بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ
الرَّحِيمِ
அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதரிகளே.......
என்ன படித்தோம் ......
v கிராஆத் - சகோதரி பர்ஹானா - ஸுராஹ் தீன் ( அத்தி ) –
v ஸுராஹ் பஃலக் சிறு குறிப்பு
v ஸுராஹ் பஃலக் வா / வா பொருள் + வா / வா விளக்கம் - சகோதரி ரினோசா
v ஸுராஹ் பஃலக் தப்சீர் – சகோதரி பரீனா
v நபிகள் நாயகம் வரலாறு – பிறப்பு – பகுதி 2 – சகோதரி கதிஜா ஜாஸ்மின்
v துஆஹ் மனனம் – கண்ணூரில்லிருந்து பாதுக்காப்பு - துஆஹ் .
v அஸ்மா உல் ஹுஸ்னா – 31-35
விளக்கம் :-
5 வசனங்களை
கொண்டது , மக்கா வில் இறக்கப்பட்டது.ஸுராஹ் பீல் பின் இறக்கப்பட்டது .
ஸுராஹ் பஃலக் , ஸுராஹ் நாஸ் – கடைசி இரண்டு
ஸுராஹ் கள் ., ஒன்றாகவே சொல்லப்படும் ஸுராஹ் .
முஅவ்விதத்தைன் – இறைவனிடம் பாதுகாப்புத் தேடும்
இரு அத்தியாயங்கள் – என்று இவ்விரண்டுக்கும் பெயர் .
ஸுராஹ் பஃலக் – வெளி தீங்கில் இருந்து பாதுகாப்பு
ஸுராஹ் நாஸ் – உள்ளே உள்ள தீங்கில் இருந்து
பாதுகாப்பு
எதிரிகள் செய்த சூனியத்தில் நபிக்கு இலேசான
பாதிப்பு ஏற்ப்பட்ட சமயத்தில் அல்லாஹ் இதை இறக்கி பாதுகாவல் தேட ஓத சொன்ன ஸுராஹ் .
வா / வா சிறு விளக்கம் –( மற்ற வா / வா பொருள்
வகுப்பில் கொடுக்கப்பட்டது., விளக்கங்களின்
குறிப்புகள் மட்டுமே பதிகிறேன் ).
قُلْ – கூறுவீராக .
1.
நபிக்கு படிக்க , 2. மற்றவர்களிடம்
கூற / மற்றவர்களுக்கு கற்று கொடுக்க , நபிக்கு கட்டளை.
أَعُوذُ - பாதுகாப்பு /
முழுவதுமாக அவனிடமே சார்ந்து பாதுகாவல் தேடுதல் .கண்ணுக்கு தெரிந்த / தெரியாத தீங்கில் இருந்து
முழுவதுமாக பாதுகாப்பு ,/ அனைத்தையும் படைத்த ஒருவனிடம் பாதுகாப்பு தேடுதல் .
الْفَلَقِ - வைகறை ,
- கிழித்து கொண்டு
வெளிவருதல்
- இருளை கிழித்து
பகல் வெளிவருதல் - விதையை உடைத்து செடி வெளி வருதல்
- மழை – மேகம் கிழித்து வருதல்
- தாய் – கரு , குழந்தை
- BIG BANG THEORY – பேறு வெடிப்பு – உலகம்
அனைத்துக்கும் பின்
படைப்பு வருகிறது , அனைத்து கிழிதலிலும் ஆபத்து இருக்கிறது ., அனைத்தையும்
படைத்தவனிடத்தில் பாதுகாப்பு தேடுவது .( MASTER OF
FALAQ ) ., வைகறையின் இரட்சகன் .
شَرِّ தீமை எதிர்மறை நன்மை ( ஹைர் )
خَلَقَ படைத்தான் . படைத்தவன் தான் படைப்பின் தீங்கில்
இருந்து நம்மை வெளி கொண்டு வந்து , பாதுகாப்பு தர முடியும் .
அனைத்து நல்ல விஷயங்களிலும் தீமை இருக்கிறது ...
1-
நப்ஸ் - பாதுகாப்பு
– ஒரு சமயம் நல்ல மனிதர் , மறு சமயத்தில் கோபம் கொண்டு , ஆத்திரமாக – நன்மை
தீமை . சில சமயம் நல்ல விஷயம் செய்தல் , வேறு சில சமயம் வேண்டாத காரியங்கள்
செய்தல் – நன்மை – தீமை .
2-
ஷைத்தான்
3-
மற்ற படைப்புகளின் தீங்கு – உதாரணம் – தண்ணீர் மிகுதி / மழை
மிகுதி / வெயில் மிகுதி / காற்று மிகுதி , ஆனால் அனைத்தும் நமக்கு தேவை . இதன் மூலம்
ஆபத்து வராமல் இருக்க பாதுகாப்பு தேடுவது .( திருமணம் , பிள்ளை , நடந்து செல்லுதல்
... பல )
غَاسِقٍ இருள் / இரவு / முன் இரவு / மக்ரிப் நேரத்தில்
இருந்து . சஹாபாக்களை – நபி இரவில் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுரை . கடல்
பகுதிகளுக்கும் .
وَقَبَ பரவியது – நிலா முழுவதுமாக SETTLE ஆகும் போது , நிலா முழுவதும்
பரவிய பின் , திருட்டு , கொலை , விஷ
ஜந்துக்கள் வெளிவருதல் , நோய்கள் அதிகரித்தல் .கெட்ட காற்று .... அனைத்தும்
இச்சமயத்தில் அதிகமாக பரவுதல் .
النَّفَّاثَاتِ ஊதுபவர்கள் ( பெண்கள் ) , மந்திரம் செய்யும் கூட்டம் , ஊதும் போது எச்சில் லேசாக
வெளிவருதல் , அவ்வளவு கடினமாக தீங்கு விளைவிக்க ஊதுதல் ., தொடர்ந்து செய்பவர்கள் .
الْعُقَدِ முடிச்சிகள் – இரவில் செய்கிறார்கள் .
حَاسِدٍ பொறாமைக்காரன் . வீடு , பிள்ளைகள் , நிலம் ,
நகை பார்த்து , அல்லாஹ்வின் அருளை பார்த்து பொறாமை கொள்ளுதல் . ( பொறமை மட்டுமே சில பேர் படுவார்கள். ) அதிலும்
தீமை
حَسَدَ பொறாமை படும்போது – இப்போதுதான் தீமை அதிகம் , பொறாமைப்படும்
போது என்ன செய்கிறான் , தவறான செய்தி பரப்புதல் , அருளை தடை செய்ய மந்திரம் செய்ய
செல்லுதல் , கண்ணூர் .... இப்படி பல கொடிய தீமை . இவர்கள் உள்ளம் எப்படி இருக்கும்
– இருண்டு போய் இருக்கும் .
அல்லாஹ் நம் அனைவரையும்
பாதுகாப்பானாக . இருள் குறித்து மற்றும் அனைத்து
தீமையில் இருந்தும் பாதுகாப்பு பெற அல்லாஹ் இவ்விரு
ஸுராஹ் களையும் , மற்றும் ஸுராஹ் இக்லாஸ் சையும் சேர்த்து ஓதி வர சொல்கிறான் . நபி
இரவில் இந்த மூன்று ஸுராஹ் களையும் ஓதி,ஊதி
உடல் முழுவதும் தடவுவார்கள் ஆடு , புலி , சிங்கம் , வெயில் , மழை
போன்றவற்றில் இருந்து வேலி போட்டு பயிர்களை , நம்மை நாம் பாதுகாப்பது போல் , இத்
துஆவை ஓதி அல்லாஹ்வின் பலமான வேலியை பெறுவோம் .
இதை தவக்கலோடு ஓதி
அனைத்து எதிரிகளிடமிருந்து அல்லாஹ் நம்மை காப்பானாக என்று துஆஹ் செய்வோம் .
இனி நாம் என்ன படிக்கலாம்
.......
- வார்த்தைக்கு /
வார்த்தை பொருளை படித்தல்
- தீங்கு தரும் பல
விஷயங்களை அறிதல் .- தினமும் மறவாமல் ஓதுதல் .
- முடிந்த அளவு – நடு இரவில் வெளியே செல்வதை தவிர்த்தல் .
ஜசாக் அல்லாஹு ஹைரன் . வஸ்ஸலாம்
No comments:
Post a Comment