு மட்டும் கிடைத்து விட்டது என்று பேசுவது – இது தபாகூர் –thafaakur – தகாசுர் என்ற சொல்லில் இருந்து வரும் பொருள் .

§  அனைத்தும் கிடைத்த பிறகு இன்னும் அதிகம் அதிகம் வேண்டும் என்று தேடுவது , ஒருவரை முடித்து மற்றவர் என்று போட்டி தொடர்வது , பல பேரை ஒப்பிட்டு அதிகம் பெற நினைப்பது. ( நகைசுவை உதாரணம் – கரண்ட் கட் , அக்கம் , பக்கம் வீடு )

இதில் இருந்து அல்லாஹ் சொல்லும் எளிய பாடம் – நமக்கு ஏற்றார் போல் வாழ்வது நிம்மதி தரும் .... கடனில் இருந்து நம்மை காக்கும்,

ஒரு ஒரு மனிதனுக்கும் ஒரு ஒரு டேஸ்ட், ரசனை , தனிதன்மை இருக்கும் , ஆனால் உலகில் மொத்த மனித குலத்துக்கும் ஒரே ஒற்றுமை ‘ எப்போதும் அதிகம் வேண்டும் என்ற எதிர்ப்பார்ப் பிலேயே வாழ்வது. இந்த எண்ணம் மட்டும் தான் ஒற்றுமையாக இருக்கிறது. அனைவருக்கும் பணம் , பொருள் மீது ஆசை.

அந்த அந்த கால மக்களுக்கு பொருந்தும் வகையாக இறைவன் குறிப்பிடுகிறான். அளவில் வித்தியாசப்படலாம் , அவர் அவர் தகுதிக்கு ஆசைப்பட்டு கொண்டே இருக்கிறோம்.

ஹதீஸ் :-  இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஆதத்தின் மகனுக்கு ஓர் ஓடை நிறைய தங்கம் கிடைத்தால் இரண்டு ஓடைகள் நிறைய தங்கம் வேண்டும் என்று விரும்புகிறான். அவனது வாயை மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பப் போவதில்லை! எவர் பாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான் ” (நூல்: புகாரி, முஸ்லிம்)

அதிக அளவு தேடுவதில் எந்த அளவு மூழ்கி இருக்கிறோம் என்றால் இது தான் நிரந்தர வாழ்வு , துனியா தான் எப்போதும் நிரந்தரம் என்று மறுமையையும் , இறை நினைவில் , இறை சிந்தனையில் இருந்து மறந்து மூழ்கி கிடக்கின்றோம். ( அல் அஸ்ர் ஸுராஹ் தொடர்பு )

***** சிறிய உதாரணம் – ஆனால் முக்கியமான விஷயம் – பாங்கு முடிந்த பின் துஆ-அதற்கான நன்மை – அதில் நாம் அலட்சியம் – அந்த துஆ வின் நன்மை - இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாங்கு துஆவை ஓதுகிறவருக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கிடைத்து விடுகிறது' புஹாரி – 614****** இந்த சமயத்தில் சில நேரங்களில் இதை விட்டு விட்டு வேறு ஒன்றை முக்கியம் என்று கருதி அதில் லயித்து விடுகிறோம் .. அல்லாஹ் நம்மை பாதுகாத்து இந்த பலனை தருவானாக....

இந்த வசனத்தில் தகாசுர் – அதிகமாக தேடுவது –

Ø  எந்த பொருளை அதிகமாக தேடுவது என்று ரப் சொல்லவில்லை

Ø  எந்த மக்கள் தேடுவார்கள் என்று சொல்லவில்லை

Ø  எந்த முக்கியமான விஷயம் என்றும் சொல்லவில்லை.

ஏன் ????

Ø  பரந்து விரிந்த கருத்தை தருகிறது

Ø  எந்த BORDER போடவில்லை

Ø  நீங்களே கண்டுப்பிடித்து கொள்ளுங்கள் , ஆசைக்கு அளவே இல்லை

Ø  அனைவரும் உங்களை நீங்களே உரசி பார்த்து திருந்துங்கள் என்றும் பொருள் அடங்குகிறது.

அதிகம் தேடுவது என்பது .....

o   எல்லா வசதிகள்

o   பிள்ளைகள்

o   இன்பமான பொழுதுபோக்கு விசயங்கள்

o   ஆட்சி – பதவி

o   படிப்பு

o   பொன் – பொருள்

o   அற்பபொருள் ..... மேலும் மேலும் மேலும் .......... வரையறை போடவில்லை

இதில் பயனற்ற உலக கல்வியும் அடங்கும் என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். அதிகமாக கற்பதில் தவறு இல்லை ஆனால் அதே சமயம் அது இம்மைக்கும் , மறுமைக்கும் உதவாமல் இருக்குமேயானால் அதுவும் தகாசுர் இல் அடங்கும். அடுத்தவர் பார்த்து படிக்க வைப்பது, அடுத்தவருடன் போட்டி போட்டு  கொண்டு படிப்பது.... இவை அனைத்தும் உலக கல்விக்கு மட்டுமே ....

அதே சமயம் மார்க்க கல்வி , அமல்கள் , நல்ல வழியில் செலவு செய்வதில்  மற்றவரை பார்த்து  பொறமை பட்டு நம் அமல்களை அதிகரிப்பது ஆரோக்கியமானதே .....

ஹதீஸ் - கல்வியிலும் ஞானத்திலும் தாமும் பிறர் போல் சிறந்து விளங்க வேண்டுமென்று ஆர்வம் காட்டுவது. உமர் (ரலி) அவர்கள், நீங்கள் தலைவர்களாவதற்கு முன்னர் இஸ்லாமியச் சட்ட ஞானங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்! என்று கூறினார்கள். அபூஅப்தில்லாஹ் (முஹம்மத் பின் இஸ்மாயீல் புகாரியாகிய நான்) கூறுகின்றேன்: நீங்கள் தலைவர்களாக ஆன பிறகும் (மார்க்க சட்ட விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்). (ஏனெனில்,) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் தங்களது முதிய வயதில்கூடக் கல்வி கற்றுள்ளனர்.
73. '
ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

ஆனால் சொற்பமானவர்களே மறுமைக்காக உழைப்பவர்களாக இருகிறார்கள் , அல்லாஹ் நம்மையும் அதில் இணைப்பானாக ....

அதிகம் தேடுவதில் கவனம் செலுத்தி , இறுதி நாள் , இறப்பு , மறுமை யை மறந்து கடமையை தவறவிடுகிறோம் ...

-    இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமை

-    மறுமைக்கு நம்மை தயார் செய்ய வேண்டிய கடமை

வசனம் 2 – (2) நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை

இதே சிந்தனையில் முழ்கி கிடக்கிறோம் மண்ணறைகளை சந்திக்கும் வரை.

சுர்த்தும் – زُرْتُمُ

ஜியாரத் – என்னும் சொல்லில் இருந்து வந்தது – சந்திப்பது , போய் பார்ப்பது , தற்காலிகமாக தங்கி இருக்கும் இடம், VISITING பண்ணுவது போல் ....

மறுமைக்கு முன் இருக்கும் ஒரு இடம். அதை சந்தித்து விட்டு தான் மறுமைக்கு போவோம்.அங்கு தான் சிந்திப்போம்,வெறும் கையோடு நிற்பது பற்றி , நாம் செய்த தவறுகள் பற்றி , சம்பாதித்தது பற்றி , சேர்த்தது பற்றி , நேரம் , பணம் செலவு செய்தது பற்றி ... ஆனால் அங்கு சிந்தித்து பயன் இல்லை , நேரம் முடிந்தது .... மனிதன் இறந்த பின் அவன் செய்த நல்ல அமல்கள் மட்டுமே அவனுடன் பின் தொடரும்.

வசனம் 3 - (3) அவ்வாறில்லைவிரைவில் நீங்கள்அறிந்துகொள்வீர்கள்

வெகு விரைவில் புரிந்து விடும் , என்ன புரிந்து விடும் ? பணம் , புகழ் , சொத்து எல்லாமே தற்காலிகமே, இனி தான் நிரந்தர வாழ்வில் நுழைய போகிறோம் என்று ......

அலி பின் அபி தாலிப் ரலி கூறியது – மக்கள் உறங்கி கொண்டு இருகிறார்கள் , இறந்த பின் விழிக்கிறார்கள் .

இறந்த பின் தான் நன்மை , தீமை . நேரத்தின் அருள் பற்றி புரிகிறது.

வசனம் 4 - (4)பின்னர் அவ்வாறல்லவிரைவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 

சும்ம – அழுத்தத்துக்கு மேல் அழுத்தம் ..,

வசனம் 3 , வசனம் 4 இரண்டு முறை சொல்ல காரணம் .....

*      3 ரில் மண்ணறையையும் 4 கில் கியாமத் நாளில் எழுப்பும்போது புரிவதை குறிக்கிறது

*      2 தடவை சொல்வது நாம் இங்கேயே விழித்து கொள்ள சொல்வது

*      கடுமையாக எச்சரிக்கை செய்யும் விதமாக இருக்கிறது

*      அவசர சுழல் , குறிக்கிறது , நேரமின்மை , அவசரத்தில் இருக்கிறோம் , ( அல் அஸ்ர் தொடர்பு ) தீ , நிலநடுக்கம் , மழை , ( இரண்டு முறை அழைத்து சீக்கிரம் ,சீக்கிரம்/ஓடு ,ஓடு என்று  பதட்டப்பட்டு வெளியேறுவோம் , வெளியேற சொல்வோம் )

இதை வாசிக்கும் போது , குர் ஆன் சொல் வடிவில் இறங்கியதையும் , அல்லாஹ் வார்த்தைகளால் இதில் பேசுகிறான் என்பதையும் நினைவில் வைத்து , மேல் உள்ள வசனத்தை வாசிக்க வேண்டும் .... அதில் அவன் சொல்ல வரும் அழுத்தத்தை சிந்திக்க வேண்டும் ....

வசனம் 5 - இன்ஷா அல்லாஹ் தொடரும் ......

இனி நாம் என்ன செய்யலாம் ............

1.       லஹ்வ்வு என்றால் என்ன

2.       அல்ஹாக்கு பொருள் தருக

3.       தகாசுர் சுருக்கமாக எழுதுக

4.       எதை நாம் அதிகமாக தேடுவதாக ரப் இந்த ஸுராஹ் வில் குறிப்பிட்டு இருக்கிறான்

5.       சுர்தும் விளக்குக

6.       வசனம் 3 , 4 … ஒரே பொருள் இரு முறை வர காரணம்

7.       எந்த விசயங்களில் பொறாமை கொள்ளலாம்

8.       பாங்கு துஆ நன்மை என்ன

ஜசாக் அல்லாஹு ஹைரன் .... இன்ஷா அல்லாஹ் தொடரும் ............

No comments:

Post a Comment