Friday, February 13, 2015

வகுப்பு 6 - ஸுராஹ் லஹப் .


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
 21/1/15.

அஸ்ஸலாமு அழைக்கும்  அன்பு சகோதரிகளே.......

என்ன படித்தோம் ......

v  கிராஆத் - சகோதரி ஷிபா   -ஸுராஹ் காபிருன் –
v  ஸுராஹ் லஹப் சிறு குறிப்பு
v  ஸுராஹ் லஹப்  வா / வா பொருள் + வா / வா விளக்கம்   -  சகோதரி ரினோசா
v  ஸுராஹ் லஹப் தப்சீர் – சகோதரி சாய்ரா . 
v  கதிஜா ரலி வரலாறு  – சகோதரி யாஸ்மின் .
v  துஆஹ் மனனம் – நபிகள் பிரார்த்தனை - பாதுக்காவல் - துஆஹ் .
v  அஸ்மா உல் ஹுஸ்னா – 41 – 45

விளக்கம் –

-    மக்கி ஸுராஹ் .
-    சிறிய ஸுராஹ் களில் ஒன்று

அபூ லஹப் -

-    அபூ லஹப் மற்றும்  அவன் மனைவியையும் மட்டும் சபித்து இறங்கிய ஸுராஹ்
-    மற்ற யாரையும் பெயர் கூறி தண்டனையை சொல்ல வில்லை
-    நபியின் பெரிய தந்தை
-    பிரபலமான பணக்கார நபர் –
-    பொருள் , புதையல் , சொந்து கணக்குக்கு செயலாளர்
-    உண்மை பெயர் அப்துல் உஸ்ஸா
-    புனை பெயர் அபூ லஹப் (  நெருப்பு / ஜுவாலை தந்தை)
-    லஹப் -  சிவப்பு தோற்றம் , சிவந்த தோல் , ஒளி தரும் அழகு
-    உயர்ந்த வம்சம் , ஹாஷிமின் பேரர்
-    நபியின் இரண்டு மகள்களை,அபூ லஹபின் 2 மகன்கள் , திருமணம் செய்து இருந்தார்கள்
அவன் செய்த தீமைகள் , நபிக்கு கொடுத்த கஷ்டங்கள் ....

-    நபியின் அண்டை வீடு – ஓதும் போது , வணக்கும் போது , சமைக்கும் போது குப்பை , நஜீச்களை கொட்டுவான்
-    மகன்களை விவாகரத்து செய்ய வைத்தான் – இல்லையெனில் பேச மாட்டேன் என்று மிரட்டினான் .
-    நபியின் மகன் காசிம் அவர்கள் இறந்தபோது , அபு லஹப் தெருவில் ஆடி , பாடி , நபியின் வம்சம் துண்டித்து விட்டது என்று மகிழ்ந்தான், பேரன் இறந்துட்டான் என்பதை விட - நபி மேல் இருந்த குரோதம் .

-    அரபு வம்சம் , குலம் , கோத்திரம் , இரத்த பந்தம் ரொம்ப பேணி வாழ்வார்கள் , இரத்த உறவை அதிகமாக அனுசரிப்பார்கள் . இவன் அனைத்தையும் உடைத்துவிட்டான்

-    சபா மலையின் மீது ஏறி இரத்த உறவுகளுக்கு ஏகத்துவத்தை எடுத்து சொல்லும்போது கடுமையாக எதிர்த்து நபியை சபித்தது  அபு லஹப் . market இடத்தில நபி லா இலாஹா இல்லலாஹ் சொல்லி வெற்றி அடையுங்கள் என்று அழைத்த போதும் , நபியை பொய்யன் என்று கூறி , கல்லால் காலை காயப்படுத்தியதும் அபு லஹப் .

-    அபு லஹப் மற்றும் அவன் மனைவிக்கு கிடைக்க போகும் தண்டனையை அல்லாஹ் இந்த ஸுராஹ் வில் சொல்கிறான் .

-    சிலர் நபியை ஏற்கவில்லை – எதிர்க்கவும் இல்லை , சிலர் ஏற்கவில்லை மூர்க்கமாக எதிர்க்கவும் இல்லை , சிலர் எதிர்த்து பின் ஏற்றனர் , சிலர் ஏற்காமல் உதவி செய்தார்கள் .சிலர் ஏற்றுகொண்டார்கள் .  கடினமாக துன்பம் கொடுத்தது  அபு லஹப் – உம்மு ஜமீல் மட்டுமே ,

-    தொழுகையில் ஓதுவது தவறு இல்லை , நன்மைகளும் குறையாது .

அபு லஹப் மனைவி – உர்வாஹ் .

-    உமய்யாஹ் – பேத்தி – ( பிலால் ரலியை அடிமையாக வைத்து இருந்தவர் )
-    அபு ஸுப்யான் சகோதரி ( அபு ஸுப்யான் – ஹிந்தா வின் கணவர் )
-    status , குடும்பம் , குலம் கோத்திரம் பற்றியே பகட்டும் , பெருமையும் கொண்டவள் .
-    புனை பெயர் உம்மு ஜமீல் – அழகின் அன்னை
-    ஊரே வியக்கும் கணவன் – மனைவி
-    நபி வீட்டின் வாசலில் இரவில் முட்களை போட்டு விட்டு வருவாள் , நபியின் குடும்பம் மிதித்து வேதனை அடைய வேண்டும் என்று , தொடர்ந்து செய்வாளாம் .

வார்த்தை விளக்கம் –

தப்பத் – அழிந்து விட்டது , நிலைகுலைந்து விட்டது , இனி உபயோகம் இல்லை , அதிக வேதனை , அணு அணுவாக , படிப்படியாக , கொஞ்சம் கொஞ்சமாக அழிவது , கடும் மோசமான நிலையை அடைவது .........

-    இந்த வசனம் இறங்கிய பின் இரு கைகளையும் அபு லஹப் வெளியே எடுத்து ஏளனமாக கூறுவானாம் ...

-    அல்லாஹ் முழு உத்திரவாதம் கொடுத்து , gurantee செய்து இறந்த காலத்தில் சொல்கிறான் ( அழிந்து விட்டது என்று ) .

யதா – இரு கைகள் –

மறைமுகமாக கொண்டுள்ள பொருள் -

-    நபிகளை இரு முறை சபித்தான் 
-    2 கை – துனியாஹ் – மார்க்கம் இரண்டிலும் தோல்வி
-    வலது கை தாக்கும் , இடது கை காக்கும் ... இவனுக்கு இரண்டுமே நாசமாகி விட்டது .
-    முழு உடம்பையும் குறிக்கும் அடையாள சொல் .

அபி லஹப் –

-    அவன் உண்மை பெயர் அப்துல் உஸ்ஸா (பொய்யான பெயர்) – அனைவரும் அல்லாஹ்வின் அடிமை என்பது தான் உண்மை .அதனால் அல்லாஹ் அந்த பெயரை சொல்லவில்லை .
-    நெருப்பின் தந்தை , நெருப்பிலேயே தண்டிக்கப்படுவான் ... பெயரின் அர்த்தமே இதன் பின் மாறி விட்டது ....

தப்ப – நாசமாகி விட்டான் .

-    அல்லாஹ் வின் வார்த்தை உண்மையாகி விட்டது – மோசமான நோய் தாக்கி – தோல் வியாதி வந்து  உடல் முழுவதும் படறி பரிதாபமாக கிடந்தான் . பயத்தில் யாருமே அவன் அருகில் செல்லவில்லை , மனைவி , மக்கள் உட்பட .

மா – ஆணித்தரமாக சொல்வது – செல்வம் பயன் தரவே தராது .

-    குறைசிகளின் பெரிய பலம் அவர்களது சொத்து என்று நம்பினார்கள் , அந்த நம்பிக்கையை  அல்லாஹ் உடைத்துவிட்டான் .

கசப்  -  பிள்ளைகள் என்பதை குறிக்கிறது . அவன் இறந்த பின் அவனை அடக்கம் செய்ய யாரும் வரவில்லை , பிள்ளைகளும் . அப்படியே கிடந்தான் . பின் அபிசினியாவில் இருந்து ஆட்களை அழைத்து வந்து குச்சியால் தள்ளி அடக்கம் . பிள்ளைகளும் பயன் அளிக்கவில்லை .

-    அபு லஹப் இரண்டு விஷயங்களில் அகங்காரம் கொண்டு இருந்தான் தோற்றம் , சொத்து இரண்டுமே அழிந்து விட்டது .

-    மூன்றாம் நபரை சொல்வது போல் அல்லாஹ் சொல்ல காரணம் – மோசமான காபிர்களை அல்லாஹ் இப்படி தான் குறிப்பிடுகிறான் . கொஞ்சமும் மதிப்பு கொடுக்க விரும்பவில்லை .

இனி வரும் வசனங்கள் மறுமையை குறிக்கிறது ........ எதிர் காலம் .

அடுத்த இரண்டு வசனம் மனைவியை குறிப்பிடுகிறது .

-    வம்ர அத்துஹு - தண்டனையிலும் இருவரையும் இணைத்தே சொல்கிறான் .
-    ஹம்மாலதல்- தொடர்ந்து விறகு சுமப்பவள் – தொழில் . மட்டமான தொழிலாக அவள் கருதினால் , அல்லாஹ் இவளை இழிவு படுத்திவிட்டான் .

-    எதனால் நபியை எதிர்த்தால் இது தான் கதி .

-    நரகில் சுமந்து  , கணவனுக்கு எரிபொருளை இவளே கொண்டு சென்று , அவன் வேதனையை அதிக படுத்துகிறாள் .

-    ஹதப் – காய்ந்த விறகை குறிக்கிறது . விரைவில் பற்றி கொள்ளும் . இப்படி குறிப்பிட காரணம் -   துனியாவில் நபியை பற்றி கோல் , புறம் , பஸாத் சொல்லி பரப்புவாள் , அவள் சொல்லும் விதம் , வார்த்தை பயங்கரமாக காட்டு தீ போல் பரவும் ...நபிக்கு எதிராக கவிதையும் பாடினாள் .

பிஈ – ஜிதிஹா – அவளுடைய கழுத்தில் – நிளமான அழகிய கழுத்து – ஹப்ளும் – கயிறு – மசத் – ஈச்சம் பாளை – துனியாவில் –அழகான necklace , விலை உயர்ந்த முத்து , பவளம் , நபியை காணும்போது அந்த necklace இறுக்க பிடித்து சொல்வாள் – உஸ்ஸா மீது சத்தியமாக இதை விற்று நபிக்கு எதிராக செலவு செய்து நபியின் மேல் உள்ள குரோதத்தை தீர்த்து கொள்வேன் என்று கூறுவாள் . அதற்க்கு தண்டைனையை அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்கிறான் .

அல்லாஹ் குர் ஆனில் – 4 பெண்களை சொல்கிறான் .

அற்புதமான பெண்மணி – அற்புதமான காப்பாளர் – மர்யம் அலை   - ஜகரியா அலை .
அற்புதமான பெண்மணி – மோசமான துணை  - ஆசியா – பிர் அவ்ன் .
மோசமான பெண்கள் – அற்புதமான துணைகள் – லூத் நபி,நூஹ் நபி – அவர்களின் மனைவிகள்.
மோசமான பெண் – மோசமான துணை – உம்மு ஜமீல் – அபு லஹப் ........


இனி நாம் என்ன செய்யலாம் – HOME WORK –

-    வார்த்தைக்கு வார்த்தை படித்தல்

1.       அபு லஹப் – உம்மு ஜமீல் – இயற்பெயர் – புனை பெயர் பொருள் எழுதுக
2.       இவர்கள் இருவரின் குடும்ப உறவை சுருக்கமாக எழுதுக
3.       அபு லஹப் – நபிக்கும் என்ன உறவு முறை
4.       நபிக்கு அபு லஹப் கொடுத்த இடைஞ்சல்களில் இரண்டை எழுதுக
5.       அல்லாஹ் இந்த ஸுராஹ் வில் இறந்த காலத்தில் ஏன் சொல்கிறான் , எங்கு எல்லாம் சொல்கிறான்
6.       பிள்ளைகள் ஏன் பயனளிக்கவில்லை
7.       அபு லஹப் அகங்காரம் கொண்ட விஷயங்கள் எது ? உம்மு ஜமீல் கவுரவமாக கருதிய பொருள் எது  . அதற்க்கு அல்லாஹ் கொடுத்த தண்டனை .
8.       உம்மு ஜமீல் நபிக்கு கொடுத்த துன்பம் என்ன – அதற்கு அல்லாஹ் சொல்லும் தண்டனை .
9.       அவளது தொழிலாக அல்லாஹ் எதை சொல்கிறான் –
10.    அல்லாஹ் குர் ஆனில் கூறும் நான்கு பெண்கள் யார் .

வஸ்ஸலாம் .

 

No comments:

Post a Comment