Saturday, February 14, 2015

சீராஹ் வகுப்பு - 2


சீராஹ் 2 – நபி பிறப்பதற்கு முன்னால் அரபுகள் .

என்ன படித்தோம் ......

அஸ் சீராஹ் – பொருள் – பயணம் செய்வது – காரணம் – வாழ்கையை அவர்கள் சென்ற வழியில் சென்று படிப்பது தான் சீராஹ் .

முஹம்மது அஸ் சீரத்துன் நபவியாஹ் – ரசூல் பிறந்ததில் இருந்து இறந்தது வரை அவர்கள் வழியில் சென்று படிப்பது . அல்லாஹ் உதவி செய்வானாக .

இப்னு இஸ்ஷாக் – நபிகள் வரலாற்றை முதன் முதலில் தொகுத்தவர் . இவர்கள் எழுதிய வரலாற்றை படித்து தான் மற்றவர்கள் எழுத முடியும் , நபிக்கு ரொம்ப காலத்திற்கு பின் வாழ்ந்தவர்கள் . சுமார் 500 ஆண்டுக்கு பின். மிகவும் பழமை வாய்ந்த வரலாற்று ஆசிரியர் .

பகுதி – 1 – மன்ஹுமுல் அரபு ? அரபுகள் யார் ? அவர்கள் தலைமுறை என்ன ? எங்கு இருந்து வந்தார்கள் ?

அரபுகள் 2 வகை – அரபுல் பாயீதா / அரபுல் பாக்கியாஹ் .

அரபுல் பாயிதா – அரபுகளில் மூத்தவர்கள் , தகுதி வாய்ந்தவர்கள் , பழங்கால அரபுகள் , பழமையான வம்சம் . முன்னால் சென்ற நபி சமூகத்தை சார்ந்தவர்கள் .ஆது / சமுது சமுகம் . அந்த அந்த காலத்திலேயே அழிக்கப்பட்டு விட்டார்கள் . ( போர் , இயற்கை சீற்றம் , அல்லாஹ்வின் கோபம் ) இப்போது எங்கும் கிடையாது .

அரபுல் பாக்கியாஹ் – மிதி இருக்க கூடிய அரபுகள் , நிலையாக இருக்க கூடிய அரபுகள் .

இதில் 2 வகை – கஹ்தானியாஹ் , அத்னாநியாஹ்

கஹ்தானியாஹ் – கஹ்தான் என்ற மனிதருக்கு பிறந்த மகன் யஃரிப் , யஃரப் – இந்த பெயரில் இருந்து அரபு என்ற வார்த்தை பிறந்தது .இவர்கள் தான் அபுல் அரப் – அரபுகளின் தந்தை .முதலில் அரபு தெளிவாக பேசியவர்கள் இவர்கள் தான் . இவர்கள் நூஹ் நபி மகன் சாம் அலை வம்சத்தில் வந்தவர்கள் . அரபு தேசத்தின் தெற்கு பகுதியில் கஹ்தானியாஹ் வாழ்ந்து வந்தார்கள் .

அத்னானியாஹ் – நபி உதித்த வம்சம் ., நபி அத்னானியாஹ் வில் இருந்து வந்தார்கள் .நபியின் வம்சாவழி அத்னான் என்ற பெயரில் முடியும் .

இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் ?

நபி இப்ராஹீம் அலை – அரபு அல்ல – ஈராக் . ஹாஜரா அலை – எகிப்து அரசரின் மகள் ...  அல்லாஹ்வின் கட்டளை பொட்டல் பூமியில் ( மக்காவில் ) ஹாஜரா அலை , இஸ்மாயில் அலை – இப்ராகிம் நபி விடுகிறார்கள் . அங்கு இஸ்மாயில் நபி , கஹ்தானியாஹ் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்து .... அதில் 7 / 8 தலைமுறை அத்னான் என்ற மனிதர் பிறக்கிறார் ..., அவர் மிக பிரபலம் என்பதால் அத்னானியாஹ் என்று பெயர் பெற்றது . அத்னானில் இருந்து 20 தலைமுறை நபி பிறந்தார்கள் .

பகுதி 2 – இப்ராஹீம் நபி , ஹாஜரா அலை , இஸ்மாயில் நபி அனைவரும் தௌஹீத் தில் இருந்தார்கள் . ஓரே இறைவன் என்ற கொள்கையில் ...

மக்காவில் எப்படி ஷிர்க் நுழைத்தது .? நபி காலத்துக்கு முன்னால் மக்காஹ் முழுவதும் சிலை வணக்கம் , இணை வைப்பு , மலக்குகள் இறைவனின் பெண் பிள்ளைகள் என்று வணங்கினார்கள் .

நபி மிஹ்ராஜில் பார்த்த சம்பவம் - , நரகில் அம்ர் என்ற மனிதர் தன் குடலை தூக்கி கொண்டு சுற்றி வந்தான் ...  ஏன் என்றால் அவன் தான் முதன் முதலில் மக்காவில் சிலை வணக்கம் கொண்டு வந்தவர் ... சாம் / சிரியா தேசத்தில் இருந்து சிலைகளை கொண்டு வந்து மக்காவில் வைத்தவர் . ஹுபல் என்ற தலைமை சிலை .,அதை மத்தியில் வைத்து அனைவரையும் அழைத்து வணங்க சொன்னான் , லாத் – உஸ்ஸா  என்ற சிலைகளும் , முன்னால் வாழ்ந்த நல்லவர்கள் இறந்த பின் சிலை செய்து வணக்கம் , கிடைத்த பொருள் அனைத்தும் வணக்கம் , மண் , கல் .என்று அதில் ஆட்டு பால் ஊற்றி வணங்கினார்கள் . 2 காதலர்கள் ,காபாவில் தவறாக நடந்ததால் அல்லாஹ் அங்கேயே அவர்கள் இருவரை அழித்தான் , அவர்களையும் நல்லவர்கள் என்றி சபா – மர்வா வில் இருவரையும் வைத்து வணங்கினார்கள் . இப்ராஹீம் நபி வழியை அம்ர் பின் ஆஸ் முழுவதுமாக மாற்றினார் .நபி வந்த பிறகும் 350 சிலைகள் காபாஹ்வை சுற்றி இருந்தது . மக்காஹ் வெற்றி க்கு பின் அதை நபி உடைத்தார்கள் .

இப்படிப்பட்ட காலத்திலும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கியவர்கள் இருந்தார்கள் . அவர்கள் தான் குனபா . குனபாக்கள் யார் ? – ஹனீப் என்ற சொல்லில் இருந்து வரும் சொல் குனபா – ஹனீப் – ஷிர்க்கை விட்டு விலகி தவ்ஹீதை நோக்கி செல்பவர் என்று பொருள் . இப்ராஹிம் நபியை அல்லாஹ் குரானில் இப்படி குறிப்பிடுகிறான் .

குஸ் இப்னு ஸாயிதா – இவர்கள் நபி சிறு குழந்தையாக இருக்கும் போதே சிலைகளை எதிர்க்க கூடியவர்களாக இருந்தார்கள் . நபிக்கு முன்னாலும் எதிர்த்தவர்கள் . இவர்கள் பனு இய்யாத் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் , இவர்கள் இன்னும் ஓமான் தேசத்தில் வாழ்கிறார்கள் .நபி காலத்தில் இந்த கோத்திரம் இஸ்லாத்தை ஏற்க வரும் போது , நபி அவர்கள்  , குஸ் அவர்களை பற்றி கேட்கிறார்கள் , அவர்கள் எப்போதோ  இறந்து விட்டதாக அந்த கோத்திரத்தார் சொல்கிறார்கள் .  நபி - “குஸ்” அவர்களின் கவி வார்த்தைகளை அவர்களிடம் கேட்கிறார்கள் . இந்த குஸ் இப்னு ஸாயிதா குனபா களில் ஒருவர் .

சிலைகளுக்கு வணக்க வழிபாடு செய்ய விழா வைத்த போது – 4 பேர் அதில் இருந்து விலகி இருந்தார்கள் ... அவர்கள்

வராக இப்னு நௌபல்- கதிஜா ரலி அவர்களின் சாச்சா மகன் ... நபிக்கு வஹி வந்த போது இவர்களிடம் தான் அழைத்து சென்றார்கள் .,இவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள் ., வஹிக்கு பின் நபியை நம்பினார்கள் ., இஸ்லாத்தை ஏற்றார்களா ? என்று தெரியவில்லை . அல்லாஹ் அறிந்தவன் .

உபைத்துல்லாஹ் இப்னு ஜக்ஸ் – இவரும் கிறிஸ்தவர்கள் ., நபியின் குடும்பத்தை சேர்ந்தவர் , நபியின் மனைவி உம்மு சலமாவின் முதல் கணவர் . இஸ்லாத்தை ஏற்று பின் கிறிஸ்தவராக மாறினார் ... அதனால் உம்மு சலமா விவாகரத்து செய்தார்கள் ., அப்படியே அவர் மரணித்தார் முர்த்தத்தாக . இஸ்லாம் சட்டத்தில் கலிபா ஆட்சியில் ஒருவர் முர்த்தத்தாக மாறினால் கொலை செய்ய வேண்டும் , ஆனால் இவரை ஏன் கொலை செய்யவில்லை என்றால் அப்போது இஸ்லாமிய ஆட்சி இல்லை .

உதுமான் இப்னு குவைரிஸ் – இவரும் கிறிஸ்தவராக இருந்தவர் / இறந்தார் . இஸ்லாம தெரிந்ததா என்பது பதிவாகவில்லை .  .

சைத் இப்னு அம்ர் இப்னு நுபைல்   - அஸ்மா ரலி சொன்னார்கள் , இவர்கள் “ நான் சிறு வயதாக இருக்கும்போதே அல்லாஹ்வை வணங்க சொல்வார்கள்”  . நபி குழந்தையாக இருக்கும் போதே குறைஷிகள் இவரை எதிர்த்தார்கள் , நபி அப்போதே காரணம் கேட்பார்கள் ., நபி வஹிக்கு 5 ஆண்டுக்கு முன் மரணம் .

இவர்கள் மகன் ஸயித் இப்னு ஜைத் – பத்து சுவனவாசிகளில் ஒருவர்.நபியிடம் இவர்கள் தந்தை எங்கு இருக்கிறார்கள் என்று கேட்கிறார்கள் , நபி பதில் – அவர்கள் சுவனத்தில் ஒரே சமூகமாக இருக்கிறார் . மிஹ்ராஜில் இரு தோட்டங்கள் இவர்களுக்கு இருப்பதை பார்கிறார்கள் .அது இவருக்கு  மட்டுமே  சைத் இப்னு அம்ர் இப்னு நுபைல்.

துன்யாவிலேயே தந்தை , மகன் , இருவருக்கும் சுவனம் வாக்களிக்கப்பட்ட சிறப்பு பெற்றவர்கள் .

இவர்கள் தான் குனபா கள் .

ஜாஹிலியாஹ் மக்கள் அல்லாஹ்வை நம்பினார்கள் ,ரப்பை நம்பினார்கள் ,  சிலைகள் மூலம் அல்லாஹ்வை நெருங்கலாம் என்று நம்பினார்கள் . நபி அல்லாஹ் ஒருவன் இணை துணை இல்லை என்பதையே எத்தி வைத்து கொண்டு இருந்தார்கள் ...எப்படி மோசமானவர்களாக இருந்தாலும் நேரிடையாக அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று நபி கூறினார்கள் .

பகுதி 3 – நபி பிறப்பதற்கு முன் மக்கா எப்படி இருந்தது ? ரோம் – பாராசிகம் பெரிய ஆட்சிக்கு  மத்தியில் இருந்தது . மக்கள் மக்காவிற்கு விரும்பி செல்வார்கள் . ஹஜ் செய்ய செல்வார்கள் . இருந்தும் மோசமான சீர்கேடு நடந்து கொண்டு இருந்தது , குறி , ஜோசியம் , கொலை , கொள்ளை அனைத்தும் இருந்தது. இந்தநேரத்தில் நல்ல மக்கள் அத்னான் கோத்திரத்தில் இருந்தார்கள் .

ஹாசிம் – நல்ல மனிதர் – ஹாஜிகளுக்கு தண்ணீர் , உணவு வழங்குதல் . இவர் சகோதரர் முத்தலிப் இவரும் நல்லவர் .,

ஹஷீம் அவர்கள் மதீனா சென்று அங்கு திருமணம் செய்து , சைபா என்று ஒரு குழந்தை பிறந்தது , ஹஷீம் மக்காஹ் வருவதற்குள் இறந்து விட்டார்கள் ., இதை கேள்விப்பட்டு முத்தலிப் அவர்கள் மதீனா சென்று குழந்தையை கொண்டு வரும் போது அதை முத்தலிபின் அடிமை என்று மக்கள் அப்துல் முத்தலிப் என்று அழைத்தார்கள் . முத்தலிப் அவர்கள் இறந்த பின் அனைத்து பொறுப்புகளும் அப்துல் முத்தலிப் கவனித்தார்கள் ., பிரபலமான மனிதராக திகழ்தார்கள் .,இவர்களுக்கு பத்து ஆண் பிள்ளைகள் , அப்துல்லாஹ் என்ற மகன் மீது அதிக பாசம் கொண்டார்கள் .

அப்துல்லாஹ் அவர்களுக்கும் , பனு சோஹ்ரா தலைவர் மகள் – ஆமீனா அவர்களுக்கும் திருமணம் . இருவரும் சிறிது காலம் வாழ்ந்து மரணம் அடைத்தார்கள் .அப்துல்லாஹ் அவர்கள் மதீனா  சென்று வரும் வழியில் மரணம் .நபி தாய் வயிறில் இருக்கும்போதே தந்தை மரணம்

யானை படை வருடத்தில் நபி பிறந்தார்கள் . ( யானை படை சம்பவம் – அப்ரஹா காபா போல் ஒரு கட்டிடம் எமன் நாட்டில் கட்டி மக்களை அங்கு அழைகிறார் , அதில் பனு கினானா வை சேர்ந்த ஒருவர் அசுத்தம் செய்ததால் , அபரஹா காபாவை இடிக்க பேரும் படைகள் கொண்டு வருகிறான் . அல்லாஹ் வைக்கோல் போல் பறவைகளை கொண்டு அழிகிறான் .)  ...

இன்ஷா அல்லாஹ் , தொடரும் .........

இனி நாம் என்ன படிக்கலாம் ......

·        ஸிராஹ் பொருள்

·        முதல் வரலாற்று ஆசிரியர்

·        அரபுகள் யார் ? வம்சம் என்ன ?

·        இப்ராஹிம் நபிக்கும் மக்காக்குமான தொடர்பு பற்றி படித்தல் .

·        நபி வந்த வம்சம் பற்றி

·        ஷிர்க் மக்காவில் நுழைந்தது பற்றிய தகவல் , சிலைகளின் பெயர்கள் .

·        குனபாக்கள் பற்றி தெரிந்து கொள்ளுதல்

·        அப்துல் முத்தலிப் அவர்களின் பின்னணி

·        நபியின் தாய் , தந்தை , பிறந்த வருடம் அறிதல் .

No comments:

Post a Comment