Saturday, February 14, 2015

வகுப்பு 9 - ஸுராஹ் கவ்ஸர்.


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
12/02/2015

அஸ்ஸலாமு அழைக்கும்  அன்பு சகோதரிகளே.......

என்ன படித்தோம் ......

v  ஸுராஹ் ஹுமஜா - கிராஆத் - சகோதரி பரீனா.
v  ஸுராஹ் கவ்ஸர்  சிறு குறிப்பு
v  ஸுராஹ் கவ்ஸர் வா / வா பொருள் + வா / வா விளக்கம்-  சகோதரி ரினோசா
v  ஸுராஹ் கவ்ஸர்  தப்சீர் – சகோதரி பர்ஹானா   . 
v  உம்மஹாதுல் முமினீன் – முமீன்களின் அன்னை – வரலாறு – சவ்தா ரலி -சகோதரி யாஸ்மின் .
v  துஆஹ் மனனம் –தீய குணம் ,செயல் ,ஆசை யில் இருந்து பாதுகாப்பு - துஆஹ்
v  அஸ்மா உல் ஹுஸ்னா – 56 - 60


விளக்கம் :-

மக்கி ஸுராஹ் , 3 வசனங்கள் , குர் ஆனின் சிறிய ஸுராஹ் இது , பெரிய ஸுராஹ் அல் பகரா . கடைசி சில ஸுராஹ் கள் நபியின் வாழ்கை சம்பவங்களை சொல்ல கூடிய ஸுராஹ் களாக இருக்கும் , இதுவும் அப்படியே .

இன்னா – நிச்சயமாக , சத்தியமாக , முழு வாக்குறுதி கொடுத்தல் .

--أَعْطَيْنَاكَ ---- வேர் எழுத்துக்கள் வகுப்பில் கொடுக்கப்பட்டது - மிக பெரிய பரிசு , முழுவதுமாக ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படுவது . எதிர்பார்த்திராத பரிசு , சந்தோஷத்தின் உச்சத்தில் ஒருவருக்கு கொடுப்பது .யார் ? யாருக்கு கொடுக்கிறான் ? ஆம் , அல்லாஹ் , நபிக்கு .... ஏன் ? பணிகளை சிறப்பாக முடித்த சந்தோசம் .கட்டளைகளை சரியாக நிறைவேற்றிய சந்தோஷம் , கடமைகளை கச்சிதமாக முடித்த சந்தோஷத்தில் வழங்குகிறான் .

பணிகள் , கட்டளைகள் , கடமைகள் ?? தொழுகை , நோன்பு , சகாத் , ஹஜ் மட்டுமல்லாமல் , இதையும் தாண்டி மிக கடினமான பணி , தஃவா ... ஜாஹ்ஹிலியா கால மக்களிடம் , இறைவனின் வஹியை தாங்கி கொண்டு ( மலை நொறுங்கும் அளவுக்கு சுமையானது ) , குறைஷிகளின் கொடுமைக்கு மத்தியில் , வறுமை , குடும்பம் , போர் , உயிர் ஆபத்துக்கு மத்தியில் , உறக்கம் இல்லாமல் ( கண்கள் உறங்குகின்றன , உள்ளம் உறங்கவில்லை – சீராஹ் )  , ஒரு நிமிடமும் ஓய்வு இல்லாமல் , எந்நேரமும் இறைவனின் கட்டளைகளை எதிர் பார்த்து கொண்டே இருந்தது நபியின் வாழ்வு – அனைத்தையும் அவன் விரும்பியவாறு செய்தார்கள் .

இப்படிப்பட்ட கடினமான பணியை முடித்ததின் பரிசு ... எண்ணற்ற நன்மைகளும் , கவ்சர் தடாகமும் . யாரும் கொடுக்க முடியாதது இந்த பரிசு .

நாம் உமக்கு கொடுத்தோம் - என்பது இறந்த காலம் – உத்திரவாதத்தை குறிக்கிறது ... கொடுத்தாகிவிட்டது , தந்துவிட்டோம் என்று. ஆனால் இந்த வசனம் இறங்கி வெகு நாள் சென்ற பின் தான் மக்காஹ் வெற்றி , மக்கள் இஸ்லாத்தின் பால் வருவது என்று அனைத்தும் நடக்கிறது . அதற்க்கு முன்னரே அல்லாஹ் வாக்களித்து விட்டான் .

அல்லாஹ்வின் கட்டளை – இப்ராகிம் நபி செய்த தியாகம் மற்றும் அல்லாஹ் வின் கட்டளைகளை எப்படி அடிபணித்து செய்தார்கள் என்பதையும் பார்த்தோம் .மக்காவில் மனைவி , மகனை தனியாக விட்டு செல்வது , பின் கனவு மகன் பலியிடுவது போல் , பின் மக்காஹ் வருகை , மனைவியும் , மகனும் அல்லாஹ் வின் கட்டளைக்கு அடிப்பணிந்து பலியிட தயாராகுதல் .......

கவ்ஸர் – தடாகம் , எண்ணற்ற நன்மைகள் – மிக அதிகமான நன்மைகளை கொண்டது , நன்மைகளை மட்டுமே கொண்டது , மேலும் அதிக அதிக நன்மைகளை தரக்கூடியது .

அளவில், தரத்தில் , நன்மைகளில் , மதிப்பில் உள்ள பொக்கிஷமான ஒரு பொருளை அரபுகள் கவ்ஸர் என்று சொல்வார்கள் ., ஆனால் இது அனைத்தையும் படைத்த ரப்பின் பரிசு எப்படி இருக்கும் ?

துனியாவில் , மறுமையிலும் தொடர்ந்து கொடுக்கிறான் .....

துனியாவில் நபிக்கு கொடுத்த சில.....

-    அநாதை – அல்லாஹ் அடைக்கலம் கொடுத்து வழிநடத்தல்
-    ஏழை – செல்வந்தர்
-    குர் ஆன் தாங்கும் அளவிற்கு இதயத்தை விரித்து , வலுவாக்கினான்
-    அந்த சுமையை இறக்கி இலகுவக்கினான்
-    உலகமே நினைவு கூறும் விதம் செய்தான் – பாங்கு / சலவாத்
-    அல்லாஹ் , மலக்குகளும் சலவாத் சொல்கிறார்கள்
-    எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு கொடுத்தான்
-    அவன் பெயருடன் சேர்த்தான் – கலிமா
-    50 வேளை தொழுகை  5 வேலையாக குறைத்தான் , ஆனால் அதே நன்மை
-    அதிக உம்மத்
-    குர் ஆன்
-    சிறந்த குணம்
-    பதஹ் மக்காஹ்
-    உம்மத்துகள் செய்யும் அனைத்து வணக்கங்களுக்கும் நபிக்கு நன்மை 
-    பொருள் நிறைந்த பொன் மொழிகள் வழங்கப்பட்டிருக்கிறேன்.
-     என்னை கண்டால் எதிரிகள் பயப்படுவார்கள்.
-     யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டன.
-     நிலமெல்லாம் தொழுகை இடமாகவும், தூய்மை படுத்தும் பொருளாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.
-     மனித குலம் அனைவருக்கும் நான் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்
-     நபிமார்களின் வருகை என்னால் நிறைவு படுத்தப்படுகிறது.

தடாகம் – கவ்ஸர் – சுவனத்தின் ஆறு – ஹதீஸ்கள் – கிழே பார்க்கவும் ....*****

   فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

இந்த அருள்களை கொடுத்த இறைவனுக்கு தொழுது , அறுத்து பலியிட சொல்கிறான் . சலாஹ் – அனைத்து வகை வணக்கங்களையும் குறிக்கிறது ...

ஹஜ் பெருநாள் தொழுகை என்பதை என்றும் அறிஞ்கள் சொல்கிறார்கள் , மார்க்கத்தை முழுமை படுத்த அல்லாஹ் அனைத்து அமல்களை நினைவுப்படுத்துகிறான்.

முஸ்லிம் உம்மத்துக்கு எந்த நல்ல விஷயம் நடந்தாலும் , எந்த ஒரு நல்ல செய்தி கிடைத்தாலும் நபிகள் நாயகம் 2 ராகத் தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தி வந்தார்கள் .

நஹ்ர் – அறுத்து – தர்மம் செய்வது . என்ற உள்பொருளை கொண்டது

அல்லாஹ்வின் பெயரை கூறி மட்டுமே அறுக்க சொல்கிறான் . குறைசிகள் அங்கு பொய் சிலைகளுக்கு அறுத்து பலியிட்டு வந்தார்கள் . அதை மறுத்து.... இப்ராகிம் நபி செய்த கிரியைகளை நினைவுப்படுத்தி செய்ய சொல்கிறான் .

நபியின் கடைசி காலம் – இஸ்லாம் சரியான முறையில் முழுமையடைய இவை அனைத்தையும் அழகாக வசனங்களாக இறக்குகிறான் .

நஹ்ர் – ஒட்டகம் என்பதையும் குறிக்கிறது . நபிகள் ஹஜ்ஜதுல் விதா வின் போது 100 ஒட்டகங்கள் அறுத்து பலியிட்டார்கள் , இதில்  63 ஒட்டகங்களை நபிகள் கையால் அறுத்தார்கள் , மீதம் உள்ளதை அலி ரலியல்லாஹு அன்ஹு அறுத்தார்கள் . அனைத்து இறைசிகளையும் தர்மம் செய்தார்கள் ., அனைதிலும் இருந்து ஒரு துண்டை எடுத்து சமைத்து உண்டார்கள் .

ஹஜ் பெருநாளை ஒட்டி கொடுக்கும் குர்பானி – உழ்ஹிய்யாஹ் .

பிள்ளை பிறந்த சந்தோசத்துக்கு கொடுப்பது – அகீகா . ஆண் – 2 ஆடு / பெண் – 1 ஆடு .

   إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ

-- شَانِئَكَ --- எதிரி , நபிகள் காலத்தில் இருந்து, தற்போது மற்றும்  கியாமத் நாள் வரை வரும் , இருக்கும் அனைத்து எதிரிகளையும் அல்லாஹ் இதில் அடக்கி உள்ளான் .

நபிக்கு எதிரி - அனைத்து மூமீன் , முஸ்லிம் களுக்கும் எதிரி , அனைவரும் அந்த எதிரிகளுக்கு எதிராக ஓதி , துஆஹ் கேட்கும் வகையில் அல்லாஹ் இதை இறக்கி வைத்து இருக்கிறான் .

இந்த மாதிரி எதிரிகளை அனைவறும் வெறுக்கும் படி செய்து இருக்கிறான் .

--- الْأَبْتَرُ ----- துண்டிக்கப் பட்டவன் . சந்ததியற்றவன் ....

சபையில் நபியை பற்றி பேசப்பட்டால் , ஆஸ் பின் வாயில் – அவன் அந்த சபையில் , “ அட விட்டுத் தள்ளுங்கள் அந்த ஆளை அந்த ஆள் வேரறுந்தவர்.அவருக்கு ஆண் பிள்ளைகளும் இல்லை , அவரை பின்பற்ற ஆளே இருக்காது, பெயர் சொல்ல கூட யாருமில்லை  “ என்று கூறுவானாம் .குறைஷி என்ற கோத்திரத்தை விட்டு தனியாக வேர் அறுந்த மரம் போல்  நிற்கும் மனிதர், பட்டுப்போகும் மரம் என்றும் இன்னொரு எதிரியான உக்பா பின் அபிமுஈத் சொல்லுவானாம் ... நபியின் மகன் இறந்த நேரம் – அபு லஹப் , அபு ஜஹ்லும் நற்செய்தி நற்செய்தி என்று கத்தி ஆட்டம் பாட்டம் போட்டு கொண்டாடினார்களாம் .

நபி மனம் உடைத்து , மிகவும் வேதனை அடைந்து இருக்கும் சமயத்தில் அல்லாஹ் இந்த சிறிய ஸுராஹ் மூலம் முழு சந்தோசத்தையும் , எண்ணற்ற நன்மைகளையும் கொடுக்கிறான் .

மக்கத்து காபிர்கள் நபியிடம்  – விலை உயர்த்த பொன் , பவளம் , பணம் , பெண் என்று தருகிறோம் ,  அல்லாஹ் ஒருவன் என்று சொல்வதை நிறுத்துமாறு சொன்னார்கள் , அனைத்தையும் தீர்க்கமாக நபி மறுத்தார்கள் ...

ஆனால் இவை அனைத்தும் நெருங்க முடியாத பரிசை அல்லாஹ் கொடுத்து விட்டான் .

பின் பற்ற மகன் இல்லை – ஆனால் இன்று உலகமே பின்பற்றுகிறோம், நபிகள் செய்த அனைத்து விசயத்தையும் பின்பற்ற துடிக்கிறோம் .

பெயர் சொல்ல ஆள் இல்லை – ஆனால் இன்று ஒரு ஒரு பாங்கிலும் நபியின் பெயர் ஒளிகிறது , அதற்க்கு சலவாத்தும் சொல்லி மரியாதையை கொடுக்கிறோம் . சுப்ஹான் அல்லாஹ்

எதிரிகள் சந்ததியற்றவர்கள் ( உதாரணம் -  அபு லஹப் –லஹப்  ஸுராஹ் வில் பார்த்தோம் )

 துண்டிக்கப் பட்டவர்கள் – எதில் இருந்து – அனைத்து நன்மைகளில் இருந்தும் , இம்மையிலும் , மறுமையிலும் ...செல்வம் . குடும்பம் , என்று அனைத்தும் இருந்தாலும் அதன் முலம் அவர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது . அதன் முலம் சந்தோசமோ , திருப்தியோ கிடைக்காதவாறு ரப் செய்து விட்டான் .அனைவர் மனதிலும் இருந்து எதிரிகளின் பெயர்களை மறக்கடித்து விடுகிறான் .

இனி நாம் என்ன செய்யலாம் – HOME WORK .

1.       வா / வா பொருள் WHATSAPP .
2.      கவ்சர் – இரு பொருள் .
3.      அல்லாஹ் ஏன் இந்த பரிசை கொடுக்கிறான் .
4.      எப்படிப்பட்ட பரிசு .
5.      தடாகம் எப்படிபட்டது , யாரெல்லாம் அதில் இருந்து அருந்துவர்
6.      பரிசை கொடுத்ததற்கு என்ன செய்ய சொல்கிறான்
7.      நஹ்ர் – 2 பொருள்
8.      இந்த ஸுராஹ் வில் குறிப்பிட்டு இருக்கும் நபியின் எதிரிகள்பெயர் .
9.      நபிக்கு மட்டுமே அல்லாஹ் துனியாவில் கொடுக்கப்பட்டு இருக்கும் சிறப்பு ( 6 )
10.   100 ஒட்டகங்களை நபி எப்போது அல்லாவிற்காக அறுத்தார்கள்?

அஸ்மா உல் ஹுஸ்னா – எழுதுவோம் .....

*****ஹதீஸ் - 6577. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

 (மறுமை நாளில் என்னுடைய 'அல்கவ்ஸர்' எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) 'ஜர்பா' மற்றும் 'அத்ருஹ்' ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும். 151

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

6579. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

 ('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். 153

என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

670. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள். அப்போது அவர்கள் (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், சற்று முன் (குர்ஆனின் 108ஆவது அத்தியாயமான அல்கவ்ஸர் எனும்) ஓர் அத்தியாயம் எனக்கு அருளப்பெற்றது என்று கூறிவிட்டு அந்த அத்தியாயத்தை (பின்வருமாறு) ஓதிக் காட்டினார்கள்:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். இன்னா அஃத்தைனாகல் கவ்ஸர். ஃபஸல்லி லி ரப்பிக்க வன்ஹர். இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர்.

 (பொருள்: அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு அல்கவ்ஸரை நல்கியுள்ளோம். எனவே, உம்முடைய இறைவனைத் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக! நிச்சயமாக உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்.)

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்கவ்ஸர் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள் என்று பதிலளித்தோம். அவர்கள்,அது ஒரு (சொர்க்க)நதி. என்னுடைய இறைவன் (மறுமை நாளில்) அதை(த்தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான்; அதில் அபரிமிதமான நன்மைகள் உள்ளன. அது ஒரு நீர் தடாகம்; மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தார் (தண்ணீர் அருந்துவதற்காக) அதை நோக்கி வருவார்கள். அதன் குவளைகள் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போன்று (அதிகமாகக்) காணப்படும். அப்போது அவர்களில் ஓர் அடியார் (தண்ணீர் அருந்தவிடாமல்) தடுக்கப்படுவார். உடனே நான், இறைவா! அவர் என் சமுதாயத்தாரில் ஒருவர். (அவர் ஏன் தடுக்கப்படுகிறார்?) என்று கேட்பேன். அதற்கு இறைவன், உங்கள் சமுதாயம் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று கூறுவான்.

4599. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 ("அல்கவ்ஸர்") எனும் எனது தடாகம் (பரப்பளவில்) ஒரு மாத காலப் பயணத் தொலைவு கொண்டதாகும். அதன் அனைத்து மூலைகளும் சமஅளவு கொண்டவையாகும். அதன் நீர் வெள்ளியைவிட வெண்மையானதாகும். அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்ததாகும். அதன் (விளிம்பிலிருக்கும்) கூஜாக்கள், (எண்ணிக்கையில்) விண்மீன்கள் போன்றவையாகும். யார் அதன் நீரை அருந்துகிறாரோ அவர் அதன்பின் ஒருபோதும் தாகமடையமாட்டார்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

- மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாகப் பின்வருமாறு சொன்னார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (எனது "அல்கவ்ஸர்" எனும்) தடாகத்தினருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்கவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள்.

உடனே நான் "இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்" என்பேன். அதற்கு "உமக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீர் அறிவீரா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தம் குதிகால்கள்மீது (தமது பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்றுகொண்டேயிருந்தார்கள்" என்று கூறப்படும்

4609. ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், "நான் எனது ("அல் கவ்ஸர்") தடாகத்தில் நீர் அருந்தும் பகுதியில் நின்றுகொண்டு யமன்வாசிகளுக்(கு முன்னுரிமை அளிப்பதற்)காக மற்றவர்களை விரட்டுவேன். யமன்வாசிகளுக்குத் தண்ணீர் கிடைப்பதற்காக எனது (கையிலுள்ள) தடியின் மூலம் மற்றவர்களை அடிப்பேன்" என்று சொன்னார்கள்.

அப்போது நபியவர்களிடம் அத்தடாகத்தின் அகலம் குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அது, எனது வசிப்பிட(மான மதீனா நகர)த்திலிருந்து "அம்மான்"வரை உள்ள தொலைவிற்கு அகலமானதாகும்" என்றார்கள்.

அத்தடாகத்தின் பானம் குறித்து வினவப்பட்டபோது, "அது, பாலைவிட வெண்மையானது; தேனைவிட இனிமையானது. சொர்க்கத்திலிருந்து நீளுகின்ற இரு வடிகுழாய்கள் அத்தடாகத்திற்குள் தொடர்ச்சியாகத் தண்ணீரைப் பாய்ச்சிக்கொண்டிருக்கும். அக்குழாய்களில் ஒன்று தங்கத்தாலானது; மற்றொன்று வெள்ளியாலானது" என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் "நான் மறுமை நாளில் (அல்கவ்ஸர்) தடாகத்தில் நீர் அருந்தும் பகுதியில் இருப்பேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.

வஸ்ஸலாம் , ஜசாக் அல்லாஹு ஹைரன் .  

No comments:

Post a Comment