Friday, February 13, 2015

வகுப்பு 7 - ஸுராஹ் நஸ்ர் .



بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
29/01/15.
அஸ்ஸலாமு அழைக்கும்  அன்பு சகோதரிகளே.......
என்ன படித்தோம் ......

v  சகோதரி கதிஜா ஜாஸ்மின் -  ஸுராஹ் தீன் – கிராஆத் -  
v  ஸுராஹ் நஸ்ர்  சிறு குறிப்பு
v  ஸுராஹ் நஸ்ர்  வா / வா பொருள் + வா / வா விளக்கம்   -  சகோதரி ரினோசா
v  ஸுராஹ் நஸ்ர் தப்சீர் – சகோதரி சப்ரினா . 
v  சீராஹ் RECAP
v  துஆஹ் மனனம் – நபிகள் பிரார்த்தனை – ருக்கூ  - துஆஹ் .
v  அஸ்மா உல் ஹுஸ்னா – 41 – 45

விளக்கம் -

மதீனாவில் அருளப்பட்டது . 3 வசனங்கள் கொண்டது . ஹஜ்ஜதுல் விதா விற்கு பின் இறங்கப்பட்டது . பிரியாவிடை ஸுராஹ் . ( ஸுராஹ்          ) இந்த ஸுராஹ் இறங்கிய 3 மாதங்கள் பின் நபி மரணம் ( இன்னா லில்லாஹி ........... ) கடைசியாக முழுமையாக இறக்கப்பட்ட ஸுராஹ் .

             إِذَا جَاءَ                    வரும்போது . strongஅ , அழுத்தி  சொல்வது . ( கியாமத் நாள் , சூர் ஊதப்படும் என்பதற்கும்  – இதே வார்த்தை )

    نَصْرُ اللَّهِ      அல்லாஹ்வின் உதவி . மிக பெரிய உதவி , நமது வாழ்நாள் இலக்கை அடைய கூடிய அளவிற்கு நமக்கு உதவுவது .  கடும் எதிரிகளை சமாளிக்க உதவுவது ( காய்ந்த பூமியை உயிர் கொடுத்து உதவுவது போல் )

     وَالْفَتْحُ     வெற்றியும் , உதவி செய்து மிக பெரிய வெற்றியை நபிக்கு கொடுத்தான் .அது தான் பதஹு மக்காஹ் – மக்காஹ் வெற்றி – திறந்த வெற்றி ( open victory ) . அனைத்து தடைகளையும் உடைநத்து மிக பெரிய வெற்றி .

-         அதிக சேதம் இல்லாத வெற்றி
-         உடமை , மக்கள் பறிக்கப்படவில்லை
-         ஆட்டம் , பாட்டம் , கொண்டாட்டம் இல்லாமல் , அல்லாஹ்வை மட்டுமே போற்றி , துதி செய்து கொண்டு இருந்தார்கள் . சுப்ஹான் அல்லாஹ்

وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا

                       أَفْوَاجًا                        கூட்டம் , கூட்டமாக , கோத்திரம் , கோத்திரமாக இஸ்லாத்தில் பால் நுழைகிறார்கள் , அதுவரை ரசசியமாக தனி தனியே கலிமா சொன்னார்கள் ,  ஏன் ? பகிரங்கமாக ஏற்றால் குறைசியர்கள் தாக்க கூடும் , அவர்கள் தாக்குவார்கள் என்று அச்சம்... ஆனால்  இப்போது அப்வாஜா – கூட்டம் கூட்டமாக . தடைகள் இல்லை ... அரபியே தீபக்கற்பமே மாறியது ....700 பேர் எமன் நாட்டில் இருந்து இஸ்லாத்தை ஏற்று , கற்று தங்கள் ஊருக்கு சென்று பெரும் கூட்டதையே இஸ்லாத்தில் அழைத்து வந்தார்கள் . பெரும் மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள்.

   فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا

அதை பார்த்து அல்லாஹ் அவனை புகழ்ந்து துதிக்க சொல்கிறான் .... ஏன் ? அவன்  அல்லாது இந்த வெற்றியை யாரும் தர முடியாது ... இஸ்லாத்தை முழுமை படுத்தி விட்டான் ..... எவ்வித சந்தேகமும் இல்லாமல் பரிபூரண படுத்தி விட்டான் .

அதனால் , அவனை துதி செய்து புகழ்ந்து பாவ மன்னிப்பு கோர சொல்கிறான் .... இந்த வெற்றியில் அறியாமல் நடந்து இருக்கும் தவறை மன்னிக்க .. இதை செய்ய சொல்கிறான் , அவனுக்கு பிடிக்காத பகட்டு , ஆட்டம் பெருமை இல்லாமல் அவனுக்கு பிடித்த மாதிரி வெற்றி இருக்க வேண்டும் என்று இப்படி செய்ய சொல்கிறான் ...... அடக்கத்தையும் , பணிவையும் கற்று கொடுக்கிறான் .... இந்த வெற்றியின் முலம் அவர்கள் மனதில் எவ்வித பெருமையும் வந்து விட கூடாது என்றும் இப்படி செய்ய சொல்கிறான் . அதன்படியே நபியும் அவர்களது ஒட்டகத்தில் அமர்த்த படி தலையை தாழ்த்தி , அல்லாஹ்விற்கு சிரம் பணிந்த வாறு , அவனிடம் சரண் அடைத்தவர்களாக மக்காவில் நுழைகிறார்கள் ....

இந்த ஸுராஹ் இறங்கிய உடன் அபூபக்கர் ரலி அழுகிறார்கள் ... ஏன் ? இஸ்லாம் முழுமை அடைந்து விட்டது , பெரும் வெற்றி இறைவனிடம் இருந்து கிடைத்து விட்டது , மக்கள் பெரும் கூட்டமாக இஸ்லாத்தின் பால் வருகிறார்கள் இதற்கா ? , இதையும் தாண்டி இந்த ஸுராஹ் வின் உள் கருத்தை அவர்கள் அறிந்தார்கள் ... அது ..... நபிகளின் பணி முடிவடைந்து விட்டது , இனி அவர்கள் இறுதி நாள் வந்து விட்டது , அவர்கள் வருகை நிறைவு பெற்று விட்டது , இனி அவர்கள் துனியா வாழ்வு விரைவில் முடிவடைய போகிறது என்பதை அவர்கள் அறிந்தார்கள் ..

நபி மக்காவை விட்டு செல்லும்போது , மிகவும் வேதனை , வருத்தத்தோடு செல்கிறார்கள் ... அல்லாஹ் ஸுராஹ் கசஸ் , 28 ஆம் வசனத்தை இறக்கி நபிக்கு வாக்குறுதி கொடுக்கிறான்  ,

28:85   إِنَّ الَّذِي فَرَضَ عَلَيْكَ الْقُرْآنَ لَرَادُّكَ إِلَىٰ مَعَادٍ ۚ قُل رَّبِّي أَعْلَمُ مَن جَاءَ بِالْهُدَىٰ وَمَنْ هُوَ فِي ضَلَالٍ مُّبِينٍ

28:85. (நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்” என்று நீர் கூறுவீராக.

சுப்ஹான் அல்லாஹ் 8 ஆண்டுகளில் நபியை அவர்கள் பிறந்த இடம் , அல்லாஹ்வின் இல்லம் இருக்கும் இடமானா மக்கஹ்விற்க்கே பெரும் வெற்றியை கொடுத்து அழைத்து வந்துவிட்டான் .அது தான் பதஹ் மக்காஹ் .

குறைஷிகள் இஸ்லாத்தின் பால் வர மற்றுமொரு காரணம் – நபிகள் உண்மையான இறை தூதர் இல்லை என்றால் ( நவுதுபில்லாஹ் ) அல்லாஹ் அவர்களை மக்காவில் உள்ளே அனுமதிக்க மாட்டான் என்று நம்பிக்கை வைத்து இருந்தார்கள் ..... அப்ரஹா விற்கு அல்லாஹ் கொடுத்த தண்டனை மற்றும் அழிவை பார்த்தால் ... தப்பான நபரை அல்லாஹ் அனுமதிக்க மாட்டான் என்று எண்ணினார்கள் ... ஆனால் நபி பணிந்து உள்ளே சென்று எதுவும் ஆகாததை பார்த்து . நம்பிக்கை கொண்டார்கள் .

இஸ்ஸுராஹ் இறங்கிய பின் நபிகளார் அவர்கள் கடைசி காலம் வரை , அதிகமாக இந்த துஆஹ் வை ஓதி வந்தார்கள் ...

பார்க்க துஆஹ் – 10 .

இனி நாம் என்ன செய்யலாம் .... HOME WORK …..

1.       வார்த்தைக்கு வார்த்தை படித்து – WHATSAPP அனுப்புதல்
2.       இந்த ஸுராஹ் எதற்கு பின் இறங்கியது .
3.       பிரியாவிடை அரபு பொருள் .
4.       இந்த ஸுராஹ் இறங்கிய பின் நடந்த துக்கமான சம்பவம்
5.        نَصْرُ اللَّهِ  எப்போது வந்தது ?
6.       யாருக்கு எதிராக போராடி வெற்றி கிடைத்தது .
7.       இந்த வெற்றிக்கு காரணம் யார் ? இந்த வெற்றியின் சிறப்பு என்ன .
8.       வெற்றிக்கு பின் நடந்த மகிழ்ச்சியான சம்பவம் என்ன.
9.       இந்த வெற்றியை அல்லாஹ் எவ்வாறு கொண்டாட சொல்கிறான் ?
10.    ஏன் அப்படி கொண்டாட சொல்கிறான் ?
11.    இந்த ஸுராஹ் இறங்கிய பின் அழுத சஹாபி யார் ? காரணம்
12.    நபி மக்காஹ்விற்குள்  எப்படி நுழைகிறார்கள்?
13.    ஹிஜ்ரத் செய்து எத்தனை ஆண்டுகளுக்கு பின் அல்லாஹ் நபியை மீண்டும் மக்காஹ்விர்க்கு அழைத்து வந்தான்?
14.     ஹிஜ்ரா சம்பந்தமாக அல்லாஹ் வாக்குறுதி தரும் “”” ஸுராஹ் வசனம் “”” .
15.    வகுப்பில் கொடுக்கப்பட்ட வார்த்தைகளுக்கு - வேர் சொல் எழுதுக

-        الْفَتْحُ

-        يَدْخُلُونَ

-        فَسَبِّحْ

-        بِحَمْدِ

-        وَاسْتَغْفِرْهُ

-        تَوَّابًا

ஜசாகல்லாஹு ஹைரன்
வஸ்ஸலாம் .

 

 

No comments:

Post a Comment