Friday, February 20, 2015

வகுப்பு 10 - ஸுராஹ் மாவூன் .


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
 18/2/15.
அஸ்ஸலாமு அழைக்கும்  அன்பு சகோதரிகளே.......
என்ன படித்தோம் ......
v  ஸுராஹ் கத்ர் கிராஆத் - சகோதரி சப்ரினா .

v  ஸுராஹ் மாவூன்  சிறு குறிப்பு

v  ஸுராஹ் மாவூன்  வா / வா பொருள் + வா / வா விளக்கம்-  சகோதரி ரினோசா

v  ஸுராஹ் மாவூன்  தப்சீர் – சகோதரி சாய்ரா .   . 

v  நபிகள் நாயகம் வரலாறு அழைப்பு பணியின் தொடக்கம் -சகோதரி யாஸ்மின் .

v  துஆஹ் மனனம் –ஆபத்தில் இருந்து பாதுகாப்பு - துஆஹ்

v  அஸ்மா உல் ஹுஸ்னா – 61 – 65

Sunday, February 15, 2015

வரலாறு - அன்னை சௌதா ரலி


அன்னை சௌதா பின் சமாஆ (ரலி)

;கதீஜா (ரலி) அவர்களின் மரணத்தை அடுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களது வாழ்க்கைத் துணைவியாக வாழ்க்கைப்பட்ட இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களின் வரிசையில், சௌதா பின் சமாஆ (ரலி) அவர்கள் இருந்தார்கள். இறைநம்பிக்கை, கீழ்ப்படிதல் மற்றும் அற்பணம் ஆகியவற்றில் தாயவர்கள் மிகச் சிறந்த இடத்தை வகித்தார்கள். இவர்களது எளிமை மற்றும் சுயநலமில்லாத தயாள குணம் ஆகிய நற்குணங்கள் ஆயிஷா (ரலி) அவர்களது மனதை மிகவும் கவர்ந்ததாக இருந்தது. ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய மக்களில் ஒருவராகவும், இன்னும் இருமுறை ஹிஜ்ரத் செய்த பாக்கியத்தைப் பெற்றவர்களுமாவார்கள். ஒருமுறை அபிசீனியாவிற்கும் இன்னுமொரு முறை மதீனாவிற்கும் ஹிஜ்ரத் சென்றார்கள். இவர்களது வாழ்வு, உலகத்துப் பெண்மணிகளுக்கோர் முன்னுதாரணமாகும்.

Saturday, February 14, 2015

வகுப்பு 9 - ஸுராஹ் கவ்ஸர்.


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
12/02/2015

அஸ்ஸலாமு அழைக்கும்  அன்பு சகோதரிகளே.......

என்ன படித்தோம் ......

v  ஸுராஹ் ஹுமஜா - கிராஆத் - சகோதரி பரீனா.
v  ஸுராஹ் கவ்ஸர்  சிறு குறிப்பு
v  ஸுராஹ் கவ்ஸர் வா / வா பொருள் + வா / வா விளக்கம்-  சகோதரி ரினோசா
v  ஸுராஹ் கவ்ஸர்  தப்சீர் – சகோதரி பர்ஹானா   . 
v  உம்மஹாதுல் முமினீன் – முமீன்களின் அன்னை – வரலாறு – சவ்தா ரலி -சகோதரி யாஸ்மின் .
v  துஆஹ் மனனம் –தீய குணம் ,செயல் ,ஆசை யில் இருந்து பாதுகாப்பு - துஆஹ்
v  அஸ்மா உல் ஹுஸ்னா – 56 - 60

சீராஹ் வகுப்பு - 5

நபித்துவத்தின் தொடக்க நிலைகளில்

நபித்துவத்தின் துவக்கம்

அண்ணலாரின் வாழ்வில் இப்போது இன்னொரு புரட்சி ஏற்படலாயிற்று. தனிமையில் அமர்ந்து அல்லாஹ்வை வணங்குவதிலும் தம்மைச் சுற்றிலுமுள்ள ஒழுக்க, வீழ்ச்சி, மார்க்கப் பக்தியில்லாமை ஆகியன குறித்துச் சிந்திப்பதிலும் அவர்களின் கவனம் திரும்பலாயிற்று: 'என் சமூகத்து மக்கள் சிலைகளை எப்படி வணக்கத்திற்குரிய கடவுள்களாக்கிக் கொண்டார்கள்? அவர்கள் ஒழுக்க ரீதியாக எந்த அளவிற்கு வீழ்ச்சி அடைந்து விட்டிருக்கின்றார்கள்! இவர்களின் இறைவழிபாட்டின் பாதை எது? இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளனை, அதிபதியை எவ்விதம் வணங்குவது? அவர்களுக்கு அதனை எப்படி உணர்த்துவது?' என்றெல்லாம் அவர்கள் தொடர்ந்து சிந்தித்து வந்தார்கள். இத்தகைய ஏராளமான சிந்தனைகளும், கேள்விகளும் அவர்களின் உள்ளத்தில் தொடர்ந்து வட்டமிட்டு வந்தன. அவற்றைக் குறித்து அண்ணலார் (ஸல்) அவர்கள் சதா சிந்தித்து வந்தார்கள்.

 

துஆஹ் - 12


தீய குணம், ஆசை, செயலை விட்டும் பாதுகாவல் தேடும் துஆ…..

اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأخْلاَقِ ، وَالأعْمَالِ ، والأهْواءِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் முன்கராத்தில் அக்ஹ்லாகி வல் அஃமாலி வல் அஹ்வாயி

பொருள் :- யா அல்லாஹ்! தீய குணங்களை விட்டும், தீய செயல்களை விட்டும், தீய ஆசைகளை விட்டும் நிச்சயமாக உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்

அறிவிப்பாளர்: குத்பா பின் மாலிக் (ரழி) அவர்கள்
[ஆதாரம்: திர்மிதி, ரியாளுஸ் ஸாலிஹீன் ஹதீஸ் எண் 1482 ]

துஆஹ்-11


கடமையான தொழுகைக்குப் பிறகு  -   இறைவனை அழகிய முறையில் வணங்க , .....

اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

அல்லாஹும்ம அ இன்னி அலா திக்ரிக்க வ ஷுக்ரிக்க வஹுஸ்னி இபாதத்திக்

Allahumma a’inni ‘ala dhikrika wa shukrika wa husni ‘ibadatika

பொருள் - யா அல்லாஹ்! உன்னை நினைவு கூர்வதற்கும் , உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் , எனக்கு நீ உதவி புரிவாயாக !


துஆஹ்-10


நபிகள் செய்த பிரார்த்தனை – ருக்கூ துஆஹ்.

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي

‘ஸூப்ஹான கல்லாஹூம்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹூம்மஃக்பிர்லீ’

 

பொருள் : ‘யா அல்லாஹ்! என் அதிபதியே! உன்னைப் புகழ்வதுடன் உன்னைத் தூயவன் என்று துதிக்கிறேன். யா அல்லாஹ் என்னை மன்னிப்பாயாக!’

سُبُّوحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلاَءِكَةِ وَالرُّوْحِ

ஸுப்புஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்”

பொருள் : வானவர்களுக்கும், ஜிப்ரீலுக்கும் எஜமானனாகிய இறைவன் மிகத் தூய்மையானவன், பரிசுத்தமானவன்.

سُبْحَانَ رَبَّيَ الْعَظِيمِ

சுப்ஹான ரப்பியல் அழீம்”

பொருள்: மகத்துவமிக்க என் இரட்சகன் பரிசுத்தமானவன்.

 

துஆஹ்-9


நபிகள் செய்த பிரார்த்தனை – 1 – பாதுகாவல் துஆஹ் .

 
 


அல்லா ஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் இல்மின் லா யன்ஃபஉ, வ மின் கல்பின் லா யஹ்க்ஷஉ, வ மின் நஃப்சின் லா தஷ்பஉ, வ மின் தஅவத்தின் லா யுஸ்தஜாபு லஹா.

பொருள் - இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்தும் திருப்தியடையாத மனத்திலிருந்தும் ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

முஸ்லிம் 5266.

துஆஹ் - 8


ஜிப்ரீல் அலை நபிக்கு ஓதிய துஆஹ் ( உடல் நலத்துக்கு + கண்ணூர் பாதுகாப்பு )

 بِسْمِ الله أرْقِيكَ ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ ، اللهُ يَشْفِيكَ ، بِسمِ اللهِ أُرقِيكَ

"பிஸ்மில்லாஹி அர்கீக்க, மின் குல்லி ஷைஇன் யுஃதீக்க, மின் ஷர்ரி குல்லி நஃப்சின் அவ் அய்னின் ஹாசிதின், அல்லாஹு யஷ்ஃபீக்க, பிஸ்மில்லாஹி அர்கீக்க"

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஒதிப்பார்க்கிறேன். உமக்குத் தொ

ல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும், பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமையிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப்பார்க்கிறேன்.

முஸ்லிம் – 4403

துஆஹ்-7


கண்ணூரில் இருந்து பாதுக்காப்பு பெற – 1 :-

 

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

'அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்"

(U’eedhukuma)

3371. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்.இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் - என்று கூறுவார்கள்.

துஆஹ் - 6


நோயில் இருந்து குணம் பெற .. ஐயூப் நபி கேட்ட துஆஹ் .....

ஸுராஹ் அன்பியாஹ் – வசனம் 86.

أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

“நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்”

 

21:83. இன்னும், ஐயூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித் போது,

21:84. நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்;

 

 

துஆஹ் - 5

நோய்யிலிருந்து குணம் பெற ஓதும் தூஆஹ் : -

( வலக் கரத்தால் தடவி )

 

"அத்ஹிபில் பாஸ ரப்பந் நாஸ். வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்"

 

பொருள் :- (மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை) முஸ்லிம் -4409,10,11,13

 

 

 

துஆஹ் - 4


 அல்லாஹ்விடம் நேரில் பரிசு  கிடைக்க ஓதும் துஆஹ் .....

 

"யா ரப்பி! லக்கல் ஹம்து கமா யன்பஃகீ லி ஜலாலி வஜ்ஹிக்க வ அழீமி சுல் தானிக்க’’

பொருள் :- இறைவா! உனக்கே உரிய மாண்புக்கும் உன் மகத்தான அதிகாரத்திற்கும் ஏற்ற புகழ் யாவும் உனக்கே உரியன.

 

 

 

துஆஹ் - 3


உடலில் வலி ஏற்படும் போது :-

வலியுள்ள இடத்தில் கையை வைத்து –

 

بِسْمِ اللهِ  -  3 தடவை

أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ - 7 தடவை

 

"பிஸ்மில்லாஹ்" என மூன்று தடவை கூறிவிட்டு

ஏழு தடவை "அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு"

 

பொருள்: நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீமையிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

முஸ்லிம் – 4430 .

துஆஹ் - 2


 வாரம் – 2 , துஆஹ் – 2
26/11/14.
காரியம் சிரமமாகி விடும்போது :-
 
اللهُمَّ لا سَهْلَ إلا مَا جَعَلتَهُ سَهْلا وَ أنتَ تَجْعَلُ الحزْنَ إذا شِئْتَ سَهْلا



அல்லாஹும்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹு சஹலா வ அன்த தஜ்அலுல் ஹஸ்ன இதா ஷிஃத சஹ்லா

பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர வேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் கஷ்டத்தை இலகுவாக்கி விடுகிறாய்.

( இப்னு ஹிபான் – 2427 / இப்னு அஸ் ஸுன்னி – 351 )

 

 

வரலாறு - உமர் ரலி

துஆஹ் - 1

வாரம் – 1 , துஆஹ் – 1
19/11/14.
துன்பம் நேரும்போது :-
 
 
 
       

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும், "அல்லா ஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா" (இறைவா, எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால், அதற்கு ஈடாக அதைவிடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை" முஸ்லிம் – 1674.