சீராஹ் 2 – நபி பிறப்பதற்கு முன்னால்
அரபுகள் .
என்ன படித்தோம் ......
அஸ் சீராஹ் – பொருள் – பயணம்
செய்வது – காரணம் – வாழ்கையை அவர்கள் சென்ற வழியில் சென்று படிப்பது தான் சீராஹ்
.
முஹம்மது அஸ் சீரத்துன் நபவியாஹ் – ரசூல்
பிறந்ததில் இருந்து இறந்தது வரை அவர்கள் வழியில் சென்று படிப்பது . அல்லாஹ் உதவி
செய்வானாக .
இப்னு இஸ்ஷாக் –
நபிகள் வரலாற்றை முதன் முதலில் தொகுத்தவர் . இவர்கள் எழுதிய வரலாற்றை படித்து தான்
மற்றவர்கள் எழுத முடியும் , நபிக்கு ரொம்ப
காலத்திற்கு பின் வாழ்ந்தவர்கள் . சுமார் 500 ஆண்டுக்கு பின். மிகவும் பழமை
வாய்ந்த வரலாற்று ஆசிரியர் .
பகுதி – 1 – மன்ஹுமுல் அரபு ? அரபுகள் யார் ? அவர்கள்
தலைமுறை என்ன ? எங்கு இருந்து வந்தார்கள் ?
அரபுகள் 2 வகை – அரபுல் பாயீதா / அரபுல்
பாக்கியாஹ் .
அரபுல் பாயிதா – அரபுகளில் மூத்தவர்கள் , தகுதி வாய்ந்தவர்கள் , பழங்கால
அரபுகள் , பழமையான வம்சம் . முன்னால் சென்ற நபி சமூகத்தை சார்ந்தவர்கள் .ஆது /
சமுது சமுகம் . அந்த அந்த காலத்திலேயே அழிக்கப்பட்டு விட்டார்கள் . ( போர் ,
இயற்கை சீற்றம் , அல்லாஹ்வின் கோபம் ) இப்போது எங்கும் கிடையாது .
அரபுல் பாக்கியாஹ் – மிதி இருக்க கூடிய அரபுகள் , நிலையாக இருக்க கூடிய
அரபுகள் .
இதில் 2 வகை – கஹ்தானியாஹ் , அத்னாநியாஹ்
கஹ்தானியாஹ் – கஹ்தான் என்ற மனிதருக்கு பிறந்த மகன் யஃரிப் , யஃரப் – இந்த பெயரில்
இருந்து அரபு என்ற வார்த்தை பிறந்தது .இவர்கள் தான் அபுல் அரப் – அரபுகளின் தந்தை .முதலில்
அரபு தெளிவாக பேசியவர்கள் இவர்கள் தான் . இவர்கள் நூஹ் நபி மகன் சாம் அலை வம்சத்தில்
வந்தவர்கள் . அரபு தேசத்தின் தெற்கு பகுதியில் கஹ்தானியாஹ் வாழ்ந்து வந்தார்கள் .
அத்னானியாஹ் – நபி உதித்த வம்சம் ., நபி அத்னானியாஹ் வில் இருந்து வந்தார்கள் .நபியின்
வம்சாவழி அத்னான் என்ற பெயரில் முடியும் .
இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் ?
நபி இப்ராஹீம் அலை – அரபு அல்ல – ஈராக் . ஹாஜரா அலை – எகிப்து அரசரின் மகள் ... அல்லாஹ்வின் கட்டளை பொட்டல் பூமியில் (
மக்காவில் ) ஹாஜரா அலை , இஸ்மாயில் அலை – இப்ராகிம் நபி விடுகிறார்கள் . அங்கு
இஸ்மாயில் நபி , கஹ்தானியாஹ் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்து .... அதில் 7 / 8 தலைமுறை அத்னான் என்ற மனிதர் பிறக்கிறார் ...,
அவர் மிக பிரபலம் என்பதால் அத்னானியாஹ் என்று பெயர் பெற்றது . அத்னானில் இருந்து 20 தலைமுறை நபி
பிறந்தார்கள் .
பகுதி 2 – இப்ராஹீம் நபி , ஹாஜரா அலை , இஸ்மாயில் நபி
அனைவரும் தௌஹீத் தில் இருந்தார்கள் . ஓரே இறைவன் என்ற கொள்கையில் ...
மக்காவில் எப்படி ஷிர்க் நுழைத்தது .? நபி
காலத்துக்கு முன்னால் மக்காஹ் முழுவதும் சிலை வணக்கம் , இணை வைப்பு , மலக்குகள்
இறைவனின் பெண் பிள்ளைகள் என்று வணங்கினார்கள் .
நபி மிஹ்ராஜில் பார்த்த சம்பவம் - , நரகில் அம்ர் என்ற
மனிதர் தன் குடலை தூக்கி கொண்டு சுற்றி வந்தான் ... ஏன் என்றால் அவன் தான் முதன் முதலில் மக்காவில்
சிலை வணக்கம் கொண்டு வந்தவர் ... சாம் / சிரியா தேசத்தில் இருந்து சிலைகளை கொண்டு
வந்து மக்காவில் வைத்தவர் . ஹுபல் என்ற தலைமை
சிலை .,அதை மத்தியில் வைத்து அனைவரையும் அழைத்து வணங்க சொன்னான் , லாத் – உஸ்ஸா என்ற சிலைகளும் , முன்னால் வாழ்ந்த நல்லவர்கள்
இறந்த பின் சிலை செய்து வணக்கம் , கிடைத்த பொருள் அனைத்தும் வணக்கம் , மண் , கல் .என்று
அதில் ஆட்டு பால் ஊற்றி வணங்கினார்கள் . 2 காதலர்கள் ,காபாவில் தவறாக நடந்ததால்
அல்லாஹ் அங்கேயே அவர்கள் இருவரை அழித்தான் , அவர்களையும் நல்லவர்கள் என்றி சபா –
மர்வா வில் இருவரையும் வைத்து வணங்கினார்கள் . இப்ராஹீம் நபி வழியை அம்ர் பின் ஆஸ்
முழுவதுமாக மாற்றினார் .நபி வந்த பிறகும் 350 சிலைகள் காபாஹ்வை சுற்றி இருந்தது . மக்காஹ்
வெற்றி க்கு பின் அதை நபி உடைத்தார்கள் .
இப்படிப்பட்ட காலத்திலும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கியவர்கள்
இருந்தார்கள் . அவர்கள் தான் குனபா .
குனபாக்கள் யார் ? – ஹனீப் என்ற சொல்லில் இருந்து வரும் சொல் குனபா – ஹனீப் – ஷிர்க்கை விட்டு விலகி தவ்ஹீதை நோக்கி
செல்பவர் என்று பொருள் . இப்ராஹிம் நபியை
அல்லாஹ் குரானில் இப்படி குறிப்பிடுகிறான் .
குஸ் இப்னு ஸாயிதா – இவர்கள் நபி சிறு குழந்தையாக இருக்கும் போதே சிலைகளை
எதிர்க்க கூடியவர்களாக இருந்தார்கள் . நபிக்கு முன்னாலும் எதிர்த்தவர்கள் .
இவர்கள் பனு இய்யாத் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் , இவர்கள் இன்னும் ஓமான் தேசத்தில்
வாழ்கிறார்கள் .நபி காலத்தில் இந்த கோத்திரம் இஸ்லாத்தை ஏற்க வரும் போது , நபி அவர்கள்
, குஸ் அவர்களை பற்றி கேட்கிறார்கள் ,
அவர்கள் எப்போதோ இறந்து விட்டதாக அந்த
கோத்திரத்தார் சொல்கிறார்கள் . நபி - “குஸ்”
அவர்களின் கவி வார்த்தைகளை அவர்களிடம் கேட்கிறார்கள் . இந்த குஸ் இப்னு ஸாயிதா
குனபா களில் ஒருவர் .
சிலைகளுக்கு வணக்க வழிபாடு செய்ய விழா வைத்த
போது – 4 பேர் அதில் இருந்து
விலகி இருந்தார்கள் ... அவர்கள்
வராக இப்னு நௌபல்- கதிஜா ரலி அவர்களின் சாச்சா மகன் ... நபிக்கு வஹி வந்த போது
இவர்களிடம் தான் அழைத்து சென்றார்கள் .,இவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள் .,
வஹிக்கு பின் நபியை நம்பினார்கள் ., இஸ்லாத்தை ஏற்றார்களா ? என்று தெரியவில்லை .
அல்லாஹ் அறிந்தவன் .
உபைத்துல்லாஹ் இப்னு ஜக்ஸ் – இவரும் கிறிஸ்தவர்கள் ., நபியின் குடும்பத்தை சேர்ந்தவர் ,
நபியின் மனைவி உம்மு சலமாவின் முதல் கணவர் . இஸ்லாத்தை ஏற்று பின் கிறிஸ்தவராக
மாறினார் ... அதனால் உம்மு சலமா விவாகரத்து செய்தார்கள் ., அப்படியே அவர்
மரணித்தார் முர்த்தத்தாக . இஸ்லாம் சட்டத்தில் கலிபா ஆட்சியில் ஒருவர்
முர்த்தத்தாக மாறினால் கொலை செய்ய வேண்டும் , ஆனால் இவரை ஏன் கொலை செய்யவில்லை
என்றால் அப்போது இஸ்லாமிய ஆட்சி இல்லை .
உதுமான் இப்னு குவைரிஸ் – இவரும் கிறிஸ்தவராக இருந்தவர் / இறந்தார் . இஸ்லாம
தெரிந்ததா என்பது பதிவாகவில்லை . .
சைத் இப்னு அம்ர் இப்னு நுபைல் - அஸ்மா ரலி சொன்னார்கள் , இவர்கள் “ நான் சிறு வயதாக
இருக்கும்போதே அல்லாஹ்வை வணங்க சொல்வார்கள்” . நபி குழந்தையாக இருக்கும் போதே குறைஷிகள் இவரை
எதிர்த்தார்கள் , நபி அப்போதே காரணம் கேட்பார்கள் ., நபி வஹிக்கு 5 ஆண்டுக்கு முன்
மரணம் .
இவர்கள் மகன் ஸயித்
இப்னு ஜைத் – பத்து சுவனவாசிகளில்
ஒருவர்.நபியிடம் இவர்கள் தந்தை எங்கு இருக்கிறார்கள் என்று கேட்கிறார்கள் , நபி
பதில் – அவர்கள் சுவனத்தில் ஒரே சமூகமாக இருக்கிறார் . மிஹ்ராஜில் இரு தோட்டங்கள்
இவர்களுக்கு இருப்பதை பார்கிறார்கள் .அது இவருக்கு மட்டுமே
சைத் இப்னு அம்ர் இப்னு
நுபைல்.
துன்யாவிலேயே
தந்தை , மகன் , இருவருக்கும் சுவனம் வாக்களிக்கப்பட்ட சிறப்பு பெற்றவர்கள் .
இவர்கள் தான்
குனபா கள் .
ஜாஹிலியாஹ் மக்கள்
அல்லாஹ்வை நம்பினார்கள் ,ரப்பை நம்பினார்கள் , சிலைகள் மூலம் அல்லாஹ்வை நெருங்கலாம் என்று நம்பினார்கள்
. நபி அல்லாஹ் ஒருவன் இணை துணை இல்லை என்பதையே எத்தி வைத்து கொண்டு இருந்தார்கள் ...எப்படி
மோசமானவர்களாக இருந்தாலும் நேரிடையாக அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று நபி
கூறினார்கள் .
பகுதி 3 – நபி பிறப்பதற்கு முன் மக்கா எப்படி இருந்தது ?
ரோம் – பாராசிகம் பெரிய ஆட்சிக்கு
மத்தியில் இருந்தது . மக்கள் மக்காவிற்கு விரும்பி செல்வார்கள் . ஹஜ் செய்ய
செல்வார்கள் . இருந்தும் மோசமான சீர்கேடு நடந்து கொண்டு இருந்தது , குறி , ஜோசியம்
, கொலை , கொள்ளை அனைத்தும் இருந்தது. இந்தநேரத்தில் நல்ல மக்கள் அத்னான்
கோத்திரத்தில் இருந்தார்கள் .
ஹாசிம்
– நல்ல மனிதர் –
ஹாஜிகளுக்கு தண்ணீர் , உணவு வழங்குதல் . இவர் சகோதரர் முத்தலிப்
இவரும் நல்லவர் .,
ஹஷீம் அவர்கள்
மதீனா சென்று அங்கு திருமணம் செய்து , சைபா என்று ஒரு குழந்தை பிறந்தது , ஹஷீம்
மக்காஹ் வருவதற்குள் இறந்து விட்டார்கள் ., இதை கேள்விப்பட்டு முத்தலிப் அவர்கள்
மதீனா சென்று குழந்தையை கொண்டு வரும் போது அதை முத்தலிபின் அடிமை என்று மக்கள் அப்துல் முத்தலிப் என்று அழைத்தார்கள் . முத்தலிப்
அவர்கள் இறந்த பின் அனைத்து பொறுப்புகளும் அப்துல் முத்தலிப் கவனித்தார்கள் .,
பிரபலமான மனிதராக திகழ்தார்கள் .,இவர்களுக்கு பத்து ஆண் பிள்ளைகள் , அப்துல்லாஹ் என்ற மகன் மீது அதிக பாசம் கொண்டார்கள் .
அப்துல்லாஹ்
அவர்களுக்கும் , பனு சோஹ்ரா
தலைவர் மகள் – ஆமீனா அவர்களுக்கும் திருமணம் .
இருவரும் சிறிது காலம் வாழ்ந்து மரணம் அடைத்தார்கள் .அப்துல்லாஹ் அவர்கள் மதீனா சென்று வரும் வழியில் மரணம் .நபி தாய் வயிறில்
இருக்கும்போதே தந்தை மரணம்
யானை
படை வருடத்தில் நபி
பிறந்தார்கள் . ( யானை படை சம்பவம் – அப்ரஹா காபா போல் ஒரு கட்டிடம் எமன் நாட்டில்
கட்டி மக்களை அங்கு அழைகிறார் , அதில் பனு கினானா வை சேர்ந்த ஒருவர் அசுத்தம்
செய்ததால் , அபரஹா காபாவை இடிக்க பேரும் படைகள் கொண்டு வருகிறான் . அல்லாஹ்
வைக்கோல் போல் பறவைகளை கொண்டு அழிகிறான் .)
...
இன்ஷா அல்லாஹ் , தொடரும்
.........
இனி நாம் என்ன
படிக்கலாம் ......
·
ஸிராஹ் பொருள்
·
முதல் வரலாற்று ஆசிரியர்
·
அரபுகள் யார் ? வம்சம் என்ன ?
·
இப்ராஹிம் நபிக்கும் மக்காக்குமான தொடர்பு பற்றி
படித்தல் .
·
நபி வந்த வம்சம் பற்றி
·
ஷிர்க் மக்காவில் நுழைந்தது பற்றிய தகவல் ,
சிலைகளின் பெயர்கள் .
·
குனபாக்கள் பற்றி தெரிந்து கொள்ளுதல்
·
அப்துல் முத்தலிப் அவர்களின் பின்னணி
·
நபியின் தாய் , தந்தை , பிறந்த வருடம் அறிதல் .
No comments:
Post a Comment