Saturday, March 28, 2015

சீராஹ் கேள்விகள்



بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

சீராஹ் கேள்விகள் :

நீல நிற கேள்விகளுக்கு  பதில்களை பார்த்து எழுதலாம் .

1.   நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது ?

2.   நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன?

3.   நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன?

4.   நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்?

5.   நபி (ஸல்) அவர்களின் தாயார் எப்போது இறந்தார்கள்?

Sunday, March 22, 2015

சீராஹ் வகுப்பு - 7


பகிரங்க அழைப்பு

சகோதரத்துவம் பேணுதல், உதவி ஒத்தாசை புரிதல் போன்ற நற்பண்புகளுடன் தூதுத்துவத்தைச் சுமந்து அதை எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்ற முஸ்லிம்களின் ஒரு கூட்டம் தயாரானபோது இஸ்லாமிய அழைப்பை பகிரங்கப்படுத்தி, தீமையை நன்மையால் எதிர்கொள்ள வேண்டுமென்று நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக முதலாவதாக,
''நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்.'' (அல்குர்ஆன் 26:214)
என்ற வசனம் அருளப்பட்டது. இத்திருவசனத்தின் முன்தொடல் நபி மூஸா (அலை) அவர்களுக்கு இறைத்தூது கிடைத்ததிலிருந்து இஸ்ரவேலர்களுடன் அவர்கள் ஹிஜ்ரா செய்தது வரையிலான நிகழ்வுகளும், ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தாரிடமிருந்து இஸ்ரவேலர் களுக்குக் கிடைத்த வெற்றியும், ஃபிர்அவ்ன் தனது கூட்டத்தாருடன் மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்களும் விவரிக்கப்படுகிறது. மேலும், ஃபிர்அவ்னை ஏகத்துவத்தின் பக்கம் அழைத்தபோது நபி மூஸா (அலை) கடந்து சென்ற அனைத்து நிலைமைகளும் விவரமாகக் கூறப்பட்டன.

Monday, March 16, 2015

வகுப்பு 11 - ஸுராஹ் குறைஷி

 
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

 11/3/15.

அஸ்ஸலாமு அழைக்கும்  அன்பு சகோதரிகளே.......

என்ன படித்தோம் ......

v  ஸுராஹ் அஸ்ர் கிராஆத் - சகோதரி ஷிபா .

v  ஸுராஹ் குறைஷ்  சிறு குறிப்பு

v  ஸுராஹ் குறைஷ்  வா / வா பொருள் + வா / வா விளக்கம்-  சகோதரி ரினோசா

v  ஸுராஹ் குறைஷ் தப்சீர் – சகோதரி கதிஜா ஜாஸ்மின் .   . 

v  நபிகள் நாயகம் வரலாறு பகிரங்க அழைப்பு -சகோதரி யாஸ்மின் .

v  துஆஹ் மனனம் – ரியா வில் இருந்து பாதுகாப்பு  - துஆஹ்

v  அஸ்மா உல் ஹுஸ்னா – 66 – 70

மக்காவில் இறக்கப்பட்டது , ஸுராஹ் தீன் பின் இறங்கியது , 4 வசனங்களை கொண்டது .

Sunday, March 8, 2015

சீராஹ் வகுப்பு - 6

முதல் கால கட்டம் - அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல்


•இரகசிய அழைப்பு - மூன்று ஆண்டுகள்

•முந்தியவர்கள்!

•தொழுகை



இரகசிய அழைப்பு - மூன்று ஆண்டுகள்
'சூரா' முத்தஸ்ஸின் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டதும் ஏகத்துவ அழைப்புக்கு நபி (ஸல்) அவர்கள் தயாரானார்கள். அக்கால மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். தங்களது முன்னோர்களை சிலை வணங்கிகளாகக் கண்டார்கள் என்பதைத் தவிர சிலை வணக்கத்திற்காக வேறெந்த ஆதாரமும் அவர்களிடமில்லை. பிடிவாதமும் அகம்பாவமும் அவர்களது இயல்பாக இருந்தன. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வாள் முனைதான் என்றும், அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமைக்கு தாங்களே மிகத் தகுதியுடையோர் என்றும் நம்பியிருந்தனர். அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமையிடமான மக்காவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதை அப்படியே பாதுகாப்பது தங்களது பொறுப்பெனக் கருதினர். இப்பொழுது அவர்களது உணர்வில் ஊறிக் கிடந்த கொள்கைகளைத் தகர்க்கும் முயற்சியை திடீரென செய்தால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, அழைப்புப் பணியை இரகசியமாகத் தொடங்குவதுதான் விவேகமான செயலாக இருந்தது.

Tuesday, March 3, 2015

தேர்வு 3.


أعوذُ بِٱللَّهِ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

 

رَّبِّ زِدۡنِي عِلۡمٗا

பரிட்சை – 3                                                                                                        TOTAL – 100 MARKS

4 / 3 / 15.                                                                                                                  TIMING – 2 HRS.

 

l . கோடிட்ட இடங்களை நிரப்புக.  (1 ½ X10=15)

1.      ஹிந்தாவின் கணவர் பெயர் ________________

2.      அழகின் அன்னைஎன்று அழைக்கப்பட்டவர் யார்  ___________

3.      பிலால் ரலியை அடிமையாக வைத்து இருந்தவர் __________

4.      பதஹ் மக்காஹ்வின் பின் 700 பேர் __________ நாட்டில் இருந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர்.

Monday, March 2, 2015

துஆ– 13

ஆபத்தில் / விபத்தில் - இருந்து பாதுகாப்பு துஆ ...

بِسْمِ الله الَّذِيْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي اْلأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ளி வலா ஃபிஸ்ஸமாயி வஹுவஸ் ஸமீஉல் அலீம்

(பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (பாதுகாப்புக் கோருகிறேன்). அவனது பெயருடன் பூமியிலும் வானத்திலும் எந்தப் பொருளும் இடையூறு அளிக்க முடியாது. அவன் செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான்.

என்று ஒருவர் ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் மூன்று முறை சொல்வாரானால் அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:உஸ்மான் பின் அஃப்பான் (ர-),

 நூல்கள் : அபூதாவூத் 4425, திர்மிதி 3310