நபித்துவத்திற்கு முன் 40 ஆண்டுகள் ............
நபி ஸல் அவர்களின் வரலாற்றை சரியான
ஆசிரியர்களுடைய புத்தகத்தில் இருந்து படிப்பது என்பது நமக்கு அல்லாஹ் செய்த அருள் .
அல்லாஹ்வின் அன்பின் வெளிபாடு , இதை படித்து சரியாக பயன்படுத்தினால் அல்லாஹ்
இம்மையிலும் , மறுமையிலும் நமக்கு கூலி கொடுப்பான் .
நபிகள் நாயகத்தின் சீராஹ் வை படிக்கும் நாம் ,
கல்விக்காக படித்தல் மற்றும் நிறைய மார்க்க விஷயங்கள் , வரலாற்று விஷயங்கள்
தெரிந்து கொள்ள முடியும் , என்பதற்காக மட்டும் நாம் இந்த சீராஹ் வின் வகுப்பில்
கலந்துகொண்டால் இந்த வகுப்புடைய பயனை நாம் முழுவதுமாக அடைய முடியாது , சீராஹ்
படிக்கும் நமக்கு முதல் அறிவுரை – நபி ஸல் அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பால் ,
பாசத்தால் , நபி ஸல் வாழ்க்கையை படித்து , அறிந்து , அந்த வாழ்கைக்கு ஏற்ப
எம்முடைய வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்பதின் வெளிபாடு தான் இவ்வகுப்பின் முக்கிய
நோக்கமாக இருக்க வேண்டும் . அது போக எனக்கு தெரியும் , இருந்தாலும் நிறைய
விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்று கல்விக்காக மட்டும் தான் என்று நாம்
அணுகினால் இந்த வகுப்புடைய உண்மையான பலனை நாம் அடைய முடியாது . நபி ஸல் மீது உள்ள
அன்பின் வெளிபடாகவே மட்டும் தான் நாம் இந்த சீராஹ் வகுப்பில் கலந்து கொள்ள
வேண்டும் , என்பதை மனதில் கொள்ள வேண்டும் .
பாடம் 3 – நபி ஸல் 8 வயதில் அப்துல் முத்தலிப் அவர்கள் இறந்த பிறகு ,
அவர்களின் மற்றொரு மகன் அபு தாலிப் அவர்கள் நபியை வளர்க்கும் பொறுப்பை
எடுக்கிறார்கள் . ( நபி ஸல் தந்தையின் சகோதரர் ). ஹிஜிரதுக்கு சில நாட்கள் முன்
வரை இவர்கள் நபியை பராமரித்து வந்தார்கள் . நபி ஸல் , அபு தாலிப் அவர்களுக்கு ,
வியாபாரத்தில் மற்றும் அனைத்து தேவைகளின் சமயத்தில் மிக உதவியாக இருக்கிறார்கள் .
நபியின் 12 – 13 வயதில் , அபுதாலிப் அவர்களோடு மற்றும் அவர்களின்
வணிக குழுவோடு ஷாம் தேசத்துக்கு வியாபாரம் செய்ய செல்கிறார்கள் . இது நபியின்
முதல் பயணம் .
2 கால
சூழ்நிலைகளில் , 2 தேசத்துக்கு வியாபாரம் செய்ய பயணம் செய்வது அரபிகளின் வழக்கம். பார்க்க – ( 106
-1/2 ) الشِّتَاءِ
وَالصَّيْفِ
கோடை
காலம் – வஸ்
ஷைப் – ஷாம் தேசம் – வியாபாரம் - பயணம் செல்வார்கள்.
குளிர்
காலம் – அஸ் ஸிதா – எமன் தேசம் – வியாபாரம் – பயணம் செல்வார்கள் .
சம்பவம்
– 1 துறவி பஹீரா
நபி
(ஸல்) அவர்களுக்கு 12 வயதாகும் போது அபூதாலிப் வியாபாரத்திற்காக
ஷாம் தேசம் சென்றார். அப்போது நபியவர்களையும்
தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர்கள் ஷாம் நாட்டின் புஸ்ரா நகரை வந்தடைந்தனர். அங்கு பஹீரா என்ற பிரபலமான துறவி ஒருவர்
இருந்தார். அவரது பெயர் ஜர்ஜீஸ் என்று சொல்லப்படுகிறது. அவர்
எங்கும் வெளியில் செல்ல மாட்டார். எனினும், இந்த வியாபாரக் கூட்டம் புஸ்ரா
சென்றதும் அவர்களை சந்திக்க வந்தார். வணிகக் கூட்டத்தைப் பிளந்துகொண்டு வந்து
சிறுவரான நபி (ஸல்)
அவர்களின்
கரத்தைப் பற்றிக்கொண்டு 'இதோ உலகத்தாரின் தலைவர்! இதோ
உலகத்தாரின் இறைவனுடைய தூதர்! இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட்கொடையாக
அனுப்புவான்' என்று கூறினார். அவரிடம் அபூதாலிபும்
குறைஷிப் பெரியவர்களும் 'இது எப்படி உமக்குத் தெரியும்?' என
வினவினர். அவர் 'நீங்கள் கணவாய் வழியாக வந்தபோது கற்களும் மரங்களும்
சிரம் பணிந்தன. அவை இறைத்தூதர்களுக்கே தவிர வேறு எவருக்கும் சிரம் பணியமாட்டா.
மேலும்,
அவரது புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப் போன்ற
இறுதித் தூதரின் முத்திரையைக் கொண்டும் நான் அவரை அறிவேன். எங்களது வேதங்களில் அது
பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது' என்று கூறினார். பிறகு
அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இச்சிறுவரை ஷாமுக்கு அழைத்துச் சென்றால்
அங்குள்ள ரோமர்கள் மற்றும் யூதர்களால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, இவரை
இங்கிருந்தே மக்கா திருப்பி அனுப்பி விடுங்கள் என்று பஹீரா அபூதாலிபிடம் கூறினார்.
அதற்கினங்க அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை சில வாலிபர்களுடன் மக்காவுக்கு அனுப்பி
வைத்தார்.
அல்லாஹ்
வடிவமைத்த படி நபியின் வாழ்க்கை செல்கிறது .
நபி ஆடு மேய்த்து
அதில் வரும் கூலியை அபு தாலிப் அவர்களிடம்
கொடுப்பார்கள் . இவ்வுலகில் அனுப்ப ப்பட்ட அனைத்து நபிமார்களும் ஆடு மேய்ப்பவர்களாக
இருந்தார்கள் , ஆடுகளை வளர்ப்பவர்களாக அனைத்து நபிகளும் இருந்து இருக்கிறார்கள் .
அது போலவே நபியும் .... ஏன் ? காரணம் என்ன ?
ஒவ்வொரு ஆட்டின்
தன்மை வேறு , அதை வளர்க்கும் போது , எப்படி அனைத்தையும் ஒற்றுமை படுத்துவது ,
மற்றும் பொறுமை , மென்மை ,வீரம் , கடின உழைப்பு போன்ற பல விஷயங்களை கற்று கொள்ள
முடியும் என்பதால் ... இது ஒரு சமூகத்தை ஒற்றுமையாக , மென்மையாக , ஒழுக்கத்தோடு
கொண்டு செல்ல உதவியாக இருக்கும். சுப்ஹான்னல்லாஹ்..
நபி சிறு
வயதிலேயே அவர்கள் கரத்தால் உழைத்து , தந்தைக்கு உதவி செய்யும் பண்பை அல்லாஹ்
வளர்கிறான் . ஸுராஹ் லுஹா வில் அல்லாஹ் இந்த வளர்ப்பை சொல்கிறான் . ( மனதில் கவலை
கொண்ட சமயம் இந்த ஸுராஹ் வை படித்து பயன் பெறலாம் )
நபி
(ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே எல்லா மக்களிடமுள்ள நற்பண்புகள் அனைத்தையும்
தனக்குள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தார்கள். நேரிய சிந்தனை, ஆழ்ந்த பார்வை, நுண்ணறிவு
அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தார்கள். நீண்ட மௌனத்தால் ஆழ்ந்து சிந்தித்து
உண்மையை அறிவார்கள். தங்களது முதிர்ச்சியான அறிவாலும் தூய இயற்கை குணத்தாலும் மனித
வாழ்வின் பகுதிகளையும் மக்களின் செயல்களையும் சமூகத்தின் நிலைகளையும் தெளிவாக
ஆராய்ந்து, மக்களிடம் காணப்பட்ட மூடப் பழக்க
வழக்கங்களை வெறுத்து ஒதுக்கினார்கள். மக்களுடன் மதி நுட்பத்துடன் பழகுவார்கள்.
அவர்கள் நன்மையானவற்றில் ஈடுபடும்போது தானும் கலந்து கொள்வார்கள். தீமையானவற்றில்
ஈடுபட்டால் அவர்களை விட்டும் தனித்து விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் மது
அருந்தியதில்லை. சிலைகளுக்குப் பலியிடப்பட்டதை உண்டதில்லை. சிலைகளுக்கான
விழாக்களில் கலந்து கொண்டதில்லை. சிலைகளை முற்றிலுமாக வெறுத்தார்கள். லாத், உஜ்ஜாவைக் கொண்டு சத்தியம் செய்வதைச் சகித்துக்கொள்ள
மாட்டார்கள்.
இறைவனின்
பாதுகாப்பு அவர்களைச் சூழ்ந்திருந்தது. உலக இன்பங்களின் மீது ஆசை தோன்றும்போதும்
தவறான அறியாமைக்கால பழக்க வழக்கங்களின்மீது ஆவல் ஏற்படும்போதும் அவற்றிலிருந்து
அல்லாஹ்வின் அருளால் தடுக்கப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அறியாமைக்கால செயலை செய்ய வேண்டுமென நான் இருமுறை மட்டுமே
விரும்பினேன். அந்த இருமுறையும்
அல்லாஹ் என்னைத் தடுத்துவிட்டான்.
பிறகு அல்லாஹ் தூதுத்துவத்தை எனக்கு அருளும் வரை அந்த எண்ணம் ஏற்பட்டதே இல்லை. ஓர்
இரவு மக்காவின் மேற்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவரிடம் என்
ஆடுகளை நீ பார்த்துக் கொள். மக்காவில் வாலிபர்கள் இராக்கதை பேசுவது போன்று நானும் பேசி வருகிறேன்
என்று நான் கூறினேன். அவர் ஒப்புக் கொண்டார். நான் வெளியேறி மக்காவினுள் நுழைந்து
அதில் முதல் வீட்டைக் கடந்தேன். அங்கு இசை சப்தத்தைக் கேட்டு அது என்னவென்று
விசாரித்தேன். அதற்கு மக்கள் இன்ன ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடிந்து இன்று
முதலிரவு என்று கூறினார்கள். நான் அதைக்கேட்க அமர்ந்தவுடன் நான் செவியேற்காத
வகையில் அல்லாஹ் என்னைத் தடுத்து தூங்கச் செய்துவிட்டான். இறுதியில் சூரிய
வெப்பம்தான் என்னை எழுப்பியது. எனது தோழரிடம் நான் சென்றபோது அவர் என்ன நடந்ததென
விசாரிக்க நடந்ததைக் கூறினேன். அதற்குப் பிறகு நான் எந்தவொரு தீய செயலையும் செய்ய
எண்ணியதேயில்லை.'
(முஸ்தத்ரகுல்
ஹாகிம்) ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவிப்பதாவது: கஅபாவை புதுப்பிக்கும்
பணியின்போது நபி (ஸல்) அவர்களும் அப்பாஸும் கல்லை எடுத்துக் கொடுக்கும் பணியைச்
செய்தார்கள். அப்போது அப்பாஸ் நபி (ஸல்) அவர்களிடம் உங்களது கீழாடையைக் கழற்றி புஜத்தில் வைத்துக்
கொண்டால் கற்கள் அழுத்தாமலிருக்கும் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தனது
ஆடையைக் கழற்றி (புஜத்தில் வைத்தவுடன்) கண்கள் மேலே சொருக மயக்கமடைந்து
விட்டார்கள். பிறகு அவர்கள் தெளிவடைந்து எனது கீழாடை! எனது கீழாடை! என்று கூற, நபி (ஸல்) அவர்களுக்கு அப்பாஸ் ஆடையை உடுத்தி
விட்டார்கள். அதற்குப்பின் அவர்களது மறைவிடத்தை எவரும் பார்த்ததில்லை. நபி (ஸல்)
அவர்கள் தங்களது கூட்டத்தாரிலேயே மிக இனிய குணம், உயர்
பண்பு, சிறந்த ஒழுக்கம், மனிதாபிமானம் உடையவர்களாகவும், மேலும், மென்மையானவராகவும், நன்மை செய்யக்கூடியவராகவும், அமானிதம் பேணி வாக்குறுதியை முழுமையாக
நிறைவேற்றுபவராகவும் இருந்தார்கள். இந்த உயர் பண்புகளைக் கண்ட அவர்களது
சமூகத்தார்கள் அவர்களை அல் அமீன் நம்பிக்கையாளர்
என்று அழைத்தனர். அவர்கள் பிறர் சிரமங்களை தானே தாங்கிக் கொள்வார்கள்; இல்லாதோருக்கும் எளியோருக்கும் கொடுப்பார்கள்; விருந்தினரை உபசரிப்பார்கள் சிரமத்தில்
தவிப்பவர்களுக்கு உதவுவார்கள். இவ்வாறுதான் அன்னை கதீஜா (ரழி), நபி (ஸல்) அவர்களைப் பற்றி வர்ணிக்கிறார்கள்.
(ஸஹீஹுல் புகாரி).
அல் அமீன் –
நேர்மையாளர் , அஸ் சாதிக் – உண்மையாளர் – என்று மக்கள் நபியை அழைப்பார்கள் .
சம்பவம்
2 –
ஃபிஜார் போர்
நபி (ஸல்)
அவர்களின் இருபதாவது வயதில் உக்காள் சந்தையில் குறைஷியரும் கினானாவும் கைஸ்
அய்லான் குலத்தவருடன் சண்டையிட்டனர். அதற்கு ஹர்புல் ஃபிஜார் என்று சொல்லப்படும்.
கினானா – கைஸ் (
ஹௌசான் ) – குறைஷிகள் – 3 பேரும் போர் செய்ய தயார்.
நபி (ஸல்)
அவர்கள் இதில் கலந்துகொண்டு தந்தையின் சகோதரர்களுக்கு அம்பெடுத்துக் கொடுக்கும்
பணியைச் செய்தார்கள். (இப்னு ஹிஷாம்).
சம்பவம்
– 3
சிறப்புமிகு ஒப்பந்தம்
மேற்கூறப்பட்ட
போருக்குப்பின் சங்கைமிக்க மாதமான துல் கஃதாவில் ஹில்ஃபுல் ஃபுழூல் எனும் சிறப்புமிகு ஒப்பந்தம்
ஏற்பட்டது. குறைஷி கோத்திரத்தைச் சேர்ந்த ஹாஷிம், முத்தலிப், அஸத் இப்னு அப்துல் உஜ்ஜா, ஜுஹ்ரா இப்னு கிலாப், தைம் இப்னு முர்ரா ஆகிய
குடும்பத்தார் இதற்கான ஏற்பாட்டைச் செய்தனர். இவர்களில் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் வயது முதிர்ந்தவராகவும்
மதிப்புமிக்கவராகவும் இருந்ததால் அவர் வீட்டில் அனைவரும் ஒன்று கூடினர்.
மக்காவாசிகளாயினும் வெளியூர்வாசிகளாயினும் அவர்களில் எவருக்கேனும் அநீதி இழைக்கப்
பட்டால் அவருக்கு முழுமையாக உதவி செய்து நீதி கிடைக்கச் செய்வதில் அனைவரும்
இணைந்து முயற்சிக்க வேண்டும் என உடன்படிக்கை செய்து கொண்டனர். இவ்வுடன்படிக்கையில்
நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள். இவ்வுடன்படிக்கையில் கலந்து கொண்டது
பற்றி நபித்துவம் கிடைத்ததற்குப் பின் நபி (ஸல்) இவ்வாறு கூறினார்கள்: அப்துல்லாஹ்
இப்னு ஜத்ஆன் வீட்டில் நடந்த ஒப்பந்தத்தில் நான் கலந்து கொண்டேன். எனக்கு செந்நிற
ஒட்டகைகள் கிடைப்பதைவிட அந்த ஒப்பந்தத்தில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக
இருக்கிறது. இஸ்லாமின்
வருகைக்குப் பின்பும் எனக்கு
(அதுபோன்ற) ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நான் ஒப்புக் கொள்வேன்.
(இப்னு ஹிஷாம்) இந்த உடன்படிக்கையின் அடிப்படைத் தத்துவம் அறியாமைக் காலத்தில்
இனவெறியினால் ஏற்பட்ட அநீதங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். இவ்வுடன்படிக்கை
ஏற்படக் காரணம்: ஜுபைத் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வணிகப் பொருட்களுடன்
மக்கா வந்தார். ஸஹ்மாவைச் சேர்ந்த ஆஸ் இப்னு வாயில் அவரிடமிருந்து சரக்குகளை
வாங்கிக் கொண்டு அதற்கான விலையைக் கொடுக்க மறுத்துவிட்டார். பறிகொடுத்தவர் தனது நேச
கோத்திரங்களாகிய அப்துத் தார், மக்ஜூம், ஸஹ்ம் ஆகியோரிடம் சென்று உதவி கேட்டபோது எவரும் அவரது
கோரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. உடனே அவர் அபூ குபைஸ் மலையில்
ஏறிக்கொண்டு தனக்கிழைக்கப்பட்ட அநீதத்தை உரத்த குரலில் கவிதையாகக் கூறினார். அதைக்
கேட்ட ஜுபைர் 'இப்னு அப்துல் முத்தலிப் ஏன் இவ்வாறு இவர்
கைவிடப்பட்டார்' என
வினவினார்கள். அப்போதுதான் மேற்கூறப்பட்ட கோத்திரத்தார் இணைந்து இச்சிறப்புமிகு
ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். அதன் பின் அனைவரும் ஆஸ் இப்னு வாயிலிடமிருந்து அந்த
பாதிக்கப்பட்டவருக்கு அவரது உரிமையை பெற்றுத் தந்தனர்.
சம்பவம்
4
உழைக்கும்
காலம்
நபி
(ஸல்) அவர்கள் வாலிபத்தின் ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட தொழில் எதையும் செய்து
வரவில்லை. எனினும், ஸஅது
கிளையாரின் ஆட்டு மந்தையை மேய்த்ததாக பல அறிவிப்பு களிலிருந்து தெரிய வருகிறது.
அவ்வாறே மக்காவாசிகளின் ஆடுகளையும் மேய்த்து கூலியாக தானியங்களைப் பெற்று
வந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி) வாலிபமடைந்தவுடன் ஆடு மேய்ப்பதை விட்டுவிட்டு ஸாம்ப்
இப்னு அபூஸாம்ப் அல் மக்ஜூமி
என்பவருடன் இணைந்து வணிகம் செய்யத் தொடங்கினார்கள். அவருக்கு நம்பிக்கைக்குரிய
மிகச் சிறந்த தொழில் நண்பராக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். மக்கா வெற்றி
கொள்ளப்பட்ட நாளன்று அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். என் சகோதரரே!,
என் தொழில் நண்பரே!'
எனக் கூறி அவரை நபி (ஸல்) அவர்கள் வரவேற்றார்கள். (ஸுனன் அபூதாவூது, இப்னு மாஜா, முஸ்னது அஹ்மது)
நபி
(ஸல்) அவர்கள் 25 வது
வயதில் கதீஜா அவர்களின் வணிகப் பொருட்களுடன் ஷாம் சென்றார்கள். இதுபற்றி இப்னு
இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: கதீஜா பின்த் குவைலித் சிறப்பும் வளமும் மிக்க வியாபாரப்
பெண்மணியாகத் திகழ்ந்தார். தனது வியாபாரத்திற்காக ஆட்களை வேலைக்கு அமர்த்தி அதில்
கிடைக்கும் இலாபத்தின் ஒரு பகுதியை அவர்களுக்குத் தருவார். நபி (ஸல்) அவர்களின்
வாய்மை, நம்பகத்தன்மை
போன்ற நற்பண்புகளைப் பற்றி அன்னார் கேள்விப்பட்ட போது அவர்களை வரவழைத்து 'எனது அடிமை மய்ஸராவுடன் வணிகப் பொருட்களை
எடுத்துக் கொண்டு ஷாமில் வணிகம் செய்து வரவேண்டும். மற்ற வணிகர்களுக்குக் கொடுத்து
வந்ததைவிட சிறப்பான பங்கை உங்களுக்குத் தருகிறேன்' என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதை நபி (ஸல்)
அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.
கதீஜாவை
மணம் புரிதல்
நபி
(ஸல்) அவர்கள் சிறப்பாக வணிகம் செய்து பெரும் வருவாயுடன் மக்கா திரும்பினார்கள்.
கதீஜா தங்களது பொருளில் இதற்குமுன் கண்டிராத பெரும் வளர்ச்சியைக் கண்டார். மேலும் மய்ஸராவும், தான் நபி (ஸல்) அவர்களிடம் கண்ட நற்பண்புகள், உயர் சிந்தனை, பேச்சில் உண்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை கதீஜாவிடம் விவரித்தார். கணவரை
இழந்திருந்த கதீஜாவை பல குறைஷித் தலைவர்கள் மணமுடிக்க விரும்பியபோது அதனை மறுத்து
வந்த கதீஜா தனக்கு ஏற்ற கணவர் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் என முடிவெடுத்தார். தனது
எண்ணத்தை தோழி நஃபீஸா
பின்த் முநப்பிஹ் இடத்தில் தெரிவித்தார். நஃபீஸா நபி (ஸல்) அவர்களிடம் கதீஜாவின்
விருப்பத்தைக் கூற நபி (ஸல்) அவர்களும் அதை ஒப்புக் கொண்டார்கள். நபி (ஸல்)
அவர்கள் தனது தந்தையின் சகோதரர்களிடம் இதுபற்றிக் கூறினார்கள். அவர்கள் கதீஜாவின்
தந்தையுடைய சகோதரரிடம் பேசி திருமணத்திற்கு முடிவு செய்தார்கள். ஷாமிலிருந்து
திரும்பிய மூன்றாம் மாதத்தில் அவ்விருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதில் ஹாஷிம்
கிளையாரும் முழர் கோத்திரத்தின் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது கதீஜா
(ரழி) அவர்களுக்கு வயது 40, நபி (ஸல்) அவர்களின் வயதோ 25! அவர் அறிவாலும் செல்வத்தாலும்
குடும்பத்தாலும் மிகச்சிறந்த பெண்மணியாக விளங்கினார். நபி (ஸல்) அவர்களுக்கு இவரே
முதல் மனைவி. இவர் மரணித்த பின்பே நபி (ஸல்) அவர்கள் வேறு பெண்ணை மணமுடித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் பிள்ளைகளில் இப்றாஹீமைத் தவிர அனைவரும் அன்னை கதீஜாவுக்குப் பிறந்தவர்களே!
முதல் குழந்தை காஸிம்.
இவருடன் இணைத்தே நபியவர்களுக்கு அபுல் காஸிம்| என்ற புனைப்பெயர் கூறப்படுகிறது. பிறகு ஜைனப், ருகைய்யா, உம்மு குல்ஸூம், ஃபாத்திமா, அப்துல்லாஹ் ஆகியோர் பிறந்தனர். இந்த அப்துல்லாஹ்வுக்கு
தய்யிப், தார் என்ற
வேறு பெயர்களும் உண்டு. ஆண் மக்கள் அனைவரும் சிறு வயதிலேயே மரணமடைந்தனர். பெண்
மக்கள் அனைவரும் இஸ்லாம் வரும் வரை வாழ்ந்து, இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரத்தும் செய்தார்கள்.
ஃபாத்திமாவைத் தவிர்த்து மற்ற மூவரும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே மரணமடைந்து
விட்டனர். நபி (ஸல்) அவர்களின் மரணத்துக்குப் பின் ஆறுமாதம் கழித்து ஃபாத்திமா
மரணமடைந்தார்.
3716. அதற்கு ஃபாத்திமா, 'நபி(ஸல்) அவர்கள் (முதல் முறை) என்னிடம் இரகசியமாகப் பேசியபோது, தமக்கு
ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள்.
அதனால் நான் அழுதேன். பிறகு (இரண்டாம் முறை) இரகசியமாகப் பேசியபோது அவர்களின்
குடும்பத்தாரில் நானே அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லப் போகும் முதல் ஆள்
என்று கூறினார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியோடு) சிரித்தேன்" என்று
பதிலளித்தார்கள்.
1573. இம்ரானின் மகள் மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்களிலேயே சிறந்தவராவார்.
(தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்
1575. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள்.
‘இறைத்தூதர் அவர்களே! இதோ,
கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில்
குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து
கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும்
என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ
காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று
கூறினார்கள்.
1577. கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின்
வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அவரைப்
பார்த்ததில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள்.
அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு
அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி
(ஸல்) அவர்களிடம், ‘உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து
கொள்கிறீர்களே” என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், ‘அவர் (புத்திசாலியாக) இருந்தார்; (சிறந்த
குணமுடையவராக) இருந்தார். (இப்படி,
இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு
அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது” என்று பதில் கூறினார்கள்.
3821. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஹாலா பின்த்து குவைலித் - கதீஜா(ரலி)
அவர்களின் சகோதரி - இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே
நபி(ஸல்) அவர்கள் (கதீஜா - ரலி - அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட
காரணத்தால்) கதீஜா(ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, 'இறைவா!
இவர் ஹாலாவாக இருக்கட்டும்" என்று கூறினார்கள். உடனே நான் ரோஷமடைந்துவிட்ட, தாடைகள்
சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரைவிடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ்
கொடுத்துவிட்டானே (அப்படியிருக்க,
இன்னும் ஏன் அவரையே நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள்.)" என்று கேட்டேன்.
கஅபாவை
செப்பனிடுதல்
நபி
(ஸல்) அவர்கள் நடுவராகுதல்
நபி
(ஸல்) அவர்களின் 35வது வயதில்
குறைஷியர்கள் கஅபாவைப் புதுப்பித்தனர். கஅபா, ஓர் ஆள் உயரத்திற்குப் பாறைகளால்
கட்டப்பட்டிருந்தது. அது இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்தே மேல்முகடு
இன்றி ஒன்பது முழம் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் கட்டடங்களும் சிதிலமடைந்து
இருந்தன. இந்நிலையில் கஅபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம்
திருடிச் சென்றது. நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்
மக்காவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஅபாவின் கட்டடம் மேலும்
பாதிப்படைந்தது. அதன்மீது கொண்டிருந்த மரியாதையின் காரணமாக குறைஷியர்கள் அதைப்
புதுப்பிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர். அதனை ஹலாலான (தூய்மையான)
வருமானத்தைக் கொண்டே செப்பனிட வேண்டும்; வட்டி, விபசாரம், திருட்டு போன்ற பொருட்களின் மூலமாக
செப்பனிடக் கூடாது என அனைவரும் கூடி முடிவெடுத்தனர். இந்நிலையில் பழைய கட்டடத்தை
எவ்வாறு இடிப்பது என அனைவரும் அஞ்சினர். வலீத் இப்னு முகீரா மக்ஜூமி கடப்பாரையை எடுத்து 'அல்லாஹ்வே! நான் நன்மையை நாடியே இதைச்
செய்கிறேன்' என்று கூறி ருக்னுல் யமானி, ருக்னுல் ஷாமியின் பகுதிகளை
இடித்தார். அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாததைக் கண்ட குறைஷியர்கள் அச்சம்
தெளிந்து, அவருடன்
இணைந்து இடித்தனர். இறுதியாக, இப்றாஹீம் (அலை) அவர்கள் அமைத்த அஸ்திவாரம் தென்பட்டது.
பிறகு கஅபாவை பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ஒரு பகுதியைக் கட்ட
வேண்டுமென முடிவு செய்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ஷபாகூம் என்ற ரோமானிய பொறியியல்
வல்லுனரின் மேற்பார்வையில் கட்டத் தொடங்கினர். இறுதியாக, ஹஜ்ருல்
அஸ்வதின்' இடம் வந்தபோது அதை அதற்குரிய
இடத்தில் வைப்பது யார் என்பதில் பிரச்சனை எழுந்தது. அது பற்றிய சர்ச்சை நான்கு
அல்லது ஐந்து நாட்களாகத் தொடர்ந்தது. சர்ச்சை கடுமையாகி போராக மாறிவிடும் அபாயம்
எழுந்தது. அப்போது அபூ
உமய்யா இப்னு முகீரா - மக்ஜூமி அம்மக்களிடம், 'இப்புனிதப் பள்ளிவாசலில் முதன்முதலாக
நுழைபவரை நடுவராக்கி அவரது ஆலோசனையை ஒப்புக் கொள்ளுங்கள்' என்று கூறினார். இக்கருத்தை அனைவரும் மனமார ஏற்றனர்.
அவர்கள் ஆவலுடன் காத்திருக்க நபி
(ஸல்) அவர்களே முதலாமவராக
நுழைந்தார்கள். அவர்களைக் கண்ட அம்மக்கள் 'இதோ முஹம்மது வந்துவிட்டார். இவர்தான்
நம்பிக்கைக்குரியவர். இவரை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்' என்றனர். நபி (ஸல்) அவர்கள்
தங்களுக்கு அருகில் வந்தவுடன் விவரத்தைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ஒரு விரிப்பை
வரவழைத்து அதன் நடுவே ஹஜ்ருல் அஸ்வதை வைத்தார்கள். பிறகு சச்சரவிட்டுக்
கொண்டிருந்த கோத்திரத்தாரின் தலைவர்களை அழைத்து விரிப்பின் ஓரங்களைப் பிடித்துத்
தூக்குமாறு கூற, அதை
அவர்கள் தூக்கினர். கஅபாவுக்கு அருகில் கொண்டு வந்தவுடன் தனது கரத்தால் ஹஜ்ருல்
அஸ்வதை எடுத்து உரிய இடத்தில் வைத்தார்கள். இது அனைவரும் ஒப்புக் கொண்ட மிக அழகிய
தீர்வாக அமைந்தது. குறைஷியரிடம் ஹலாலான (தூய்மையான) செல்வம் குறைவாக இருந்ததால்
வடபுறத்தில் ஆறு முழங்கள் அளவு விட்டுவிட்டு கஅபாவை கட்டி விட்டார்கள். அந்த
இடத்துக்கு ஷஹதீம் என்றும் ஷஹஜர் என்றும் கூறப்படுகிறது. தாங்கள் விரும்பாத
எவரும் கஅபாவினுள் நுழையக் கூடாது என்பதற்காக கஅபாவின் வாயிலை உயரத்தில்
அமைத்தார்கள். கஅபாவை 15 முழம்
வரை உயர்த்தியவுடன் ஆறு தூண்களை நிறுவி அதற்கு முகடு அமைத்தார்கள்.
இவ்வமைப்பின்படி கஅபா ஏறக்குறைய சதுரமாக அமையப் பெற்றது. அதன்
உயரம் 15 மீட்டர்
ஆகும். ஹஜ்ருல் அஸ்வத் உள்ள பகுதி மற்றும் அதன் எதிர்ப்புற பகுதியின் அகலம் 10 மீட்டர்
ஆகும். தவாஃப் செய்யும் இடத்திலிருந்து ஹஜ்ருல் அஸ்வத் 1.5 மீட்டர்
உயரத்தில் வைக்கப்பட்டிருந்தது. கஅபாவின் வாசலுள்ள பகுதியும் அதன் பின்பகுதியும் 12 மீட்டர்
அகலமாகும். கஅபாவின் வாசல் தரையிலிருந்து 2 மீட்டர் உயரத்திலிருக்கிறது. கஅபாவின்
அஸ்திவாரத்தைச் சுற்றி சிறிய முட்டுச்சுவர் கட்டப்பட்டது. அதன் உயரம் 25. செ.மீ.
(கால் மீட்டர்) அதன் அகலம் 30
செ.மீ. இதற்கு ஷாதர்வான் என்று
சொல்லப்படும். இதுவும் கஅபாவைச் சேர்ந்த பகுதிதான். எனினும், குறைஷியர்கள்
அதைத் தவிர்த்து உள்ளடக்கிக் கட்டி விட்டனர். (தபரீ, இப்னு ஹிஷாம்)
இன் ஷா அல்லாஹ் அடுத்த வகுப்பில் தொடரும்
...............
No comments:
Post a Comment