Friday, February 13, 2015

வகுப்பு 1 - அறிமுகம் .


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதரிகளே .........

என்ன படித்தோம் :-

-    அல்லாஹ்வை நினைவுகூறும் சபையில் பல ஆயிரம் வானவர்கள் துஆஹ் செய்வார்கள் .
-    அல்லாஹ் அவன் வேதத்தை படிக்கும் நமக்கு இலகுவாக்கி  இருக்கிறான் என்பதை மனதில் பதிதல் ....
-    வேர் எழுத்து . ஒவ்வொரு எழுத்தும் பல நூறு பொருள் தரும் .
-    1 வார்த்தைக்கு 2 / 3 வேர் எழுத்து இருக்கும் .
-    உதாரணம் – الرَّحِيمِ ر   ح    م
-    அல்லாஹ் குரானை அரபு மொழியில் தேர்ந்தேடுததின் காரணம் .
-    அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கல்வி கற்க பட்ட சிரமம்களின் சிறு சம்பவம்




விளக்கம் :-

குரான் – வேர் சொல்  ا  ر ق – வாசித்தல் , படித்தல் , ஓதுதல் ...( காரி , கிராஅத் , இக்ரா )

ஆன் – மிகுதியாக , அதிகமாக , திரும்ப திரும்ப ..... ரஹ்மான் , ராப்பான் ....

ن   ر   ق – ஒன்று சேர்த்தல் , இணைதல் ..

சூராஹ் – அத்தியாயம் -   ر   و   س  - வேலி , சுற்றுசுவர் , அணை ....

அணைத்து சூராஹ் களையும் உலகில் உள்ள அனைத்து பேச்சுகளை விட மிக உயரிய மதிப்பு கொடுத்து அல்லாஹ் உயர்த்தியுள்ளான் ...

பொருள் 2 – அலங்கரித்து வைத்தல் .... வசனங்களை கொண்டு – 114 சூராஹ் ...

ஆயத் – வசனம் – அடையாளம் / குறிப்பிட்டு சொல்லுதல் / ஒவ்வொரு மனிதக்கும் பாடம் / அற்புதம் / வாக்கியம் / சொல் – 6236 / 6666 வசனம் ....

வார்த்தை – வீசி வெளிபடுத்துதல் / 77,437 – வார்த்தைகள் ......

எழுத்துகள் – முனை , விளிம்பு , ( பல விஷயங்களை தன்னுள் கொண்டுள்ளது )

ஹரக – இயக்கம் , அசைவு , நகர்தல் .( தெளிவாக ஓத உதவி )

ஜுஸ் – பாகம் , பகுதி ......

மேற்படி விளக்கம் -

படிப்படியாக 23 வருடங்களாக இறக்கப்பட்டது ...
பெயர்கள் – புர்கான் – பிரிதரிவித்தல் ( சரி / தவறு ) (நன்மை / தீமை )
அல் கிதாப் – வேதம்
அத் திக்ர் – நினைவுக்குருதல்
தன்சில் – படி படியாக இறங்கியது ...

அல்லாஹ் குரானுக்கு கொடுக்கும் அந்தஸ்து --- மற்ற நபிமார்களுக்கு இறக்கப்பட்டதை விட சிறந்தது ....

சூராஹ் யூனுஸ் – 10:37. இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமேயில்லை.

சூராஹ் ஸாத்  38:29. (நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.

படைப்புகளில் சிறந்த படைப்பு மனிதன் , அதில் சிறந்த மனிதன் குரான்னோடு அதிக தொடர்பில் வாழும் மக்கள் ..... (people of the quran ) , தானும் கற்று பிறருக்கும் கற்று கொடுப்பவர்கள் ....

அல்லாஹ்விற்கும் நமக்குமான தொடர்பு குரான் ...

ஹதிஸ் -

அல்லாஹ்வை நெருங்க குரான் கயிரை இறுக்கமாக பிடித்து வைத்தல் .....

இனி நாம் என்ன படிக்கலாம் :-

-    வேர் எழுத்து , பொருள் ....
-    குர் ஆன் ஓதுவதின் சிறப்பு குறித்து வரும் ஹதீஸ்களை படித்தல்  .
-    குர் ஆனின் பெயர்கள் .

வஸ்ஸலாம் ....

No comments:

Post a Comment