Monday, April 13, 2015

வகுப்பு 12- ஸுராஹ் பீல்-யானை .


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم 
 
 13/4/15
அஸ்ஸலாமு அழைக்கும்  அன்பு சகோதரிகளே.......
என்ன படித்தோம் ......

v  கிராஆத் - சகோதரி சாஹிரா .

v  ஸுராஹ் பீல்  சிறு குறிப்பு

v  ஸுராஹ் பீல்  வா / வா பொருள் + வா / வா விளக்கம்-  சகோதரி ரினோசா

v  ஸுராஹ் பீல் தப்சீர் – சகோதரி சப்ரினா .   . 

v  நபிகள் நாயகம் வரலாறு - சகோதரி யாஸ்மின் .

v  துஆஹ் மனனம் – ஜுவைரியா (ரலி)க்கு நபி கற்று கொடுத்த துஆஹ்  

v  அஸ்மா உல் ஹுஸ்னா – 71 – 75


மக்காஹ்வில் அருளப்பட்டது . 5 வசனங்களை கொண்டது.இந்த ஸுராஹ்வில் யானை படை சம்பவத்தை பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன், அப்ரஹா என்ற பெயருள்ள அரசன் மக்காவிற்கு கிழக்கிலுள்ள எமன் நாட்டில் அரசு செலுத்தி வந்தான். இயற்கையில் அவன் துற்குணமுள்ளவன். மக்காவிலுள்ள  கஃபாவானது  அரபியர்களிடம்  விசேஷ மதிப்பு  பெற்றிருந்தது  பற்றி அவன் பொறாமை கொண்டு தன் நாட்டின் தலைநகர் ஸன்ஆ விலும்மொரு பெரிய ஆலயத்தை கட்டினான். மக்காவிற்குச் ஹஜ்ஜு செய்யக் கூடாதென்றும் தன்னுடைய ஆலயத்திற்கே எல்லோரும் வரவேண்டுமென்றும் பிரகடன படுத்தினான். இவன் வார்த்தைக்கு ஒருவரும் மதிப்பு கொடுக்கவில்லை.

  
அரபியர்கள் வழக்கப்படி கஃபாவிற்கே யாத்திரை போனார்கள் இவன்கட்டிய அலயத்துக்கு  யாரும் வரவில்லை. அதைப்பற்றி அவனுக்கு அதிக வருத்தம் உண்டு. இப்படியிருந்து வரும் சமயம் இவனுடைய ஆலயத்தில் மலபாதை கழித்து ஆபாசம் செய்துவிட்டார்கள். அதைப்பற்றி  விசாரிக்கும்போது அவ்வாறு செய்தது  மக்காவாசி என்று தெரிந்தது. சிறிது  காலத்திக்குப்பின்  அந்தக்  ஆலயம்  தீப்பற்றி எரிந்து விட்டது. விசாரணையில்  மக்காவாசியே தீ வைத்ததாக  தெரிந்தது.  இவ்விரு  சம்பவங்களாலும் இயற்கையில் அவனுக்கு கஃபாவின் மீதும் மக்கா வாசிகளின் மீதும் இருந்து வந்த கோபம் மிகவும் அதிகமாகி விட்டது.

இந்த ஆலயத்தை அவன் கட்ட முக்கிய காரணம் இரண்டு – காபாவை விட இவன் கட்டிய ஆலயம் பிரபலம் அடைய வேண்டும் . அடுத்து மக்கள் இங்கு வர வர வியாபாரம் , வணிகம் இங்கே அதிகமாகும் என்று சதி திட்டம் திட்டினான்.

நான் அரபிகளின் புனித ஹஜ்ஜை காபாவில் இருந்து இந்த ஆலயத்தின் பக்கம் திருப்பி விடாமல் ஓய்ந்திட மாட்டேன் என்று அறிவித்தான் இதை கேட்டு அரபியர்கள் கோபம் கொண்டு எதாவது செய்வார்கள் , பின் நாம் அதை காரணம் காட்டி மக்காவை இடிக்கலாம் என்று சதி திட்டம் திட்டினான்.

அந்த ஆலயத்தை யாரும் நாசம் செய்யாமலே இவன் [பொய் சொல்லி இருக்கலாம் , யாரும் அங்கு இதுவரை செல்லவில்லை அல்லது இவன் ஆட்களே நாசம் செய்து மக்கவாசிகள் மேல் பலி போட்டு இருக்கலாம்.

காபாவை இடிக்க காரணம் வேண்டும் அதற்க்கு இவன் தீட்டிய சதி திட்டம்.

இதன் பின் நான் காபாவை இடித்து தள்ளாத வரை ஒய்ந்திட மாட்டேன் என்று சபதம் செய்தான் .

ஆலயத்தின் பெயர் அல் – குலைஸ் .

யானை படைகளை திரட்டி கொண்டு வருகிறான் ...... யானை – பீல் – ஒருமையில் இருக்க காரணம் – அவனது பலம் வாய்ந்த ஒரு தலைமை யானை அதுவே போதுமானது என்று நினைத்தான் . தலைமை யானை பெயர் மஹ்மூத்.

யானை படை-அல்லாஹ் இந்த படையை மிருகத்துக்கு சமமாக ஒப்பிடுகிறான்.

இவன் படை வரும் வழியில் முதலில் தூநபர் என்பவர் எதிர்த்தார் , ஆனால் தோல்வி அடைந்து  கைதாகி விட்டார் . பின் நுபைல் எதிர்த்தார் அவரும் தோல்வி அடைந்து கைதாகி தன் உயிரை காப்பாற்றி கொள்ள அவர்களுக்கு வழிகாட்டியாக பணிபுரிய ஒப்பு கொண்டார் .பின் தாயிப் நகர் அருகில் பநூஸகீப் குலத்தாரும் அவர்களை எதிர்திட வலிமை இல்லாததால் அபூரிகால் என்பவனை வழிகாட்ட அப்ரஹா வுடன் அனுப்பி வைத்தனர் மக்காஹ் நகருக்கு 3 மைல் தொலைவில் இருக்கும் போது அல் முகம்மஸ் என்னும் இடத்தில அபூரிகால் இறந்து விட்டான் . அரபிகள் பல்லாண்டு காலம் அவனது மண்ணறை மீது கல்லெறிந்து கொண்டு இருந்தார்கள் .

இவர்கள் அனைவரும் அப்ரஹாவை எதிர்க்க காரணம் , அவர் அவர் சிலைகள் கபாஹ்வை சுற்றி இருக்கிறது , அதை இவன் சேதப்படுத்தி விட கூடாது என்பது.

முகம்மஸ் என்ற இடத்தில் இருந்து மஹ்முத் தலைமை யானை நகரவில்லை , இதை பார்த்து மற்ற யானை களும் நகரவில்லை, பல சித்தரவதை செய்தும் மக்காஹ் நோக்கி நகரவில்லை, மற்ற திசையில் நகர்கிறது. அங்கு படை முகாமிட்டு மக்காஹ்வில் உள்ள பொருட்களை சூறையாட அப்ரஹா படைகளை அனுப்புகிறான் , அவர்கள் கொண்டு வந்ததில் அப்துல் முத்தலிப் அவர்களின் ஒட்டகங்களும் இருந்தது , அப்துல் முத்தலிப் மக்காஹ் தலைவராக இருந்ததால் அவர்களிடம் அப்ரஹா மக்காவை தாக்க வந்த செய்தியை படை வீரர்கள் சொல்லி அழைத்து வருகிறார்கள், அப்துல் முத்தலிபின் கம்பீரம் , அழகு , தோரணை பார்த்து அப்ரஹா தன் இருக்கையில் இருந்து இறங்கி அவர்கள் அருகில் அமருகிறான், அப்துல் முத்தலிப் தன் ஒட்டகங்களை பற்றி மட்டுமே கேட்டதை பார்த்து , மக்காஹ்வை பற்றி தலைவருக்கு கவலை இல்லையா என்று கேட்கிறான் அதற்க்கு அப்துல் முத்தலிப் அவர்கள் “நான் என் ஒட்டகங்களுக்கு மட்டுமே உரிமையாளன் , இந்த இல்லமோ ,இதற்கென்று ஓர் இறைவன் இருக்கிறான் , அவனே இதனை பாதுகாத்து கொள்வான் என்று பதில் அளித்தார்கள் .

மற்றுமொரு அறிவிப்பில் – அப்துல் முத்தலிப் அவர்கள் சமாதானம் பேசியதாகவும் , அதற்க்கு அப்ரஹா உடன்படவில்லை என்றும் பதிவாகி உள்ளது.

திரும்பி வந்த அப்துல் முத்தலிப் மக்கா வாசிகளிடம் , உங்கள் உடமை , பொருள் , உயிரை ,மனைவி மக்களை காப்பற்றி கொள்ளுங்கள், அவர்களை அழைத்து கொண்டு மலைகளுக்கு சென்று விடுங்கள் என்று அறிவித்தார்கள்.

அப்போது குறைசிகள் , அதன் தலைவர்கள் காபாவிற்கு வந்து காபாவின் கதவை பிடித்து அல்லாஹ் விடம் மட்டுமே வேண்டி காப்பாற்ற கெஞ்சினார்கள் , 360 சிலைகள் இருந்தும் யாரும் அதன் பக்கமே செல்லவில்லை , அனைவரும் அல்லாஹ் ஒருவனிடமே கை ஏந்தினார்கள்.

அரபியர்கள் பலர் யானையை முதல் முறையாக பார்க்கிறார்கள் , சிலர்  ஒற்றையாக பார்த்து இருந்தாலும் மொத்தமாக படையோடு நிற்பதை பார்த்து அதிர்ந்து அல்லாஹ்விடம் இறைஞ்சிகிறார்கள்.இந்த நிகழ்வுக்கு பின் 7 வருடங்கள் அரபியர்கள் இறைவன் அல்லாஹ்வை மட்டுமே வணங்கினார்கள்.

அரபிகள் மற்றும் அப்ரஹா பார்த்து கொண்டு இருக்கும்போதே , அல்லாஹ் பெரும் பறவை கூட்டம் ஒன்றை அனுப்புகிறான் , அந்த பறவைகள் மேகம் மூடும் அளவிற்கு கூட்டமாக வருகிறது , அதன் கால்களில் இரண்டு கற்களும் , அலகில் ஒரு கல் உம் கொண்டு வந்து அப்ரஹா படை மீது விசுகிறது, அந்த கற்கள் நெருப்பை போன்று சுடப்பட்ட கற்களாக இருந்தது , அந்த கற்களில் படையில் உள்ளவர்கள் பெயர்கள் சுடப்பட்டு இருந்ததாகவும் அறிஞ்ர்கள் சொல்கிறார்கள் . அந்த கற்களை பறவைகள் படையில் உள்ளவர்கள் தலையில் போட்டால் அது அவர்கள்

-    தலையை ஓட்டை போட்டு கீழ் வழியாக வந்தது,

-    அவர்கள் உடல் வெந்து உதிர ஆரம்பித்தது

-    கடும் சொறி ஏற்ப்பட்டது , சொரிந்ததும் தோல் கிழிந்து சதை உதிர ஆரம்பித்தது

-    கல் உடலில் பட்ட உடன் இறைச்சியும் , இரத்தமும் தண்ணிரை போல் வழிந்தோட ஆரம்பித்தது

-    எலும்புகள் வெளிப்பட்டன

அப்ரஹா உடல் துண்டு துண்டாக விழுந்து கொண்டு இருந்தது , சீழும் இரத்தமும் வழிந்தோட ஆரம்பித்தது.இந்த அமளிதுமளிகளில் அவனது படையினர் அவனை தூக்கி கொண்டு எமன் நாட்டை நோக்கி ஓடினர். வழியில் எல்லாம் அவன் உடல் துண்டு துண்டாக விழந்தது,சிலர் படை இருந்த இடத்திலேயே மென்று தின்னப்பட்ட வைக்கோல் போல் விழுந்தனர் , சிலர் தப்பித்து போகும் வழியில் இறந்தனர் , சிலர் எமன் னை அடைந்து இறந்தனர் , இதை பார்த்த மற்ற எமன் மக்கள் அல்லாஹ்வின் தண்டனையை அறிந்தனர்.

அவனுக்கு ஏற்ப்பட்ட நிலையை பார்த்து , எமன் மக்கள் மற்றும் மற்ற ஊர் மக்கள் மக்காஹ்வை தாக்க அஞ்சினர்.  

சிறிய பறவைகளை கொண்டு பெரிய யானை படையை அழித்து அல்லாஹ் இங்கு தன் வல்லமையை காட்டினான்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டை ஆமுல்பீல் – யானை ஆண்டு என்று அரபிகள் கூறுகிறார்கள்.

தற்போது குறைசிகள் நிலையை குறித்து அவர்களுக்கு நினைவுப்படுத்தவே அல்லாஹ் இதை இறக்கினான்.

நபிகள் பிறப்புக்கு முன்பே அல்லாஹ் காபாவை காப்பாற்றினான்.இந்த நிகழ்விற்கு  50 நாள் பின் நபி பிறந்தார்கள் .


HOME WORK

1.       வார்த்தைக்கு வார்த்தை பொருள் படித்தல்.

2.       யானை படையுடன் வந்த அரசன் யார் ? எங்கிருத்து வந்தான்?

3.       அவன் எடுத்த இரண்டு சபதங்கள் என்ன

4.       அவன் கட்டிய ஆலயத்தின் பெயர் என்ன ?

5.       அவன் அந்த ஆலயத்தை கட்ட முக்கியமான சதி நோக்கம் என்ன?

6.       காபாவின் மீது படை எடுக்க அவன் செய்த சதி என்ன?

7.       தலைமை யானையின் பெயர் என்ன?அது முன்னேறி செல்லாமல் நின்ற இடம் எது?

8.       அப்துல் முத்தலிப் அவர்கள் காபாவை குறித்து அந்த அரசனிடம் சொன்ன பதில் என்ன?

9.       படை வரும் செய்தியை கேட்டு குறைஷிகள் என்ன செய்தார்கள்?

10.    பறவைகள் கொண்டு வந்த கல் படையில் உள்ளவர்கள் மேல் விழுந்ததும் அவர்களுக்கு என்ன நடந்தது.

11.    அரசனின் இறப்பு எப்படி இருந்தது
     12. இந்த அத்தியாயத்தில் குறைஷிகளுக்கு தெரிந்த இந்த சம்பவத்தை அல்லாஹ் மீண்டும் அவர்களுக்கு  நினைவுப்படுத்த காரணம் என்ன

ஜசாக் அல்லாஹு ஹைரன்.

No comments:

Post a Comment