Friday, February 13, 2015

வகுப்பு 2 - ஸுராஹ் அல் பாத்திஹா .


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

28/11/14.

அஸ்ஸலாமு அழைக்கும்  அன்பு சகோதரிகளே.......

என்ன படித்தோம் ......

-    ஸுராஹ் ளுஹா ( முற்பகல் ) – கிராஅத் – சகோதரி கதிஜா ஜாஸ்மின் .
-    ஸுராஹ் அல் பாத்திஹா சிறு குறிப்பு
-    ஸுராஹ் அல் பாத்திஹா வா / வா பொருள் + வா / வா விளக்கம்
-    ஸுராஹ் அல் பாத்திஹா தப்சீர் – அனைத்து சகோதரிகள்
-    துஆஹ் மனனம் – துன்பன் நீங்க / வேலை எளிதாக ....
-    அஸ்மா உல் ஹுஸ்னா – 1-10 .
-    உமர் ரலியல்லாஹு அன்ஹு – சிறு வரலாறு

 


விளக்கம் :-

7 வசனங்கள்

மக்காஹ் வில் 5 ஆவதாக இறங்கப்பட்ட ஸுராஹ் / முதலாவதாக முழுமை பெற்ற ஸுராஹ்.

fa – த – ஹ - ஆரம்பம் , துவக்கம் , திறப்பு …. தொழுகையின் ஆரம்பம் / குர் ஆனின் ஆரம்பம்.

குர் ஆனின் அன்னை என்றும் பெயர் - காரணம் - குர் ஆனின் அடித்தளம் ..

இந்த ஸுராஹ் வை புரிந்தால் ... இன்ஷா அல்லாஹ் குர் ஆன் முழுவதும் புரிந்து படிக்க இலகுவாக இருக்கும் .

பல பெயர்கள் :-

உம்முல் கிதாப் – குர் ஆனின் அன்னை.
அல் ஹம்து – புகழ்
அஸ் சலாஹ் – தொழுகை
அஸ் ஷிபா – நிவாரணி
அல் வாக்கிய – பாதுகாப்பு அளிப்பது
அர் ருகயாஹ் குணப்படுத்தும் சிகிச்சை .

பல பெயர்கள் – அதன் முக்கியத்துவத்தை குறிக்கிறது –( உதாரணம் – அல்லாஹ் – 99 / நபிக்கு 5 + )

ஹதீஸ் –

-    மதீனா பள்ளியில் அபூ சயீத் சஹாபிக்கு நபி கற்றுக்கொடுத்த ஸுராஹ் – புஹாரி - 4474
-    ஜிப்ரீல் அலை வானில் ,திறக்கபடாத வாசல் திறந்த சப்தம் , முன்னர் எந்த நபிக்கும் கொடுக்கப்படாத வசனங்கள் - இரு ஒளிகள் ( பாத்திஹா / அல் பகரா கடைசி 3வசனங்கள் ) முஸ்லிம் - 1472
-    தலைவருக்கு  தேள் கொட்டியதால் – பாத்திஹா வை வைத்து ஓதி பார்த்த சம்பவன் , நபியிடம் விளக்கம் , ஆடுகள் பரிசு .புஹாரி - 2276
-    தொழுகையில் நாம் ஓதும் அல் பாத்திஹா விற்க்கு அல்லாஹ் நமக்கு பதில் கூறுகிறான் ... முஸ்லிம் -655
-    பாத்திஹா இல்லாமல் தொழுகை இல்லை முஸ்லிம் - 651

அஊது பில்லாஹி ...... குறித்த வசனம் – 16:98 ….

ஷைத்தான் – வேர் சொல் ஷ – த – ன – தொலைவில் உள்ளான் – நன்மைகள் எட்டாத தொலைவில்

ரஜீம் – நன்மைகளில் இருந்து விரட்டப்பட்ட ..
 
( மற்ற வா / வா பொருள் வகுப்பில் கொடுக்கப்பட்டது., விளக்கங்களின் குறிப்புகள் மட்டுமே பதிகிறேன் )

அல் – குறிப்பிட்டு சொல்வது

ஹம்து – புகழும் , நன்றிகளும்

ரப் – படைத்து , வளர்த்து , பாதுக்காப்பவன்

 
ஆலமீன்ஆலம் – அகிலம் ., ஆலமீன் – அகிலங்கள் – மனிதன் , ஜின் , வானவர்கள்  , வானம் , பூமி , கோள்கள்.... அல்லாஹ்வே மிக அறிந்தவன் . விலங்குகளை இச்சொல் குறிக்காது.

பொருள் – 2 – அலாமத்-  அடையாளம் , கோடி – நாடு - / உலகம் படைத்தவன் – அல்லாஹ் .

ரஹ்மான் – ர – ஹ – மீம் – கருப்பை ( தாய் கருவை காப்பதை விட மேலாக ) ( .உலகில் உள்ள அனைத்து படைப்புகள் மீதும் அருள் ..... ( மழை , பசி காற்று , உணவு ....)

ரஹீம் -     ‘’    ‘’      ‘’    ‘’       இறைநம்பிக்கையாளர்களிடம் மீது மட்டும் கருணை காட்டுபவன் .....

( மறுமை , சுவனம் ..... )
மாலிக் – அதிபதி // மா.... நீட்டி – உரிமையாளன் . ம – சுருக்கி – அரசன் .

உரிமையாளம் – நிலம் / வீடு / வாகனம் .... ( சிறிய விஷயங்கள் )

அரசன் – நாடு / ஊர் ...... ( பெரிய விஷயங்கள் )

நியாய தீர்ப்பு நாளின் சிறிய , பெரிய - அமல்கள் / விஷயங்கள் / மக்கள் /-  அனைத்துக்கும் அவனே அதிபதி ......

 
நஹ்புதுஇபாதத் - வணங்குதல் – தொழுகை , நோன்பு , சகாத் , துஅஹ் , திக்ர் – வெளிப்படையான வணக்கம் .

நா – நாங்கள் வணங்குகிறோம் ( பன்மை ) - குடும்பம் , ஊர் , சமுதாயம் , அனைவர் , சகோதரத்துவம்

நல்ல எண்ணம் , நல்ல சிந்தனை , ஹராம் , ஹலால் – மறைவான , நன்மையான விஷயம் .....

இவை அனைத்தையும் அடக்கத்தோடும் , அன்போடும் செய்தல் –

அப்து – அடிமை .

நஸ்தயின் – உதவி தேடுகிறோம் – அமல்கள் செய்யவும் அல்லாஹ்வின் உதவி தேவை ..,

 இஹ்தினா – நடத்து – முகவரி தேடுதல் 3 வகை – நாம் விரும்புவது -  நம்மோடே வந்து வழி காட்டி உரிய இடம் வரை வருபவரை ---- அது போலவே இறைவனை பிடித்து ( இமான் முலம் ) சுவனம் வரை வழி நடத்தி செல் என்று அவனிடம் வேண்டுதல் ... அன்பாக , ஆதரவாக , கருணையோடு நடத்துதல் ( ரஹ்மான் , ரஹீம் )

 பொருள் 2 – ஹீ – தா – யா - ஹிதாயாஹ் ( யா – மறைந்து இருக்கும் ) – கல்வி வழிகாட்டல் ....

நிறைய பேருக்கு கல்வி கிடைக்கும் சில பேர் மட்டுமே அதன்படி வழிநடப்பார்கள் .....

கல்வி ஈஸி யாக கிடைக்கும் ஆனால் வழிகாட்டல் இறைவனிடம் இருந்து மட்டுமே கிடைக்கும் ....

அல்லாஹ் நேர் வழி காட்டிவிட்டால் – யாராலும் வழி தவறி செல்ல முடியாது

அல்லாஹ் நேர் வழி காட்டவில்லை என்றால் – யாராலும் நேர் வழி படுத்த முடியாது .

ஹிதாயாத் .... இரண்டு வகை

ஹிதாயா- இர்ஷாத் – கல்வி படித்தல் / அறிதல் .

  ‘’   ‘’   - தௌபீக் – படித்த கல்வியை நடைமுறை படுத்துதல் . இரண்டுமே முக்கியம் .....

 

சிராத்- - நேரான , கூர்மையான , நீளமான பாதை ....  கடினமான பாதை , no shortcuts.

 முஸ்தகீம் – நேரான , நிமிர்த்து செல்லும் பாதை , மேல் நோக்கி  , துனியா வாழ்வில் இருந்து உயர செல்வது .

படியில் இருந்து விழுவது போன்று ( உயரம் – விழுந்தால்  – அடி பலம் ) , இறை நினைவில் இருந்து தவறினால் வழி மாறி வெகு தூரம் சென்று விடுவோம் , நிதானமாக அவன் கயிற்றை இறுக பற்றி செல்ல வேண்டும் .

ஸுராஹ் அஹ்ராப் – 22 , 176

 

* அன் அம்த –
அருள் புரிந்தவர்கள் – கஷ்டப்பட்டு , சிரமப்பட்டு , கடினமான பாதையை கடந்தவர்கள் ( இப்போது அமைதியாக / நிம்மதியாக / சுகமாக இருப்பவர்கள் ) இம்மை / மறுமை .

நிஹ்மத் – அருள் – இறைநினைவு , அமல்கள் , இஸ்லாம் , ஹிதாயத் , தீன் , .......( வாழ் நாள் முழுவதும் தேவை )

மஹ்லூபி – கோபத்திற்கு உள்ளானவர்கள் --- அல்லாஹ் மற்றும் மலக்குகள் கோபம் / விளைவு தண்டனை ... உண்மை தெரிந்தே செய்தவர்கள் ....

* லாலீன் – வழி தவறியவர்கள் / சரி / தவறு பார்க்காமல்  முன்னவர்களை பின்பற்றியவர்கள் .... உண்மை தெரிந்துகொள்ளாமல் அவர்களை பின் தொடர்ந்தவர்கள் ...

 * உதாரணம் – பிஸ்கட் ஜார் / வீட்டில் 2 பிள்ளைகள் ( பெரிய / சிறிய ) / சாப்பிட கூடாது கட்டளை /பிஸ்கட் empty / பெரிய பிள்ளை தெரிந்தே செய்தது , சிறியது பார்த்து செய்தது )...

இந்த ஸுராவில் அல்லாஹ் 3 விதமான மனிதர்களை குறிப்பிடுகிறான்

 

அருள் பெற்றவர்கள் – இறை தூதர்கள் , வாய்மையாளர்கள் , வீர தியாகிகள் மற்றும் நல்லவர்கள் .
கோபத்திற்கு உள்ளானவர்கள் – யூதர்கள்
வழி தவறியவர்கள் – கிறிஸ்தவர்கள்.

இந்த மூன்று வகை மனிதர்களை பற்றியே அல்லாஹ் குர் ஆனில் விவரித்து கூறுகிறான் .... ,

இனி இன்ஷா அல்லாஹ்  நாம் என்ன படிக்கலாம் .......

-    அல் பாத்திஹா பல பெயர்களை படித்தல்
-    நாம் தொழுகையில் ஓதும் ஸுராஹ் பாத்திஹா விற்கு அல்லாஹ் நமக்கும் கூறும் பதிலை மனதில் பதிதல்
-    வேர் – எழுத்து மற்றும் வார்த்தைகான சிறு விளக்கங்களை தெரிந்து கொள்ளுதல்
-    ஹிதாயத் வகைகளை விளங்குதல்
-    3 வகை மனிதர்களை புரிதல் ...
-    குறிப்பிட்டு இருக்கும் ஹதீஸ்களை மற்றும் குர் ஆன் வசனங்களை வசித்தல் ..

விடுப்பட்ட விளக்கங்கள் மற்றும் சந்தேகங்களை இன்ஷா அல்லாஹ் வரும் வகுப்பில் பார்க்கலாம் .

ஜசாக் அல்லாஹு ஹைரன். வஸ்ஸலாம் .

 

 

 

 

 

 

 

 

,

 

 

 

No comments:

Post a Comment