بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
11/3/15.
அஸ்ஸலாமு
அழைக்கும் அன்பு சகோதரிகளே.......
என்ன படித்தோம்
......
v ஸுராஹ் அஸ்ர் கிராஆத் - சகோதரி ஷிபா .
v ஸுராஹ் குறைஷ்
சிறு குறிப்பு
v ஸுராஹ் குறைஷ் வா / வா பொருள் + வா / வா விளக்கம்- சகோதரி ரினோசா
v ஸுராஹ் குறைஷ் தப்சீர் – சகோதரி கதிஜா ஜாஸ்மின் . .
v நபிகள் நாயகம் வரலாறு பகிரங்க அழைப்பு -சகோதரி யாஸ்மின்
.
v துஆஹ் மனனம் – ரியா வில் இருந்து பாதுகாப்பு - துஆஹ்
v அஸ்மா உல் ஹுஸ்னா – 66 – 70
மக்காவில் இறக்கப்பட்டது , ஸுராஹ் தீன் பின்
இறங்கியது , 4 வசனங்களை கொண்டது .
சிறிய வரலாற்று பிண்ணனி ........
குறைஷி குலம், நபிகள் நாயகத்தின் முப்பாட்டனாரில்
ஒருவரான குசைய்யி
பின் கிலாப் அவர்கள் காலம் வரை ஹிஜாஸ் பிரதேசத்தில் சிதறி இருந்தது . குசைய் அவர்கள் அனைவரையும்
மக்காஹ் நகரில் ஒன்று கூட்டினார்கள் மேலும் இறை இல்லத்தின் நிர்வாக பொறுப்பும் இந்த
குலத்தின் கையில் வந்து விட்டது .குசைய் அவர்களுக்கு பிறகு அவரது மகன்கள் அப்து
மனாப் , அப்துத்தார் ஆகிய இருவரும் கவனித்து வந்தார்கள்.அப்து மனாப் அவர்களுக்கு நான்கு மகன்கள்
அவர்கள் ஹாஷிம் ,
அப்து ஷம்ஸ் , முத்தலிப்
, நவ்பல்.இதில் ஹாஷிம் அவர்களுக்கு ஒரு எண்ணம் உதித்தது , அது சிரியா , எகிப்து
மற்ற நாடுகளுக்கு இடையே நடைபெறும் சர்வதேச வர்த்தகத்தில் தாமும் பங்கு பெற
வேண்டும் , அரபு மக்களின் தேவை பொருள்களை வாங்கி வர வேண்டும் , வியாபாரம் , வணிகம் செய்ய வேண்டும் என்று எண்ணி ,
அல்லாஹ்வின் உதவியால் பெரும் வளர்ச்சி அடைத்தார்கள் , இறை இல்லத்தின்
நிர்வாகத்தில் இருப்பதால் இவர்களுக்கு , மரியாதை , சலுகைகள் , பாதுகாப்பு என்று பல
நன்மைகள் கிடைத்தது , மக்காஹ் நகர் அரேபிய தீபகற்பத்தின் அனைத்து பகுதிகளையும் விட
மிக முக்கியத்துவம் வாய்ந்த வாணிபக் கோத்திரமாக வளர்த்து விட்டது , யாரும்
போட்டியிட முடியாத அளவுக்கு வெற்றி கிடைத்தது , செல்வ நிலையும் , வியாபார அறிவும்
பெருகி விட்டது ....அப்போது தான் அப்ரஹா மக்காஹ் மீது படையெடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நேரத்தில் அந்த புனித நகரை அப்ரஹா வெற்றி கொண்டு காபாவை இடித்து தள்ளும்
நோக்கத்தை நிறைவேற்றி விட்டிருந்தால் காபாவின் புகழ் மறைந்து போயிருக்கும் , ஆனால்
வல்ல இறைவன் தன் வலிமையின் அற்புதத்தை வெளிப்படுத்தி அவர்களை முற்றிலுமாக வேரோடு
அழித்து விட்டான் அப்போது காபா இறைவனின் இல்லமே எனும் அரபிகளின் நம்பிக்கை
முன்னைவிட பல மடங்கு அதிகமாக வலுவடைத்து விட்டது , அத்துடன் குறைஷிகளின்
செல்வாக்கும் அரபு நாடு முழுவதும் முன்பு இருந்ததை விட அதிகமாகி விட்டது .வணிகம்
செய்யும் அறிவும் அதிகமாக வளர்ந்தது.
இறைவன் அப்ரஹா விடம் இருந்து காப்பாற்றியது
மட்டும் அல்லாமல் பல நன்மைகளை வழங்கினான் .
இறைத்தூதர் இப்ராஹிம் அலை அவர்கள் தம் இளம்
துணைவியார் ஹாஜரையும் அவர்கள் மகன் இஸ்மாயிலையும் பொட்டல் பூமியான மக்காஹ்வில்
விட்டு விட்டு திரும்பும் போது இந்த துஆஹ்வை கேட்டார்கள் .....
رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُم بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ
“இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி
வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ
அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக”2:126
இது
காபாவை கட்டியபின் கேட்ட துஆஹ் .
14:37 رَّبَّنَا إِنِّي أَسْكَنتُ مِن ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِندَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ
14:37.
“எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும்,
சங்கையான
உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில்,
எங்கள்
இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்;
எனவே
மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும்
அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ
ஆகாரமும் அளிப்பாயாக!”
என்று கேட்டு கொண்ட
பிரார்த்தனையை இறைவன் அங்கீகரித்து கொண்டான், அதுபோலவே அந்த பூமியை பயமற்றதாகவும்,
செல்வ,செழிப்பாகவும் ஆக்கினான் .அங்கே இருந்த மக்கள் அல்லாஹ்வை வணங்காமல் , இணை
வைத்த போதிலும் , அந்த புனித பூமியில் அல்லாஹ் நிறைவேற்ற நாடியிருந்த ஒரு
காரியத்திற்காக அனைத்து நன்மைகளையும் சிறப்புகளையும் இறைவன் அந்நகருக்கு
வழங்கினான்.
لِإِيلَافِ قُرَيْشٍ
மூலத்தில் லிஈலாபி எனும் சொல் அல்ப் எனும்
சொல்லில் இருந்து வந்ததாகும் .அதன் பொருள் பழகிவிடுதல்,நெருக்கமாகி விடுதல் ,
பிரிந்த பின் இணைத்து விடுதல் , ஒரு விசயத்தை பழக்கமாக்கி கொள்ளுதல் எனப்படும். இதில்
முதலில் வரும் லாம்,லி – பின்னால் வரும் காரணத்தை காட்டிட வந்துள்ளது. ( வசனம் – 3
)
குறைஷ் – QAA – RAA – SHAA - விசித்திரமான மிக பெரிய கடல் ஜந்துவை
குறிக்கிறது , அது கடலில் உள்ள அனைத்தையும் அழித்திடும் சக்தி வாய்ந்தது , அதை
நெருப்பால் மட்டுமே அழிக்க முடியும் , ஆனால் அது நீரில் இருப்பதால், அதுவும்
சாத்தியம் அற்றது.
இங்கு குறைசிகளும் மிக வலிமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்
,யாராலும் அவர்களுக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது .. இறை இல்லத்தின்
நிர்வாகிகள் , காபாவாசிகள் என்று பயம்.அவர்களை
ஏதும் செய்தால் அல்லாஹ் அழித்து விடுவான் என்று உறுதியாக நம்பினர்.குறைஷிகளும்
காபா அல்லாஹ்வின் இல்லம் என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள் ஆனால் சிலைகள் மூலம் தான்
அல்லாஹ்வை நெருங்க முடியும் என்ற இணை வைப்பிலும்
உறுதியாக இருந்தார்கள் .
إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ
வியாபாரத்திற்கும் , வணிகத்திற்கும் பிரயாணம் செய்யும் போதும் எந்த பயமும் இல்லாமல்
சென்றார்கள் , கொள்ளை கூட்டம் , தாக்கி விடும் என்று பயம் எதுவும் இல்லாமல்
சென்றார்கள், காரணம் காபாவின் நிர்வாகிகள்.
வருடம் முழுக்க வியாபாரம் செய்து அனைத்து
பொருட்களும் வருடம் முழுவது கிடைக்குமாறு ரப் அருள் புரிகிறான் .
குளிர் காலத்தில் யமன் நோக்கி சென்றும் (ஏனெனில்
அவை வெப்ப பிரதேசங்களாகும்) , கோடைகாலத்தில் சிரியா நோக்கி சென்றும் (ஏனெனில் அவை குளிர்
பிரதேசங்களாகும்) வியாபாரம்/வணிகம் செய்தார்கள் , இதனால் வருடம் முழுவதும் செல்வ
செழிப்பாக மக்காஹ் இருந்தது. ( அல்லாஹ் அப்ரஹா வை விட்டு இருந்தால் , யமன் சென்று
அவர்கள் நிம்மதியாக வணிகம் செய்து இருக்க முடியாது , மற்ற வணிகமும்,பாதுகாப்பும்
குறைந்து இருக்கும் )
இவை அனைத்தையும் இப்ராஹிம் நபியின் துஆஹ் வால்
அல்லாஹ் அங்கு கொடுக்கிறான்.
فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ
இதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவை
அனைத்தையும் கொடுத்த ரப் , குறைஷிகள் நம்பும்படியே “ காபாவின் அதிபதியை மட்டுமே அடிபணித்து வணங்க
சொல்கிறான்”.( வசனம் 1 – தொடர்பு )
இந்த அருட்கொடைகள் அனைத்தும் அவர்களுக்கு இந்த
இல்லத்தின் பயனாகவே கிடைத்துள்ளது.காபாவின் அதிபதி 360 சிலைகள் அல்ல மாறாக அல்லாஹ் மட்டுமே அதன் அதிபதி
என்று ஒப்பு கொள்கிறார்கள்.அப்படியானால் அவனை மட்டுமே வணங்க வேண்டும் .
الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ
பொட்டல் பூமியான , எந்த விவசாயமும் செய்ய
முடியாத அந்த பூமியில் அல்லாஹ் அவர்களுக்கு செழிப்பான உணவும் கொடுத்து அதுமட்டும்
அல்லாமல் மக்காஹ்வை சுற்றி உள்ள ஊர்கள் சூரையாடப்பட்டாலும்,எந்த பாதுகாப்பு இல்லாத
பள்ளத்தாக்கான மக்காஹ் விற்கு முழு பாதுகாப்பு கொடுத்தான் ,காபா இறை இல்லமாக
இருந்ததால் குறைஷிகளுக்கு எந்த அச்சமும் இல்லாமல் இருந்தது , போர் , கொள்ளை , கொலை
துன்புறுத்தல் ஆகிய செயல்கள் தடை செய்யப்பட்ட புனித பகுதியாக மக்காஹ் இருந்தது .
இவை அனைத்தும் இப்ராஹிம் நபியின் துஅஹ்வினால் அல்லாஹ் பொழிந்த அருள்கள் , மற்றும் அல்லாஹ்வின்
நாட்டத்தை ( ஹஜ் ) அங்கு நிறுவ அல்லாஹ்
செய்த ஏற்பாடு.
ஆனால் இவை அனைத்தையும் கொடுத்த ரப்புக்கு
அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை ஸுராஹ் மாவூன் னில் பார்த்தோம்....
இதில் அல்லாஹ் குறைஷிகளுக்கு கொடுத்த அருள்களை
சொல்லி இருக்கிறான் .
இதில் நாம் பெறும் பாடம் .... நாமும் நம்
வாழ்வில் அல்லாஹ் நமக்கு தந்து உள்ள அருள்களை நினைத்து நன்றி செலுத்த வேண்டும் ....
இவ்வகுப்பும் அல்லாஹ் நமக்கு தந்துள்ள மிக பெரிய அருள்களில் ஒன்று , இதற்க்கு
பக்கபலமாக இருக்கும் நம் கணவர் , பிள்ளைகளும் நமக்கு அருள், அவர்களுக்கு நாம்
நன்றி செலுத்துவோம் .
மனிதனுக்கு
நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்
ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)
இனி
நாம் என்ன செய்யலாம் ......... ( HOME WORK )
1.
WHATS APP வார்த்தைக்கு வார்த்தை ஸுராஹ் குறைஷி
2.
நபிகள் நாயகத்தின் முப்பாட்டனார் பெயர் என்ன? அவர்கள் செய்த காரியம் என்ன?
3.
ஹாஷிம் அவர்களுக்கு தோன்றிய எண்ணம் என்ன?
4.
காபாவின் நிர்வாகிகள் என்பதால் குறைஷி களுக்கு கிடைத்த நன்மை என்ன?
5.
இப்ராஹிம் அலை கேட்ட துஆஹ் வை எழுதுக
6.
குறைசிகள் பயணம் செய்த காலம் , ஊர் எழுதுக.
7.
குறைஷிகள் காபா குறித்து வைத்து இருந்த நம்பிக்கை என்ன
8.
அப்ரஹா அழிவிற்கு பின் குறைஷிகள் நிலை என்னவாயிற்று?
9.
கொள்ளையர்கள் குறைசிகளுக்கு தொல்லை கொடுக்காமல் இருக்க காரணம்.
10.
இந்த ஸுராஹ் வில் அல்லாஹ் குறைசிகளுக்கு கொடுத்த அருளாக எதையெல்லாம்
சொல்கிறான்,
வஸ்ஸலாம் , ஜசாக் அல்லாஹு ஹைரன் .
No comments:
Post a Comment