ஸுராஹ் அல் காரிஆ வசனம் 1 - 11
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
17/5/15.
அஸ்ஸலாமு
அழைக்கும் அன்பு சகோதரிகளே.......
என்ன படித்தோம்
......
v கிராஆத் - சகோதரி பரீனா .
v ஸுராஹ் காரிஆ சிறு குறிப்பு
v ஸுராஹ் காரிஆ வா / வா பொருள் + வா / வா
விளக்கம்- சகோதரி ரினோசா
v ஹப்ஸா நாயகி வரலாறு - சகோதரி கதிஜா யாஸ்மின் .
v கடன் சுமையில் இருந்து பாதுகாப்பு துஆ
v அஸ்மா உல் ஹுஸ்னா
என்ன படித்தோம் ........
மக்கீ – 11 வசனங்கள்
கியாமத் நாள் மற்றும் மறுமை வாழ்வை விவரிக்கும் -
ஸுராஹ்.
வசனம் 1 - அல் காரிஆ – கடுமையாக குலுக்குவது ,
தட்டுவது. இரண்டு பொருள் வேகமாக ஒன்றோடு ஒன்று ஓங்கி அடித்தால் ஏற்படும் பெருத்த சத்தம்
, பாதிப்பு , பயங்கர விபத்து போன்றது.
மிக பெரிய ஆபத்து , முழு நிம்மதியையும் கலைக்க
கூடியது.
எதிர்ப்பார்க்காமல் வரும் நள்ளிரவு விருந்தாளி –
நடு இரவு – ஆழ்ந்த தூக்கம் – கதவை ஓங்கி சத்தமாக தட்டும் நிகழ்வு – திடுக்கிட்டு
விழிப்பு – அலை மோதி திணறுவது – யார் ,என்ன , சூழ்நிலை தெரியாமல் குழப்பம் , பயம் ,
பீதி . நெஞ்சு பதற்றம் .இது போன்றது தான் அல் காரிஆ.
உலகில் அனைத்து பொருளுமே ஒன்றோடு ஒன்று முட்டி
மோதி விழுந்து நொறுங்குவது.நட்சத்திரம், நிலவு, சூரியன், மிருகங்கள், கடல், காடு,
மக்கள், இறந்தவர் , உயிரோடு இருப்பவர் என்று
அனைவரும் தட்டழிந்து அலைவது.உலகம் தோன்றியது முதல் உள்ள அனைத்து
பொருள்களும் இடிந்து விழுவது.
வசனம் 2 – 3 – நம் கவனத்தை முழுவதுமாக ஈர்த்து,
என்ன, என்ற எதிர்ப்பார்ப்பை ,ஆர்வத்தை முழுவதுமாக கொண்டு வர.
இதற்க்கு பதில் அல்லாஹ் ஒருவனுக்கே தெரியும்,
அவன் மட்டும் தான் சொல்ல முடியும்.
வசனம் 4 – நாஸ் – அனைத்து மக்கள் – எல்லோர் உணர்வுகளும்
ஒரே மாதிரி இருக்கும். ஈசல், வண்டு போல் சிதறடித்து அலைவார்கள்.
ஈசல் உடன் ஒப்பிட காரணம் – வெளிச்சத்தை நோக்கி
முட்டி , மோதி அலை பாய்ந்து செல்லும் .திசை
தெரியாமல் திக்கு முக்காடி அலை பாயும் .வெளிச்சத்தை நோக்கியும் செல்லாது . ஒரே
திசையில் செல்லாது. எண்ணில் அடங்கா ஈசல்கள் இருக்கும், அடுத்து ஈசல்கள் போல் கனமற்று , WEIGHT இல்லாமல் திரிவோம் என்பதையும் குறிக்கிறது.
இதே போல் தான் மனிதனும் அலைவான் , ஒழுங்காக பூமியில்
இருந்த அனைவரும் இந்த ஒரு நிகழ்ச்சியில் ASSEMBLY கலைந்து பரவுவது போல் ... சிதறி போவோம். எண்ணில்
அடங்கா மக்கள் அலைவோம், அதை போலவே பல திசைகளில் முட்டி மோதி செல்வோம். அதிர்ச்சி,
பயம், குழப்பம் என்று அடைக்கலம் தேடி, பாதுகாப்பு தேடி அலைவோம் .
கணவர், பிள்ளைகள், பெற்றோர், சகோதரர் என்று
யாரையும் பார்க்க மாட்டோம். நம்மை பற்றி மட்டுமே சிந்திப்போம். என் நப்ஸ் , என்
நப்ஸ் என்று மட்டுமே பதறும் , ஆதம் நபி முதல் அனைவரும் அனைத்து மக்களும் நிற்போம்
ஆனால் தனித்து அலைவோம். பல திசைகளில்
சுற்றினாலும் கடைசியில் இரண்டு திசையில் பிரிந்து நிற்போம் --- 1- வெற்றியாளர் 2-
தோல்வியாளர்.
வசனம் 5 – சாயம் ஏற்றப்பட்ட பஞ்சி , கம்பளி ,
நூல்.
மொத்த பஞ்சி கணம் வாய்ந்தது , இது அதை விட
லேசானது ...
பஞ்சி , கம்பளியை இதழ் இதழாக பிரித்து பறப்பது. கனமற்று
, மயிர் போல் மெலிதாக பறப்பது .. பல இடங்களில், நாடுகளில் பல நிறங்களில் உள்ள
மலைகள் ஒன்றாக பஞ்சை போல் பறப்பது.
அதிக கணம் வாய்ந்த மலைகள், கணம் இல்லாமல் சிதறி பறப்பது.உறசி
கொண்டே பறப்பது.
பூமிக்கு மேல் உள்ளது போல், பூமிக்கு அடியிலும் மலைகள்
போல் அதே SIZE இல் இருக்கும் , மலைகளை நட்டு வைத்து இருப்பதாக ரப் சொல்கிறான் .... (PAPER WEIGHT )
இதை இடித்து எடுக்க எடுக்க நில நடுக்கம் , பூமி
வழு இழந்து அதிர்வது நடைபெறுகிறது. ரப் உடைய நாட்டம் ...( விஞ்ஞாணிகள் சொல்லும்
கருத்து )
இது வரை கியாமத் நாளை பற்றி பேசிய ரப் இனி
மறுமையை குறித்து நம்மை எச்சரிக்கிறான்.
வசனம் – 6 - எனவே,(அந்நாளில்)எவருடைய (நன்மையின்) நிறை, எடை கனத்ததோ…
மனிதனும் , பலம் வாய்ந்த மலைகளும் WEIGHT டாக இருந்ததை ரப் மிக லேசாக பலம் இல்லாமல் சிதறி விடும்
என்கிறான்.
நாம் கனமாக கருதாத நம் அமல்கள் தான் கணம்
வாய்ந்ததாக இருக்கும் என்று சொல்கிறான்.
அல்லாஹ் பார்வையில் நல்ல அமல்கள் மட்டுமே கணம்
வாய்ந்தது , அதற்கு நிகர் , தகுதி இல்லை. நன்மைக்கு சரி சமமாக தீமையை வைக்க
முடியாது என்று இங்கு நன்மை எடையை மட்டுமே சொல்கிறான்.
நல்ல அமல்கள் என்பது அவன் பார்வையில் வலுவானதாக
இருக்க வேண்டும். அவனுக்கு ஒப்பான அமலாக இருக்க வேண்டும். நல்ல எண்ணம் கொண்டு
மனதார செய்வது.
நல்ல அமல் என்று நாம் நினைப்போம் , ஆனால் அது
கணம் வாய்ந்ததாக இருக்காது.ஏன் ! நிய்யாஹ் சரியான முறையில் இருந்து இருக்காது, அல்லாஹ்வை
மறந்து மக்களுக்காக , பெயருக்காக செய்து இருப்போம் . அடுத்து குர் ஆன் , சுன்னா
வழியில் இருந்து இருக்காது.
அல்லாஹ் ஏற்று கொள்ளும் அளவுக்கு நல்ல அமல்கள் எப்படி
இருக்க வேண்டும்? ....
1.
இக்லாஸ் , உள்ளத்தூய்மை யோடு , அல்லாஹ்வின் சந்தோசத்தை மட்டுமே எண்ணி , அவன்
திருப்புதிக்காக மட்டுமே செய்ய வேண்டும்.
2.
அல்லாஹ் நமக்கு கட்டளை இட்ட மாதிரி , நபி சொல்லி தந்த வழியில் நமது அமல்கள்
இருக்க வேண்டும்.
காபிர் களின் எடை தட்டு - சத்தியத்தை ஏற்காததால்
என்ன தான் நல்ல அமல் இருந்தாலும் அது கணக்காது.
மூமீன் எடை தட்டு – இறை நம்பிக்கை கொண்டவர்களின்
தட்டில் நம்பிக்கையின் கணமும் இருக்கும் , நல்ல அமல்களின் கணமும் இருக்கும் .அளவை
விட தரம் தான் முக்கியம்.
QUANTITY Vs QUALITY .
எதுவெல்லாம் எடை போடப்படும் ?
நம் அமல்கள் , மற்றும் மனிதனின் மதிப்பு – இது
குறித்த ஹதீஸ் –
4729. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். 'மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்' எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். 'மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்' எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு மசூத் ரலியல்லாஹு அன்ஹு
குறித்த ஹதீஸ் – கால்கள் சிறியது – மக்கள் நகைப்பு – நபியின் பதில் – மறுமையில்
இவர்களின் கால்கள் உஹத் மலையை விட வாய்ந்ததாக இருக்கும் . ( ஈமான் / உறுதி )
அல்லாஹ்விற்கு விருப்பமான செயல்களில் ஒன்று -
சிறிய அமலாக இருந்தாலும் தொடர்ந்து செய்யும் அமல்.
43. 'என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்குகிபோது நபி(ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். 'யார் இந்தப் பெண்மணி?' என்று கூறிவிட்டு அவள்
(அதிகமாக) தொழுவது பற்றிப் புகழ்ந்து கூறினேன். அப்போது நபி(ஸல்) 'போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை!
மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்' என்று கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 2
7563. '(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை; நாவுக்கு எளிதானவை; நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:)
1. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்).
2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 97
Book : 2
7563. '(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை; நாவுக்கு எளிதானவை; நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:)
1. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்).
2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 97
வசனம் – 7 அவர் திருப்தி
பொருந்திய வாழ்வில் இருப்பார்
ஒரு சிறு துன்பமும், துயரமும், இல்லாத சுகமான வாழ்வு , ஒரு ஒரு நொடியையும் ,
ஒரு ஒரு பொருளையும் சந்தோசமாக அனுபவித்து வாழ்வார்கள். ( BUFFET உணவு )
வசனம் – 8 ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ
வசனம் 9 - அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.
ஹாவியாஹ் - செங்குத்தான பள்ளத்தாக்கு, முடிவே இல்லாத பள்ளத்தாக்கு , அதன் ஆழம்
இறைவனுக்கு மட்டுமே தெரியும்.( கழுகு – இறை – கிழே வருவது ) இவ்வாறே மனிதன் அதில்
விழுவான்.
هُ فَأُمُّ
உம்மு – தாய்க்கு ஒப்பிட்டு சொல்கிறான் – தாய் மடியில் கிடப்பது போல் அதில்
என்றென்றும் இருப்பான் , தாய் அரவணைப்பது போல் அந்த நரகம் அரவணைக்கும். அதில்
இருந்து வெளியே வர முடியாது .
வசனம் 10
இன்னும் (‘ஹாவியா‘) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
பயம் மற்றும் அதன் விகாரத்தை
காட்டுகிறது .
வசனம் 11 – அது சுட்டெரிக்கும் நரகமாகும்
நரகம் ஏற்கனவே சூடு , இன்னும் சுட்டெரிக்கும் நரகம் என்று அல்லாஹ் நம்மை
கடுமையாக எச்சரிக்கிறான்.
3265. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே" என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்" என்றார்கள்.
Book : 59
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே" என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்" என்றார்கள்.
Book : 59
அல்லாஹ் நம் அனைவரையும் இதில் இருந்து பாதுகாப்பானாக....
இனி தான் என்ன செய்யலாம் ..... HOME WORK …..
1.
வார்த்தைக்கு வார்த்தை WHATAPP
2.
அல் காரிஆ சுருக்கமாக விளக்குக
3.
அல் காரிஆ பின் மக்கள் எப்படி ஆவார்கள் என்று ரப் கூருகிறான்
4.
மனிதனை ஏன் பராஸ் الْفَرَاشِ ஓடு ஒப்பிடுகிறான்.
5.
மலைகள் எப்படி ஆகும் என்று ரப் சொல்கிறான்
6.
நல்ல அமல்கள் எப்படி இருக்க வேண்டும்
7.
அல்லாஹ்விற்கு விருப்பமான செயல்களில் ஒன்று
8.
நன்மை தராசை கனக்க செய்யும் 2 வாக்கியங்கள் என்ன
9.
யார் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்
10.
ஹாவியா விவரிக்கவும் , அங்கு யார் தங்குவார்.
ஜசாக் அல்லாஹு ஹைரன்
வஸ்ஸலாம் .
No comments:
Post a Comment