بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
18/2/15.அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதரிகளே.......
என்ன படித்தோம் ......
v ஸுராஹ் கத்ர் கிராஆத் - சகோதரி சப்ரினா .
v ஸுராஹ் மாவூன்
சிறு குறிப்பு
v ஸுராஹ் மாவூன் வா / வா பொருள் + வா / வா விளக்கம்- சகோதரி ரினோசா
v ஸுராஹ் மாவூன் தப்சீர் – சகோதரி சாய்ரா . .
v நபிகள் நாயகம் வரலாறு அழைப்பு பணியின் தொடக்கம் -சகோதரி
யாஸ்மின் .
v துஆஹ் மனனம் –ஆபத்தில் இருந்து
பாதுகாப்பு - துஆஹ்
விளக்கம் :-
மக்கீ / மதனி – ஸுராஹ் , 7 வசனங்கள் கொண்டது .
முதல் 3 வசனங்கள் மக்காவில் இறக்கப்பட்டதாகவும் .,
கடைசி வசனங்கள் மதீனாவில் இறக்கப்பட்டு இருக்காலாம் என்று மார்க்க அறிஞ்ர்கள்
கருதுகிறார்கள் .
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
நீர் பார்த்தீரா – நபியை கவுரப்படுத்துகிறான் ,
மற்றோரை தாழ்ந்தோரிலும் தாழ்த்தோர் ஆக ஆக்குகிறான் .
தீர்ப்பு நாள் கிடையாது , நாம் செய்வதை செய்யலாம் , இங்கு செய்யும் தீமைக்கு
, நன்மைக்கு கூலி என்று கிடையாது என்று பொய்பித்தனர் , நாம் செய்யும்
அனைத்துக்கும் தீர்ப்பு நாளில் ( ஒரு நாள் – பிள்ளை – பயந்து ) அந்த நாளில் பலன்
கிடைக்கும் என்று பயந்தே நாம் நன்மையான விஷயங்கள் செய்வோம் ... ஆனால் அதை பொய்பிக்கிறவர்கள்
.........
فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
வெளியே வீசுகிறான் , விரட்டி அடிக்கிறான் ,
முடிந்த அளவு துரத்துகிறான் , ஏன் ? மறுமை பயம் இல்லை , மறுமை சிந்தனை இல்லை ,
நன்மை , தீமை பற்றி எண்ணம் இல்லை .
அனாதைகள் – மற்ற பிள்ளைகளை விட அதிகப்படி
அன்பும் , கருணையும் செலுத்துவோம் .... இரக்கம் காட்டுவோம் , தப்பே செய்து
இருந்தாலும் தண்டிக்க மனம் வராது . ( தந்தை – வெளியூர் , பிள்ளைகள் அதிக செல்லம் )
ஆனால் , இவன் விரட்டுகிறான் ........
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
பணம் , உடை அனைத்தையும் விட உணவு முக்கியமானது ,
பசித்தவர்களை பார்த்தாலே மனம் உருகும் .... ஆனால் இவன் தானும் செய்யாமல் ,
அடுத்தவர்களையும் செய்ய துண்டுவதில்லை.
சுவனவாசிகளின் தன்மை - ஏழைகளுக்கு உணவளிப்பார்கள் .(
ஸுராஹ் – 76
வசனம் 5 – 11)
நரகவாசிகளின் தன்மை – ஏழைகளுக்கு உணவளிப்பதில்லை
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ
முன் சென்ற வசனங்களுக்கும் , இனி வர
வசனங்களுக்கும் பொதுவான ஒரு வசனம் இது ...
முஸ்ரிகீன்கள் பற்றி முன் 3 வசனங்கள் சொல்வதால் ,
இது அவர்கள் வணங்கும் முறையை குறிக்கிறது என்று அறிஞ்ர்கள் குறிப்பிடுகிறார்கள் ....
கை தட்டி , ஆட்டம் போட்டு , நிர்வாணமாக சிலைகளுக்கு வழிபாடு செய்து இது தான்
வணக்கம், இதை இறைவன் ஏற்பான் என்று இருந்தனர் , அப்படி வணங்குபவர்களுக்கு கேடு
தான் என்று ஒரு பொருள் தருகிறது .......
அடுத்த வசனத்தோடு படிக்கும் போது முமீன்களை
குறித்தும் இது அல்லாஹ் சொல்கிறான் என்று அறிஞ்ர்கள் சொல்கிறார்கள் ...
الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
இதில் அனைத்து மூமீன் , முஸ்லிம் களும்
சிந்திக்க வேண்டிய விஷயம் , இறைவன் இதில் FI فِي (தொழுகை யில் ) என்று சொல்லாமல் .. AN அன் عَن ( தொழுகையை விட்டு ) என்று சொன்னது , தொழுகையில்
நடக்கும் தவறு , மறதிக்கு ரப் சஜ்தா சஹ்வ் செய்ய சொல்கிறான் , மன்னிக்கிறான் ....
( அல்ஹம்துலில்லாஹ் , இல்லை என்றால் நம் அனைத்து தொழுகையும் – கேடு ..... ) சரியான
தொழுகை ஒரு ஆளின் குணத்தை மாற்றும், கண்ணியம் , பணிவு என்று பல விஷயங்கள்
கிடைக்கும் , அடுத்தவர்களை மன்னிக்க, கண்ணியம், மரியாதை கொடுக்க வைக்கும் ....
தொழுகையை விட்டு , தொழுகையை பற்றி - பாராமுகமாக , அலட்சியமாக , பொடுபோக்காக இருப்பார்கள் .... தொழுகையை மிக தாமதமாக கடமையே
என்று செய்வார்கள் , தொழுகையை விட மற்ற விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்
, தொழுகையிலும் அதை நினைத்து அவசரமாக முடிப்பார்கள் , ருக்கு , சஜ்தா சரிவர பூர்த்தி
செய்ய மாட்டார்கள் .தொழுகையை தவற விட்டாலும் அதை ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள் ....அவசரமாக
தொழுது அதில் மறந்தாலும் சஜ்தா சஹ்வ் செய்யலாம் என்று அதை அலட்சியமாக கருதுவார்கள்
.
முதல் வசனம் – இதற்கும் லிங்க் – மறுமையை
பயப்படுகிறவர்கள் , நம்புகிறவர்கள் தொழுகையை சரிவர பேணி , அழகிய முறையில்
நிறைவேற்றுவார்கள்.
மறுமையை பொய்ப்பிக்கிறவர்கள் – தொழுகையிலும்
அலட்சியமாக இருப்பார்கள் , மறுமை பயம் இல்லை .
الَّذِينَ هُمْ يُرَاءُونَ
பிறர் புகழ வேண்டும் என்று தொழுவது , பிறர் பார்க்கிறார்கள்
என்று அழகாக அமல் செய்வது
அல்லாஹ் வை விட மற்றவருக்கு முக்கியத்துவம்
கொடுப்பது , பிறர் பார்த்து மற்றவர்களிடம் தம்மை பற்றி புகழ்த்து சொல்லவேண்டும்
என்று செய்வது , பள்ளியில் / அலுவலகத்தில்
அனைவரும் இருக்கிறார்கள் என்று செய்வது ... இது சிறிய வகை ஷிர்க் / மறைவான ஷிர்க் கில் சேரும் என்று போன
வகுப்புகளில் படித்தோம் ... அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக .... அது குறித்து ஹதீஸ் .....
அல்லாஹ்வை
திருப்திபடுத்தவேண்டுமென்ற நோக்கமில்லாது பிறர் புகழ்வேண்டும், பாராட்டவேண்டும், மதிக்கவேண்டும்
என்ற நோக்கத்துடன் செய்யப்படும் வணக்க வழிபாடுகளுக்கு ‘ரியா’ (முகஸ்துதி) சிறிய இணை வைத்தல் என்று
பெயராகும்.
மறைவான
ஷிர்க் (இணைவைத்தல்)என்பது அல்லாஹ் விதித்துள்ள கட்டளைகள் மீது திருப்தி கொள்ளாது
அலட்சியம் காட்டுவதாகும். மஹ்மூத் பின் லபீத்
அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர்; அவர்கள் சொன்னார்கள். ‘நான்
உங்கள் விஷயத்தில் மிகவும் அச்சப்படுவது சிறிய இணைவைப்பைப் பற்றித் தான். சிறிய இணைவைப்பு என்றால்
என்ன அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்ட போது, அவர்கள்
‘ரியா” என்று
பதிலளித்தார்கள். ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்
இதற்கு
பின்வரும் நபிமொழி ஆதாரமாகும்.
இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
‘நிலவில்லாத ஓாிரவின் நடுவில், கருமை நிறப் பாறையில் ஊர்ந்து செல்லும் எறும்பை விடப் புலப்படாத ஒன்றாக அது அமைந்துள்ளது.” ஆதாரம்: தஃப்ஸீர் இப்னு கதீர். (உடனே) நபித்தோழர்கள் இவ்வித மறைவான இணைவைத்தலிலிருந்து எவ்வாறு (நம்மை) காப்பது எனக் கேட்டபோது, பின்வரும் துஆவை நபி(ஸல்), அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
‘நிலவில்லாத ஓாிரவின் நடுவில், கருமை நிறப் பாறையில் ஊர்ந்து செல்லும் எறும்பை விடப் புலப்படாத ஒன்றாக அது அமைந்துள்ளது.” ஆதாரம்: தஃப்ஸீர் இப்னு கதீர். (உடனே) நபித்தோழர்கள் இவ்வித மறைவான இணைவைத்தலிலிருந்து எவ்வாறு (நம்மை) காப்பது எனக் கேட்டபோது, பின்வரும் துஆவை நபி(ஸல்), அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
இன்ஷா அல்லாஹ் இந்த துஆஹ்வை அடுத்த வகுப்பில்
மனனம் செய்வோம் ....
மேலும் .....
இருண்ட இருளில் கறுப்புக் கல்லில்
ஒரு கறுப்பு எறும்பு ஊர்ந்து செல்வதை விட இணைவைப்பு மிகவும் மறைவானது “ இந்த நாய்
இல்லாவிட்டால் கள்வர்கள் நுழைந்துதிருப்பார்கள். “ நீயும் இறைவனும் நாடினால் “
இம்மனிதன் இருந்திருக்காவிட்டால் “ போன்ற இத்தகையப் பிரயோகங்கள் அனைத்தும் இணைவைப்பேயாகும்...
( இப்னு அபீஹாதிம் )
அபுஸையீத்
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த
போது, எங்களிடையே
அல்லாஹ்வின் தூதர்; வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை
விட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தொிவிக்கவா? அது
மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்.) ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை
உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்காித்துக்
கொள்கிறார்.” என்று கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா
وَيَمْنَعُونَ الْمَاعُونَ
மாவூன் – பொருள் 1 - சில அறிஞ்ர்கள் இதை 2.5 %
சகாத் கொடுப்பதையும் குறிக்கும் என்று கருதுகிறார்கள் . மொத்த சொத்தில் 2.5 %
என்பது மிக சிறிய ஒரு தொகையே அதையும் கொடுக்க மாட்டார்கள் என்றும் ஒரு பொருள் .
2- மிக மிக அற்பமான பொருள் , மா அ னா – மிதந்து
கிடக்கும் பொருள்கள் ... இதை அடுத்தவர்க்கு கொடுப்பதால் கொடுபவர்க்கு எந்த
பாதிப்பும் , சிறு மாற்றமும் இருக்காது .....ஆனால் வாங்குப்பவருக்கு அது பெரும்
உதவியாக இருக்கும் .
வீடு எங்கும் இறைஞ்சி கிடக்கும் பொருள் – சிறிய
பென்சில் , ரப்பர் போன்ற பொருள்கள் .
அண்டை வீட்டாருக்கும் , மற்றவருக்கும் கொடுக்க
மாட்டார்கள் , அதன் முலம் அவர்கள் முகத்தில் வரும் சந்தோசத்தை , சிரிப்பை பார்க்க ஆசை
கூட பட மாட்டார்கள் . பகிர்வதால் உறவு பலப்படும் , அன்பு வளரும் , மறுமையில் கூலி
கிடைக்கும் ... ஆனால் அவர்கள் மறுமையை , கூலியை பொய்ப்பிகிறார்கள் .
யாரேனும் தண்ணீர் கேட்டால் மறுக்காமல் கொடுப்பது
சிறந்தது ..
இதில்
-
அனாதைகளை விரட்டுவார்கள்
-
ஏழைகளுக்கு உணவளிக்க மாட்டார்கள்
-
தொழுகையை அலட்சியம் செய்வார்கள்
-
பிறருக்கு காட்ட தொழுவார்கள்
-
அற்ப பொருளை கொடுக்கமாட்டார்கள் என்று
தீர்ப்பு நாளை போய்ப்பிகிறவர்கள்
பற்றி சொல்லி இருந்தாலும் , மறுமையை நம்பும்
மக்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளது ........ அல்லாஹ் நம் அனைவரையும்
பாதுகாப்பானாக ...... ஆமீன் ......
இனி நாம் என்ன செய்யலாம் .... HOME
WORK …. சுருக்கமாக புரிந்ததை எழுதினால் போதுமானது ........
1. வா / வா பொருள் WHATSAPP அனுப்பவும் .
2.
யாரை “பார்த்தீரா” என்று நபியிடம் அல்லாஹ் கேட்கிறான்.
3. அவன் எப்படிப்பட்டவன் என்று அல்லாஹ் சொல்கிறான்
4. சுவனவாசிகளின் தன்மை என்ன?
5. 4 வது வசனம் யாரை குறிப்பிடுகிறது?
6. தொழுகையில் ஏற்படும் மறதி / தவறுக்கு நாம் என்ன
செய்ய வேண்டும்
7. மறைவான ஷிர்க் எப்படி இருக்கும் .
8. மறைவான ஷிர்க்கின் அரபு சொல் என்ன .
9. மாவூன் இரு பொருள்
10. ஸூரத்துத் தஹ்ர்
(காலம்)- வசனம் 5 – 11 , WHATSAPP ல் தமிழ் மொழிபெயர்ப்பை குர்ஆன் னை பார்த்து வாசிக்கவும் .
வஸ்ஸலாம் .... ஜசாக் அல்லாஹு ஹைரன் .
No comments:
Post a Comment