بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ
الرَّحِيمِ
அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதரிகளே.......
என்ன படித்தோம் ......
v கிராஆத் - சகோதரி ஷிபா -ஸுராஹ் காபிருன் –
v ஸுராஹ் லஹப் சிறு குறிப்பு
v ஸுராஹ் லஹப் வா / வா பொருள் + வா / வா விளக்கம் - சகோதரி ரினோசா
v ஸுராஹ் லஹப் தப்சீர் – சகோதரி சாய்ரா .
v கதிஜா ரலி வரலாறு – சகோதரி யாஸ்மின் .
v துஆஹ் மனனம் – நபிகள் பிரார்த்தனை - பாதுக்காவல் - துஆஹ் .
v அஸ்மா உல் ஹுஸ்னா – 41 – 45
விளக்கம்
–
-
மக்கி ஸுராஹ் .
-
சிறிய ஸுராஹ் களில் ஒன்று
அபூ லஹப் -
-
அபூ லஹப் மற்றும் அவன் மனைவியையும்
மட்டும் சபித்து இறங்கிய ஸுராஹ்
-
மற்ற யாரையும் பெயர் கூறி தண்டனையை சொல்ல வில்லை - நபியின் பெரிய தந்தை
- பிரபலமான பணக்கார நபர் –
- பொருள் , புதையல் , சொந்து கணக்குக்கு செயலாளர்
- உண்மை பெயர் அப்துல் உஸ்ஸா
- புனை பெயர் அபூ லஹப் ( நெருப்பு / ஜுவாலை தந்தை)
- லஹப் - சிவப்பு தோற்றம் , சிவந்த தோல் , ஒளி தரும் அழகு
- உயர்ந்த வம்சம் , ஹாஷிமின் பேரர்
- நபியின் இரண்டு மகள்களை,அபூ லஹபின் 2 மகன்கள் , திருமணம் செய்து இருந்தார்கள்
அவன் செய்த தீமைகள் , நபிக்கு கொடுத்த கஷ்டங்கள் ....
-
நபியின் அண்டை வீடு – ஓதும் போது , வணக்கும் போது , சமைக்கும் போது குப்பை ,
நஜீச்களை கொட்டுவான்
-
மகன்களை விவாகரத்து செய்ய வைத்தான் – இல்லையெனில் பேச மாட்டேன் என்று
மிரட்டினான் .- நபியின் மகன் காசிம் அவர்கள் இறந்தபோது , அபு லஹப் தெருவில் ஆடி , பாடி , நபியின் வம்சம் துண்டித்து விட்டது என்று மகிழ்ந்தான், பேரன் இறந்துட்டான் என்பதை விட - நபி மேல் இருந்த குரோதம் .
-
அரபு வம்சம் , குலம் , கோத்திரம் , இரத்த பந்தம் ரொம்ப பேணி வாழ்வார்கள் ,
இரத்த உறவை அதிகமாக அனுசரிப்பார்கள் . இவன் அனைத்தையும் உடைத்துவிட்டான்
-
சபா மலையின் மீது ஏறி இரத்த உறவுகளுக்கு ஏகத்துவத்தை எடுத்து சொல்லும்போது
கடுமையாக எதிர்த்து நபியை சபித்தது அபு
லஹப் . market இடத்தில நபி லா இலாஹா இல்லலாஹ் சொல்லி வெற்றி அடையுங்கள் என்று
அழைத்த போதும் , நபியை பொய்யன் என்று கூறி , கல்லால் காலை காயப்படுத்தியதும் அபு
லஹப் .
-
அபு லஹப் மற்றும் அவன் மனைவிக்கு கிடைக்க போகும் தண்டனையை அல்லாஹ் இந்த ஸுராஹ்
வில் சொல்கிறான் .
-
சிலர் நபியை ஏற்கவில்லை – எதிர்க்கவும் இல்லை , சிலர் ஏற்கவில்லை மூர்க்கமாக
எதிர்க்கவும் இல்லை , சிலர் எதிர்த்து பின் ஏற்றனர் , சிலர் ஏற்காமல் உதவி
செய்தார்கள் .சிலர் ஏற்றுகொண்டார்கள் .
கடினமாக துன்பம் கொடுத்தது அபு
லஹப் – உம்மு ஜமீல் மட்டுமே ,
-
தொழுகையில் ஓதுவது தவறு இல்லை , நன்மைகளும் குறையாது .
அபு லஹப் மனைவி – உர்வாஹ் .
-
உமய்யாஹ் – பேத்தி – ( பிலால் ரலியை அடிமையாக வைத்து இருந்தவர் )
-
அபு ஸுப்யான் சகோதரி ( அபு ஸுப்யான் – ஹிந்தா வின் கணவர் )- status , குடும்பம் , குலம் கோத்திரம் பற்றியே பகட்டும் , பெருமையும் கொண்டவள் .
- புனை பெயர் உம்மு ஜமீல் – அழகின் அன்னை
- ஊரே வியக்கும் கணவன் – மனைவி
- நபி வீட்டின் வாசலில் இரவில் முட்களை போட்டு விட்டு வருவாள் , நபியின் குடும்பம் மிதித்து வேதனை அடைய வேண்டும் என்று , தொடர்ந்து செய்வாளாம் .
வார்த்தை விளக்கம் –
தப்பத் – அழிந்து விட்டது , நிலைகுலைந்து விட்டது ,
இனி உபயோகம் இல்லை , அதிக வேதனை , அணு அணுவாக , படிப்படியாக , கொஞ்சம் கொஞ்சமாக
அழிவது , கடும் மோசமான நிலையை அடைவது .........
-
இந்த வசனம் இறங்கிய பின் இரு கைகளையும் அபு லஹப் வெளியே எடுத்து ஏளனமாக கூறுவானாம்
...
-
அல்லாஹ் முழு உத்திரவாதம் கொடுத்து , gurantee செய்து இறந்த காலத்தில்
சொல்கிறான் ( அழிந்து விட்டது என்று ) .
யதா – இரு கைகள் –
மறைமுகமாக கொண்டுள்ள பொருள் -
-
நபிகளை இரு முறை சபித்தான்
-
2 கை – துனியாஹ் – மார்க்கம் இரண்டிலும் தோல்வி- வலது கை தாக்கும் , இடது கை காக்கும் ... இவனுக்கு இரண்டுமே நாசமாகி விட்டது .
- முழு உடம்பையும் குறிக்கும் அடையாள சொல் .
அபி லஹப் –
-
அவன் உண்மை பெயர் அப்துல் உஸ்ஸா (பொய்யான பெயர்) – அனைவரும் அல்லாஹ்வின் அடிமை
என்பது தான் உண்மை .அதனால் அல்லாஹ் அந்த பெயரை சொல்லவில்லை .
-
நெருப்பின் தந்தை , நெருப்பிலேயே தண்டிக்கப்படுவான் ... பெயரின் அர்த்தமே இதன்
பின் மாறி விட்டது ....
தப்ப – நாசமாகி விட்டான் .
-
அல்லாஹ் வின் வார்த்தை உண்மையாகி விட்டது – மோசமான நோய் தாக்கி – தோல் வியாதி
வந்து உடல் முழுவதும் படறி பரிதாபமாக
கிடந்தான் . பயத்தில் யாருமே அவன் அருகில் செல்லவில்லை , மனைவி , மக்கள் உட்பட .
மா – ஆணித்தரமாக சொல்வது – செல்வம் பயன் தரவே
தராது .
-
குறைசிகளின் பெரிய பலம் அவர்களது சொத்து என்று நம்பினார்கள் , அந்த
நம்பிக்கையை அல்லாஹ் உடைத்துவிட்டான் .
கசப் - பிள்ளைகள் என்பதை குறிக்கிறது . அவன் இறந்த
பின் அவனை அடக்கம் செய்ய யாரும் வரவில்லை , பிள்ளைகளும் . அப்படியே கிடந்தான் .
பின் அபிசினியாவில் இருந்து ஆட்களை அழைத்து வந்து குச்சியால் தள்ளி அடக்கம் .
பிள்ளைகளும் பயன் அளிக்கவில்லை .
-
அபு லஹப் இரண்டு விஷயங்களில் அகங்காரம் கொண்டு இருந்தான் தோற்றம் , சொத்து இரண்டுமே
அழிந்து விட்டது .
-
மூன்றாம் நபரை சொல்வது போல் அல்லாஹ் சொல்ல காரணம் – மோசமான காபிர்களை அல்லாஹ்
இப்படி தான் குறிப்பிடுகிறான் . கொஞ்சமும் மதிப்பு கொடுக்க விரும்பவில்லை .
இனி வரும் வசனங்கள் மறுமையை குறிக்கிறது ........
எதிர் காலம் .
அடுத்த இரண்டு வசனம் மனைவியை குறிப்பிடுகிறது .
-
வம்ர அத்துஹு - தண்டனையிலும் இருவரையும் இணைத்தே சொல்கிறான் .
-
ஹம்மாலதல்- தொடர்ந்து விறகு சுமப்பவள் – தொழில் . மட்டமான
தொழிலாக அவள் கருதினால் , அல்லாஹ் இவளை இழிவு படுத்திவிட்டான் .
-
எதனால் நபியை எதிர்த்தால் இது தான் கதி .
-
நரகில் சுமந்து , கணவனுக்கு எரிபொருளை
இவளே கொண்டு சென்று , அவன் வேதனையை அதிக படுத்துகிறாள் .
-
ஹதப் – காய்ந்த விறகை குறிக்கிறது . விரைவில் பற்றி
கொள்ளும் . இப்படி குறிப்பிட காரணம் - துனியாவில் நபியை பற்றி கோல் , புறம் , பஸாத் சொல்லி
பரப்புவாள் , அவள் சொல்லும் விதம் , வார்த்தை பயங்கரமாக காட்டு தீ போல் பரவும் ...நபிக்கு
எதிராக கவிதையும் பாடினாள் .
பிஈ –
ஜிதிஹா – அவளுடைய கழுத்தில்
– நிளமான அழகிய கழுத்து – ஹப்ளும்
– கயிறு – மசத் – ஈச்சம்
பாளை – துனியாவில் –அழகான necklace , விலை உயர்ந்த முத்து , பவளம் , நபியை
காணும்போது அந்த necklace இறுக்க பிடித்து சொல்வாள் – உஸ்ஸா மீது சத்தியமாக இதை
விற்று நபிக்கு எதிராக செலவு செய்து நபியின் மேல் உள்ள குரோதத்தை தீர்த்து
கொள்வேன் என்று கூறுவாள் . அதற்க்கு தண்டைனையை அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்கிறான் .
அல்லாஹ் குர் ஆனில் – 4 பெண்களை சொல்கிறான் .
அற்புதமான பெண்மணி – அற்புதமான காப்பாளர் –
மர்யம் அலை - ஜகரியா அலை .
அற்புதமான பெண்மணி – மோசமான துணை - ஆசியா – பிர் அவ்ன் .மோசமான பெண்கள் – அற்புதமான துணைகள் – லூத் நபி,நூஹ் நபி – அவர்களின் மனைவிகள்.
மோசமான பெண் – மோசமான துணை – உம்மு ஜமீல் – அபு லஹப் ........
இனி நாம் என்ன செய்யலாம் – HOME WORK –
-
வார்த்தைக்கு வார்த்தை படித்தல்
1. அபு லஹப் – உம்மு ஜமீல் – இயற்பெயர் – புனை
பெயர் பொருள் எழுதுக
2. இவர்கள் இருவரின் குடும்ப உறவை சுருக்கமாக
எழுதுக 3. அபு லஹப் – நபிக்கும் என்ன உறவு முறை
4. நபிக்கு அபு லஹப் கொடுத்த இடைஞ்சல்களில் இரண்டை எழுதுக
5. அல்லாஹ் இந்த ஸுராஹ் வில் இறந்த காலத்தில் ஏன் சொல்கிறான் , எங்கு எல்லாம் சொல்கிறான்
6. பிள்ளைகள் ஏன் பயனளிக்கவில்லை
7. அபு லஹப் அகங்காரம் கொண்ட விஷயங்கள் எது ? உம்மு ஜமீல் கவுரவமாக கருதிய பொருள் எது . அதற்க்கு அல்லாஹ் கொடுத்த தண்டனை .
8. உம்மு ஜமீல் நபிக்கு கொடுத்த துன்பம் என்ன – அதற்கு அல்லாஹ் சொல்லும் தண்டனை .
9. அவளது தொழிலாக அல்லாஹ் எதை சொல்கிறான் –
10. அல்லாஹ் குர் ஆனில் கூறும் நான்கு பெண்கள் யார் .
வஸ்ஸலாம் .
No comments:
Post a Comment